அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், ஆகஸ்ட் 03, 2011

சுப்ரமணியன் சுவாமியின் எழுத்திலும் விஷம்

அரசியல் கோமாளி சுப்ரமண்யம் சுவாமி
மும்பையிலிருந்து வெளிவரும் DNA என்ற ஆங்கில நாளிதழில் ஜூலை 16 அன்று  ஜனதா கட்சி தலைவர் (அரசியல் கோமாளி) சுப்ரமண்யன் சுவாமி அவர்கள் எழுதியுள்ள "இஸ்லாமிய பயங்கரவாதத்தை துடைத்தெறிவது எப்படி: ஓர் ஆய்வு" என்ற கட்டுரையில் இந்திய தேசத்தில் நிலவும் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் வேட்டு வைக்கும் விதத்தில் விஷத்தை மை போல ஊற்றி எழுதியுள்ளார்.

ஜூலை 13 அன்று மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் மத பேதமின்றி அப்பாவி மக்கள் பலரை பலி கொடுத்து, காயமடைந்தோரின் ரணங்களும், இச்செய்தியால் நாட்டில் அமைதியை விரும்பும் மக்களின் மனங்களில் ஏற்பட்ட காயங்களும் ஆறுவதற்குள், இந்திய முஸ்லிம்களை தன்னுடைய எழுத்தின் மூலம் காயப்படுத்தி இருக்கிறார் உடலே விஷமாய் நடமாடும் கோமாளி, சுப்ரமண்யன் சுவாமி.

ஜூலை 13-இல் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு இந்தியாவில் வாழும் இந்துக்களிடம் தீர்க்கமான முடிவை எதிர் பார்க்கிறது என்றே தனது கட்டுரையை ஆரம்பிக்கிறார். "ஹலால் நாகரீகத்தின் மூலம் அன்றாடம் இரத்தம் சிந்தி இறுதியில் நாடு அழிவுக்குள்ளாகும் நிலையை இந்துக்கள் அனுமதிக்கக் கூடாது. பயங்கரவாதம் என்பது என்னுடைய பார்வையில் தான் விரும்பியதை செய்யவோ, செய்யாமல் இருக்கவோ பொதுமக்களை சட்ட விரோதமாக அச்சுறுத்தி அடிபணியச் செய்வதாகும்" என்று தொடர்கிறார்.

இஸ்லாமிய பயங்கரவாதம் தேசத்தின் பாதுகாப்புக்கு உள்ள மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். இதைப்பற்றி 2012-க்குப் பிறகு சந்தேகப்படத் தேவையில்லை. அதற்குள், பாகிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி மேலோங்கும். ஆப்கானிஸ்தானத்திலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிவிடும். பிறகு, இதுநாள் வரை நிறைவேற்ற முடியாமல் இருக்கும் தன்னுடைய பணியை முடிக்க இஸ்லாம் ஹிந்துயிசத்தோடு மோதும். ஒசாமாவின் பணியை தற்போது கையிலெடுத்திருக்கும் அல்-காயிதாவின் தலைவர் தன்னுடைய முதன்மையான எதிரியாக இந்தியாவைக் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்காவை அல்ல.

இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தியாவை இஸ்லாமியப் படையெடுப்பால் வெற்றி கொள்ளவேண்டிய பகுதியாகத்தான் முஸ்லிம்கள் பார்க்கிறார்கள். வெற்றி கொள்ளப்பட்ட மற்ற நாடுகள் எல்லாம் 20 ஆண்டுகளுக்குள்  100% முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. 800 ஆண்டுகள் இஸ்லாமிய கொடுங்கோல் ஆட்சிக்குப் பிறகும் 1947-இல் ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்தபோது 75% இந்துக்கள் இருந்தனர். இதனை மத வெறியர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. (இதே போன்ற விஷமம் நிறைந்த கருத்துகளை பிரவீன் சுவாமியும் தி ஹிந்துவில் எழுதி வருகிறார். பிரவீன் சுவாமிக்கு மறுப்புரை, படிக்க... http://pficovai.blogspot.com/2011/07/blog-post_16.html )

ஒரு விதத்தில், இந்துக்களை குறி வைப்பதால் முஸ்லிம்களை நான் குறை காணவில்லை. இந்துக்களை தான் குறை கூறுவேன். ஏனென்றால் அவர்கள் சனாதான தர்மம் அனுமதித்துள்ள தன்னுடைய தனித் தன்மையை அவர்கள் இழந்துவிட்டார்கள். அரசின் பங்களிப்பின்றி, முழுவதும் தன்னார்வ ஏற்பாட்டில்  லட்சக் கணக்கான இந்துக்கள் கும்ப மேலாவிற்காக ஒன்று கூட முடிகிறது. ஆனால் ஒன்றுமறியா இந்துக்களை வீட்டை விட்டு வெளியேற்றும் செயல்கள் கஷ்மீர், மாவ, மேல்விஷாரம், மலப்புரம் போன்ற பகுதிகளில் நடக்கின்றன. இதற்கெதிராக இந்துக்களை ஒன்று கூட்ட தன்னுடைய சுட்டு  விரலைக் கூட  உயர்த்தவில்லை. பாதி இந்துக்கள் ஒன்று சேர்ந்து ஜாதியையும், மொழியையும் உயர்த்திப் பிடித்து ஓட்டளித்தால் உண்மையான இந்துக்களின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்று சட்ட, நாடாளு மன்றங்களில் ஆட்சியை பிடிக்கும்.

...விஷக் கருத்துக்கள் இப்படியே நீளுகிறது. இது போன்ற விஷம் கக்கும் நஞ்சு வியாபாரிகளை மத பேதமின்றி இந்தியர்களும், சர்வதேச சமூகமும் புறக்கணிக்க வேண்டும்.

சுப்பிரமணியம் சுவாமியின் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வரும் டெல்லி பாதுகாப்பு காலனி காவல் நிலையமும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து விரைவில் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியம் சுவாமியை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தினால் மட்டுமே இது போன்ற கலவரத்தை தூண்டும் செயல்களை தடுத்து நிறுத்த முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்