அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வியாழன், நவம்பர் 10, 2011

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் சமூக நீதி மாநாடு - கலந்தாய்வு கூட்டம்

கோவை,  
வருகிற நவம்பர் 26, 27 இல் டெல்லியில் வைத்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் சார்பாக சமூக நீதி மாநாடு நடைபெற உள்ளது  அதனை முன்னிட்டு  கோவை மாவட்டத்தில் மாநாட்டை அறிமுக படுத்தும்முகமாகவும் பெரும்திரளான மக்களை அழைத்து செல்வதற்கான கலந்தாய்வு கூட்டம் கோவை மாவட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் சார்பாக அதன் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது
  
இதில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் கோவை மாவட்ட தலைவர் ராஜா உசேன் தலைமை தாங்கினார் இதில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் மாநில தலைவர் ஜனாப் இஸ்மாயில் சாஹிப் பேசுகையில் நம்மை சுற்றி நடக்கும் அநீதிகளை ஓழித்து  சமூக நீதியினை நிலை நாட்ட பாடுபட வேண்டியது அனைத்து குடி மக்களின் கடமையாகும் எனவேதான் "தேசத்தை நீதியால் கட்டமைப்போம்" என்ற முழக்கத்தோடு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா "சமூக நீதி மாநாடு " ஒன்றை வருகிற நவம்பர் 26,27 இல் நமது நாட்டின் தலை நகர் புது  டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் வைத்து நடத்த இருக்கின்றது 

சமூக நீதியின் செய்தியை மக்களுக்கு கொண்டு செல்வது இந்த மாநாட்டின் நோக்கமாகும் சமூக நீதியினை மீட்டுஎடுப்பதற்கான போராட்ட களத்தில் நமது பங்களிப்பை நாம் செலுத்த  வேண்டிய காலம் வந்துள்ளது நீதிமிக்க தேசத்தை அமைப்பதற்கான முயற்சியில் வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் உடன் கைகோர்க்குமாறு அனைத்து தரப்பு மக்களையும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அன்புடன் அழைக்கிறது மேலும் இக்கூடத்தில் மாவட்ட செயலாளர் முஸ்தபா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இயக்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தேடுதல்