அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், மார்ச் 27, 2012

ஏமாற்றம் தரும் தமிழக பட்ஜெட் – SDPI

சென்னை:தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2012-13 நிதியாண்டு பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏமாற்றம் தரும் வகையில் அமைந்துள்ளது என்று SDPI தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கை வருமாறு:

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் எந்த உருப்படியான திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மின்வெட்டின் காரணமாக இருளில் மூழ்கி இருக்கும் தமிழகத்தில் அதனை உடனடியாக சரி செய்வதற்கான தீர்வுகள் பட்ஜெட்டில் சொல்லப்படவில்லை.
குண்டு மின்சார பல்புகளை ஒழிக்கும் திட்டத்தையோ அல்லது மின்சார விரயத்தைக் கட்டுப்படுத்தும் திட்டத்தையோ அறிவித்திருந்தால் கூடுதல் மின்சாரம் சேமிக்கப்பட்டிருக்கும்.
அந்நிய நாட்டு நிறுவனங்களின் முதலீட்டிற்கு 20,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நலிந்து போயிருக்கும் உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க உருப்படியான திட்டம் இல்லை.
பட்ஜெட் குறித்து முதல்வர் ஏற்கனவே அறிவித்துவிட்டதால், பட்ஜெட்டின் அறிவிப்புகள் தற்போது முக்கியத்துவம் பெறவில்லை.
ஏற்கனவே பல்வேறு வகையான உயர்வும், சொத்து மதிப்பு உயர்த்தப்படுவதும் பொது மக்களைப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதுபோல் அரசு நிர்வாகத்தில் நிலவும் சீர்கேடுகள், அரசுத் துறையில் புரையோடிப்போய் கிடக்கும் லஞ்ச லாவண்யங்களை ஒழிப்பது குறித்து எந்த திட்டமும் இல்லாதது ஏமாற்றத்திற்குரியது.
முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான எந்த உருப்படியான திட்டங்களும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ள அரசு, நாடு முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வக்பு சொத்துக்களை மீட்க திட்டமிடாதது வருந்தத்தக்கது.
முதல்வரின் தேர்தல் வாக்குறுதியின்படி முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றி அறிவிப்புகள் இல்லாதது முஸ்லிம்களை ஏமாற்றும் வகையில் உள்ளது.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழில்துறையினர், முஸ்லிம்கள் என பொது மக்கள் அனைவருக்கும் ஏமாற்றம் தரும் வகையில் உள்ளது.
இருப்பினும் பள்ளி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்கள், கோதுமை மற்றும் ஓட்ஸ் ஆகிய உணவுப் பொருட்களுக்கு வரி நீக்கம் ஆகியவை வரவேற்கத்தக்கது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அந்த பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது தீர்மானம் : ஐ.நாவில் தனிமைப்படுத்தப்பட்ட அமெரிக்கா

ஜெனிவா : பாலஸ்தீன் பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் குடியேற்றங்கள் பலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை கண்காணிக்க சர்வதேச விசாரனை நடத்த வேண்டும் என்று கோரும் தீர்மானம் அமெரிக்காவை தவிர அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்டு ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பலஸ்தீனத்தில் ஏற்கனவே இஸ்ரேலால் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் பலஸ்தீனர்கள் வாழும் எல்லை பகுதியிலும் இஸ்ரேல் குடியேற்ற திட்டங்களை மேற்கொள்வதாகவும் பலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுவதாகவும் புகார்கள் எழுந்தன.


இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் பாகிஸ்தான் தாக்கல் செய்தது. இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா, க்யூபா, வெனிசுலா, நார்வே, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 36 நாடுகள் ஆதரித்து வாக்களிக்க இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த அமெரிக்கா மட்டும் தனிமைப்படுத்தப்பட்டது.

இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 10 நாடுகள் இவ்வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இத்தகைய பதற்றத்தை அதிகரிக்கும் தீர்மானங்களை நிராகரிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கூறியுள்ளார். இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா சபையில் எத்துணையோ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் அமெரிக்காவின் ஆதரவால் அவை பயனில்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.
நன்றி: ஆசியா நண்பன்

திங்கள், மார்ச் 26, 2012

வறுமையில் உழலும் மலேகான்!

மும்பை:மஹராஷ்ட்ரா மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேகானில் வாழும் பெரும்பான்மையான மக்கள் வறுமையில் உழல்வதாக டாடா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸின்(டிஸ்ஸ்-TISS) ஆய்வு கூறுகிறது.
மலேகானின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகளோ ஆரோக்கிய பாதுகாப்பு வசதிகளோ கிடைப்பதில்லை என்று 221 பக்கங்களைக் கொண்ட அறிக்கை கூறுகிறது.
மஹராஷ்ட்ரா மாநிலத்தில் சிறுபான்மை கமிஷனுக்காக 2010-ஆம் ஆண்டு துவங்கிய ஆய்வின் அறிக்கையை இவ்வருட துவக்கத்தில் கமிஷனுக்கு டிஸ்ஸ் சமர்ப்பித்தது. இங்குள்ள முஸ்லிம்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முற்றிலும் பிரதிநிதித்துவம் இல்லை என்று ஆய்வு கூறுகிறது.
2006 மற்றும் 2008 ஆம் ஆண்டில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் மிகவும் பாதிக்கப்பட்ட மலேகான் மக்களின் சமூக, பொருளாதார, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய டிஸ்ஸின் அசோசியேட் ப்ரொஃபஸர் அப்துல் ஸபானின் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது. மொத்த மரண சதவீதத்தில் 45 சதவீதமும் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் என்றும், அவர்கள் வறுமையின் காரணமாக மரணிப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்துக்குறைவினால் மரணிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மலேகானில் அதிகமாகும்.
மலேகானில் பெரும்பாலான இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக பொருளாதார நிலையை ஆய்வுச்செய்த சச்சார் கமிஷனின் அறிக்கை வெளியாகி ஐந்து ஆண்டுகள் கழித்து மலேகான் குறித்த அறிக்கை வெளியாகி உள்ளது.
நன்றி: ஆசிய நண்பன்

வக்ப் வாரியத் தலைவரை உடனடியாக நியமனம் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயற்குழுவில் தீர்மானம்

கூடங்குளம் அணுஉலை தொடர்பான அரசின் முடிவை மீள்பரிசீலனை செய்யவும், திட்டக் கமிசனின் வறுமைக் கோட்டு வரையறையை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் செயற்குழுவில் தீர்மானங்கள் 
 
வக்ப் வாரியத் தலைவரை உடனடியாக நியமனம் செய்யவும், கூடங்குளம் அணுஉலை தொடர்பான அரசின் முடிவை மீள்பரிசீலனை செய்யவும், திட்டக் கமிசனின் வறுமைக் கோட்டு வரையறையை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் 21,22.03.2012 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முஹம்மது, துணை தலைவர் முஹம்மது இஸ்மாயில் பொருளாளர் கே. எஸ்.எம். இப்ராஹிம் என்ற அஸ்கர் உட்பட செயற்குழு உறுப்பினர்கள்பலரும்கலந்துகொண்டனர்.

செயற்குழுவில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. புதிய அரசு பொறுப்பேற்று பல மாதங்களாகியும் வக்ஃபு வாரியத் தலைவர் இன்னும் நியமனம் செய்யப்பட வில்லை. இது வக்ஃப் வாரியம் மீதும் அதன் சொத்துக்கள் மீதும் அரசு கவனம் செலுத்த விரும்பவில்லை என்பதுடன் முஸ்லிம்கள் விவகாரத்தில் அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவது போன்று தோற் றமளிக்கின்றது.
அது மட்டுமல்லாமல் வக்ஃப் சொத்துக்கள் அரசியல்வாதிகளால் குறிப்பாக ஆளும் கட்சியினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதும் அதனை ஆளும் அரசு கண்டும் காணாமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கும் இச்செயற்குழு இது தொடர்பாக உள்துறைச் செயலர்,சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்துஉரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென முறையிடவும் தீர்மானித்துள்ளது.

2. கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராடி வரும் மக்களின் உணர்வுகள் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளநியாயமான சந்தேகங்களை புறந்தள்ளி விட்டு அணுஉலை செயல்பட தமிழக அμசு அனுமதித்துள்ளதை வன்மையாக கண்டிக்ககின்றது இச்செயற்குழு.
மேலும், கூடங்குளம் பகுதி மக்கள் காவல்துறையினரின் குவிப்பினால் அடக்கு முறைக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு அவர்களின் தினசரி வாழ்க்கை பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது.
அரசு இது விஷயத்தில் கூடங்குளம் மக்களின் ஜனநாயகரீதியிலான போராட்டத்திற்கு மதிப்பளித்து அங்கு நிலைமைகள் சீரடைய துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூடங்குளம் அணுஉலை தொடர்பான அரசின் முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.

3. இந்திய நகரங்களில் வாழும் ஒருவர் ஒரு நாளைக்கு ரூபாய் 29ம் கிராமத்தில் வாழக்கூடிய ஒருவர் ரூபாய் 22ம் சம்பாதிக்கின்றார் எனில் அவர் அனைத்து வசதிகளையும் ஒருங்கே அமையப் பெற்றவர் என்றும் அதற்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் தான் ஏழைகள் என்றும் ஆய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளது மத்திய அμசின் திட்டக் கமிஷன்.
இன்று பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு பலரின் தினசரி வாழ்வையே கேள்விக்குரியதாக ஆக்கி வரும் இவ்வேளையில் நீங்கள் ஹோட்டலில் ஒரு தோசை சாப்பிட்டாலே பணக்காரர்கள் பட்டியலில் வந்து விடுவீர்கள் எனும் கேலிக் கூத்தான அறிக்கையை வெளியிட்டு இந்திய மக்களின் மேல் மேலும்ஒரு இடியை இறக்கி உள்ளது மத்திய அரசின் திட்டக்கமிஷன்.
திட்டக்கமிஷனின் இந்த அறிவிப்பை வன்மையாக கண்டிக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் திட்டக் கமிஷனின் இந்தஅறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுமெனவும் நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒத்துவராத இது போன்ற முடிவுகளை வெளியிடுவதில் மத்திய அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கின்றது

யூத பயங்கரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானம்

புதுடெல்லி: யூத பயங்கரவாத சக்திகள் நமது நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட்டு அமைதியை சீர்குழைத்து வரவதோடு நாட்டில் பல தீவிரவாத தாக்குதல்களுக்கும் காரணமாய் விளங்கிவருகிறது. யூத பயங்கரவாதத்தை எதிர்த்து நாடு முழுவதும் வீரியத்துடன் பிரச்சாரம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டம் தீர்மானித்துள்ளது.

தேசிய தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய அளவில் நடைபெறவிருக்கும் இப்பிரச்சாரத்தின் அங்கமாக மத்திய அரசு இஸ்ரேலுடனான தனது உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பாராளுமன்றத்தை நோக்கி பேரணியை நடத்த இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத நாடாக திகழ்ந்து வரும் இஸ்ரேல் ரவுடி நாடாக திகழ்ந்து வரும் அமெரிக்காவுடன் கைகோர்த்துக்கொண்டு இந்தியா போன்று இறையாண்மையுடன் செயல்பட்டுவரும் நாடுகளை ஈரான், ஃபலஸ்தீன் போன்ற நாடுகளை எதிர்ப்பதற்காக நிர்பந்தித்து வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்திற்கும், தீவிரவாத எதிர்ப்பு போராட்டத்திற்கும் இஸ்ரேலின் ஏஜென்ஸியை நாடி இருப்பது வியக்கத்தக்கதாக இருக்கிறது. காரணம் உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக செயல்படுவதே இஸ்ரேல்தான். இஸ்ரேலுடனான உறவை இந்தியா அதிகப்படுத்தினால் அதனை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு பயங்கரவாத செயல்களில் இந்துத்துவா சக்திகள் மேலும் வீரியத்துடன் செயலாற்றும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இஸ்ரேலால் பாதிக்கப்பட்ட ஃபலஸ்தீன மக்களுக்காக கண்ணீர் சிந்திவிட்டு மறுகணமே இஸ்ரேலுடனான உறவை ஏற்படுத்துவது நமது தேசத்தின் மரபுகளுக்கு எதிரான ஒன்று என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கருதுகிறது. பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபனிந்து ஃபலஸ்தீனத்திற்கு எதிராகவும், ஈரானிற்கு எதிராகவும் செயல்பட்டுவிடக்கூடாது என வலியுறுத்துகின்றனர்.

பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் அனைவரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் பள்ளி செல்வோம் பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள். பள்ளிக்குழந்தைகளுக்கான உபகரண பொருட்கள் மொத்தம் 1 லட்சம் குழந்தைகளுக்கு  இவ்வருடம் வட இந்திய மாநிலங்களில் விநியோகிக்கப்படும். இந்த பிரச்சாரத்தின் போது கல்வி விழிப்புணர்வு, கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்றவையும் மேற்கொள்ளப்படும்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டம் நிறைவேற்றிய மற்றொரு தீர்மானமாவது, தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் தொடங்குவது பற்றி தனது கருத்தினை வெளியிட்டுள்ளது. தீவிரவாதம் என்பது நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தாலும், ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் தெரிவித்தது போன்று இது கூட்டணைப்பிற்கு எதிரானதாக அமைந்துவிடும். எனவே மத்திய அரசு தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் தொடங்குவது தொடர்பான தன்னுடைய தீர்மானத்தை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது. தேர்தல் நேரங்களில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தேர்தல்களில் தங்களுடைய வாக்குகளை செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் அறிக்கைகள் மற்றும் தீர்மானங்களை வாசித்தார். துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா, உறுப்பினர்கள் மெளலானா உஸ்மான் பேக், பேராசிரியர் கோயா, யா முஹைதீன், வழக்கறிஞர் கே.பி. ஷரீஃப், ஹாமித் முஹம்மது, ஓ.எம்.ஏ. ஸலாம், முஹம்மது ரோஷன் மற்றும் மாநில தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வியாழன், மார்ச் 22, 2012

கூடன்குளம் - அமைச்சரவை தீர்மானம் ஏமாற்றத்திற்குரியது அரசு வாபஸ் பெற வேண்டும் SDPI மாநிலத்தலைவர் - தெஹ்லான் பாகவி

கூடன்குளம் அணு உலை போராட்டம் என்பது இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் ல் நடைபெற்ற புகுஷிமா அணு உலை வெடிப்பிற்கு பிறகு இது தீவிரம் பெற்றுள்ளது.கடந்த ஏழு மாத காலமாக கூடன்குளத்தை பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை வந்த வன்முறையில் ஈடுபடாமல் அகிம்சை வழியில் இப்போராட்டம் தொடர்கிறது.



மத்திய அரசு இப்போராட்டத்தை ஒடுக்க பல அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டும், கண் துடைப்பிற்காக வல்லுநர் குழுவை அமைத்தாலும் போராட்ட குழுவினர் தமிழக அரசையே முழுமையாக நம்பினர். க்மிழக அரசும் மக்களின் அச்சம் அகற்றப்படாமல் அணு உலை பணிகள் நடைபெறக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றியது.



ஆனால் இன்று தமிழக அமைச்சரவையின் கூடன்குளம் அணுஉலையை திறக்க வேண்டும் என்ற தீர்மானம் தங்களின் உயிர்வாழும் உரிமைக்காக தன்னெழுச்சியோடு போராடும் மக்களை பெரும் ஏமாற்றத்தில் தள்ளி உள்ளது.



தமிழக அரசு தனது தீர்மானத்தை பரிசீலித்து திரும்ப பெற வேண்டும். ஜனநாயக ரீதியில் அமைதி வழியில் போராடும் மக்களுக்கு எதிராக ஏந்த அடக்குமுறையையும் பிரயோகிக்க கூடாது. கைது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. கைது செய்யப்பட்ட போராட்ட குழுவினரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி செய்தி வெளியிட்டுள்ளார்.

செவ்வாய், மார்ச் 20, 2012

குஜராத்தை அடுத்து கர்நாடக மாநிலத்தில் இந்துத்துவ பரிசோதனை !!!!

ஆபத்து நிறைந்த பா.ஜ.க. ஆட்சியில் உள்ள மதத் தீவிரவாதப் பாதையில் கருநாடக மாநிலம் சென்று கொண்டி ருக்கிறது என்பதை அங்கு நிகழும் பல்வேறு நிகழ்வுகள் காட்டுவதாக ராணா அயூப் என்பவர் தெஹல்கா வார இதழில் ஹிந்துத்வாவின் இரண்டாவது பரிசோதனைச் சாலை என்ற தலைப்பில் எழுதியுள்ள தனது கட்டுரையில் தெரி வித்துள்ளார்.

குஜராத்துக்கு அடுத்தபடியாக தங்களின் இந்துத்துவா பரிசோதனையை நடத்த பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் கருநாடக மாநிலத்தைத் தேர்வு செய்திருப்பதாகவே தெரிகிறது.
 இந்துக்களின் சங்கமமாம்!

இந்துக்களின் பலத்தைக் காட்டும் விதத்தில் மாபெரும் சங்கமம் என்ற ஒரு நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ். இம்மாநிலத் தின் ஹூப்ளி நகரில் நடத்தியது. இது போன்ற சங்கமம் நிகழ்ச்சியை கருநாடக மாநிலம் முழுவதிலும் நடத்திடவும் திட்ட மிட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு சட்டமன்றத்தில், முக்கியமான பிரச்சினை பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, மூன்று அமைச்சர்கள் பாலுறவுக் காட்சியை தங்கள் செல்போனில் பார்த்துக் கொண்டிருந்த பிரச்சினை எழுந்தவுடன் இத்திட்டம் கைவிடப்பட்டது.

ஹூப்ளியில் நடந்த சங்கமம் விழாவில் முதலமைச்சர் சதானந்த கவுடா கலந்து கொண்டார். அதுவும் எப்படி? ஆர்.எஸ்.எஸ். சீருடையான காக்கி அரைக்கால் சட்டை, வெள்ளை நிற மேல் சட்டை அணிந்து கொண்டு ஆஜரானார். ஒரு முதலமைச்சர் இது போன்று ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்து வருவது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.

கிறிஸ்துவர்கள்மீதான தாக்குதல் !!


கருநாடகத்தின் வடக்கு மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்களின் மீதான தாக்குதல் அன்றாட நிகழ்ச்சி யாகவே ஆகிவிட்டது. தெகல்கா இதழின் செய்தியாளர் இப்பகுதிகளில் பயணம் செய்துவிட்டு, இத்தகைய தாக்குதல் பற்றி திரட்டி வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கத்தக்கவையாக உள்ளன. இந்த விவரங்கள் தனியே தரப்பட்டுள்ளன.


மங்களூர் அருகே உள்ள உப்பனங்குடி என்ற ஊரில் 22-1-2012 அன்று முதல்வர் சதானந்த கவுடா, எடியூரப்பா ஆகியோருக்கு நெருக்கமான பட் என்ற ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசும்போது, முஸ்லிம் பெண்களின் பர்தாவை எடுத்து விட்டு கொடுப்பதற்கு அவர் களிடம் என்ன இருக்கிறது என்று பாருங்கள் என்று அருவருக்கத்தக்க முறையில் கூறியுள்ளார்.


கூட்டத்தினர் ஆரவாரத்துடன் அதைக் கேட்டு மகிழ்ந் துள்ளனர்; காவல்துறையினர் மவுனம் காத்தனர். இது பற்றி காவல் துறையிடம் புகார் செய்தபிறகு பட் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால், புகார் அளித்த முஸ்லிம் மத்திய கமிட்டி உறுப்பினர் முகமது மசூத் மீதே மக்களிடையே விரோதத்தைத் தூண்டி விட்டு வளர்க்கிறார் என்று இந்திய குற்றவியல் சட்டம் 153 (அ) பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது. பட் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதில் வேடிக்கை என்னவென் றால், மங்களூர் காவல்துறை ஆணை யர் அலுவலகக் கட்டடத்தையே இந்த பட்தான் திறந்து வைத்தார் என்பது தான். இது பற்றி யாருமே வாய் திறக்க வில்லை. கரவாலி ஆலே என்ற பத்திரிகை மட்டுமே இதனை வெளியிட்டது. மாநிலத் தில் மத மூடநம்பிக்கைகள் வளர்ந்து வருவதற்கு எதிராகக் குரல் கொடுத்தது இந்த பத்திரிகை. அதன் ஆசிரியர் சீதாராம் என்பவர் கடந்த 20 ஆண்டு காலத்தில் மாநிலத்தில் நடைபெற்ற பெரியதும், சிறியதுமான மதக் கலவரங் களைப் பற்றி ஆவணப் படுத்தியிருக்கிறார்; அதற்காக அவர் துன்பப்பட்டும் இருக் கிறார்.


பத்து நாள்களுக்கு ஒருமுறை தேவாலயம்மீது தாக்குதல்
தனது பத்திரிகைக் குவியலில் இருந்து சிலவற்றை எடுத்துக் காட்டும் அவர், அன்றாடம் எங்காவது ஓரிடத்தில் முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் தேவாலயங்கள், மசூதிகள் மீது தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்று கூறுகிறார். கடந்த 3 ஆண்டுகளில் 10 நாள்களுக்கு ஒரு முறை ஒரு தேவாலயம் தாக்கப்பட்டிருப்ப தாக அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு இந்து பெண் ணுடன் ஒரு முஸ்லிம் இளைஞன் இருந்து விட்டால் போதும், உடனே கலவரம் தொடங்கிவிடும்.


இந்து பெண் - முஸ்லிம் இளைஞன் காதலை காதல் ஜிகாட் (புனிதப்போர்) என்று சங்பரிவாரங்கள் முத்திரை குத்தியுள்ளன. இக்கோட்பாட்டில் மிகுந்த தீவிரம் கொண்ட பட் 2011 டிசம்பரில் சுல்லியாவில் ஒரு மாபெரும் கண்டனப் பேரணி நடத்தினார். இந்துக்களுக்கு எதிரான உணர்வு கொண்டிருப்பதாக காவல்துறையைக் குறை கூறிய அவர், காதல் புனிதப்போர், தீவிரவாதம், பசுவதை ஆகியவை எவ்வாறு மாநிலத்தில் அதிகரித்துள்ளது என்று பேசினார்.
அவருடன் பேசிய இந்து ஜாக்ரன் வேடிகேயின் மண்டல அமைப்பாளர், முஸ்லிம்கள் எங்களைக் கோபப் படுத்தியபோதெல்லாம் நாங்கள் தக்க பதிலடி கொடுத்துவிட்டோம். இன்னமும் அவர்களுக்குத் தேவை என்றாலும் கிடைக்கும். காவல்துறை அவர்களுடன் கைகோர்த்துக் கொண்டால், அவர்களுக் கும் பாடம் கற்பிப்போம் என்று கூறினார்.
அக்கூட்டத்தில் பேசியவர்கள் காவல்துறை உதவி ஆய்வாளர் ரவிகுமார், கண்காணிப்பாளர், உதவி கண்காணிப் பாளர் மீது வழக்குகள் பதிவு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்கள்
நன்றி: தெஹல்கா 25.2.2012 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

சனி, மார்ச் 17, 2012

மணிப்பூரில் பள்ளி செல்வோம் பிரச்சாரம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மணிப்பூர் மாநிலம் சார்பாக "பள்ளி செல்வோம்" விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தின் போது கல்வி பற்றியை விழிப்புணர்வை பெற்றோர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பெற்றோர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. 



பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுவதும் "பள்ளி செல்வோம்" என்ற தலைப்பில் கல்விக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 13ஆம் தேதி அன்று மணிப்பூர் மாநிலத்தில் "காக்சிங் சோரா" ஆரம்பப்பள்ளியில் பள்ளி செல்வோம் பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் முஃப்தி அர்ஷத் ஹுஸைன் தலைமை தாங்கி நடத்தி தந்தார். சமூக சேவகர் முஹம்மது அப்துர்ரஹ்மான், ஹாஜி அப்துல் குத்தூஸ், ஹாஜி சிராஜ் அஹமது போன்ற ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களோடு கலந்து கொண்டனர்.



பாடபுத்தகங்கள் காவிமயமாக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட்

பெங்களூர்: கர்நாடக மாநில பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற்றது. மாநில தலைவர் முஹம்மது இலியாஸ் தும்பே இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காவிமயமாகி வரும் பாடபுத்தகங்கள்:

5 மற்றும் 8ஆம் வகுப்புக்களின் சமூக அறிவியல் பாட புத்தகங்கள் காவிமயமாக்கப்பட்டு உள்ளன. குழந்தைகளின் மனதில் இனவாதத்தை தூண்டும் அளவிற்கு பாடங்கள் இயற்றப்பட்டுள்ளன. வரலாற்று உண்மைகள் திரிக்கப்பட்டு வன்முறையை தூண்டும் விதத்தில் பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு இதனை வன்மையாக கண்டிப்பதோடு, இம்மாதிரியான பாட புத்தகங்களை தடை செய்ய வேண்டும் என மாநில அரசை வலியுறுத்துகிறது. இது தொடர்பாக மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

பள்ளி செல்வோம் பிரச்சாரம்:

ஒவ்வொரு வருடமும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பள்ளி செல்வோம் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கிடைக்க வேண்டுமென்பதே இதன் குறிக்கோள் ஆகும். இப்பிரச்சாரத்தின் போது பள்ளிப்படிப்பை பாதியில் முடித்த குழந்தைகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்ச்சிகள் நடைபெறும். கல்வி உதவித்தொகைகள், இலவச நோட்டு புத்தகங்கள், போன்றவை வருகின்ற மே மாதம் ஏழை எளிய மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும்.

பசு வதை தடைச்சட்டம்:

மாநில அரசு பசு வதை தடைச்சட்டத்தை அமுல்படுத்த முயற்ச்சித்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கதாகும். இப்படிப்பட்ட சட்டங்கள் மக்களுக்கு எதிரானது, விவசாயிகளுக்கு எதிரானது. மாட்டிறைச்சியை முஸ்லிம்கள், தலித்கள், கிறிஸ்த்தவர்கள் மற்றும்  பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரும் சாப்பிட்டு வருகிறார்கள். இச்சட்டம் கொண்டுவரப்பட்டால் விவசாயிகள் மற்றும் இறைச்சி விற்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே குடியரசு தலைவர் இதில் தலையிட்டு இப்படிப்பட்ட  சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு தடைவிதிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.
முஸ்லிம்கள் மற்றும் மஸ்ஜிதுகள் மீது தாக்குதல்:

உடுப்பி மாவட்டம் கொங்கோலி மற்றும் கோடாவூர் பகுதிகளிலுள்ள மஸ்ஜிதுகள் மீது சங்கப்பரிவார கும்பல்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். அதேபோன்று கடலோர பகுதிகளிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற இடங்களில் சங்கப்பரிவார குண்டர்கள் முஸ்லிம்களை தாக்கியுள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இதனை வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இது தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனைகளை வழங்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்துகிறது.

ஒரு சார்புடைய ஊடகங்கள்:

ஊடகங்களின் ஒரு பிரிவினர் பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இதனை வன்மையாக கண்டிக்கிறது. பொய்யான செய்திகளை பரப்பி மக்களை பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக திசை திருப்ப முயற்ச்சித்து வருகின்றனர். விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலமாகவும், சமூக சேவைகளின் மூலமாகவும் முஸ்லிம் சமூகத்தை வலிமைப்படுத்துவதற்கான பணிகளையே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

கர்நாடகாவில் மாற்று அரசியல் சக்தி தேவை:

கர்நாடக மாநில அரசியலில் ஒரு மாற்று அரசியல் சக்தி தேவை என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கருதுகிறது. பா.ஜ.க, காங்கிரஸ், ஜனதா தளம் போன்ற கட்சிகள் நல்லதொரு ஆட்சியை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டன. மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதில் இவர்கள் போதுமான அக்கறை செலுத்தவில்லை. மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், குடும்ப வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்குவது போன்ற‌வற்றில்தான் அதிகம் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மக்கள் இதுபோன்ற கட்சிகளை வெறுக்க துவங்கியுள்ளனர். அவர்கள் இவர்களை விடுத்து ஒரு மாற்று அரசியல் சக்தியை எதிர்பார்கின்றனர். 

இவ்வாறு பொதுச்செயலாளர் ரியாஸ் பாஷா செய்தி வெளியிட்டுள்ளார்.

புதன், மார்ச் 14, 2012

இஸ்ரேலின் தூண்டுதலால்தான் காஜ்மி கைது செய்யப்பட்டுள்ளார் - பாப்புலர் ஃப்ரண்ட்

செய்யத் முஹம்மத் காஜ்மியை அழைத்துச் செல்லும் அதிகாரிகள்
புதுடெல்லி:  மூத்த பத்திரிக்கையாளரான செய்யது முஹம்மது காஜ்மி கைது செய்யப்பட்டுள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தூண்டுதலினால் தான் இந்திய அரசு காஜ்மியை கைது செய்துள்ளது என்பதற்கான வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன.

 சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இஸ்ரேலிய தூதரகத்தின் காரில் குண்டுவெடித்தது. இதற்கு ஈரான் தான் காரணம் என எந்த ஆதாரமுமில்லாமல் இஸ்ரேலும், அமெரிக்காவும் குற்றஞ்சாட்டின. இஸ்ரேலிய உளவுத்துறையினர் கொடுத்த செய்தியின் அடிப்படையில் காஜ்மி கைது செய்யப்பட்டுள்ளதாக இந்த அரசு கூறுகிறது. இது மிகவும் துரதிஷ்டவசமானதாகும். உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக திகழும் இஸ்ரேலிய உளவு நிருவனமான மொஸாத்தின் உள‌வாளிகளே நேரடியாக இந்தியா வந்து காஜ்மியை விசாரிக்க இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது. இதற்கு முன்னர் இஸ்ரேலிய தூதரின் கார் குண்டுவெடிப்பில் ஈரானிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி வந்த இந்தியா தற்போது தன்னுடைய கருத்தை மாற்றியிருக்கிறது. இதிலிருந்தே இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்திலும், பாதுகாப்புத்துறையிலும் இஸ்ரேலின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை நன்றாக உணரலாம்.

பத்திரிக்கையாளர் காஜ்மி ஈரான் நாட்டு உளவு நிறுவனத்தின் உளவாளி என்று நம்பப்பட்டுவருகிறது. தன்னுடைய எழுத்தின் மூலமாக இஸ்ரேலை விமர்சனம் செய்த ஒரே காரணத்திற்காக இக்குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளார். இக்கைது சம்பவத்தின் மூலம் இஸ்ரேல் தனக்கு எதிராக செயல்படும் பத்திரிக்கைகளையும், நிருபர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. பலஸ்தீனத்தில் அத்துமீறி அப்பாவி மக்களை கொன்று குவித்து வரும் இஸ்ரேலிய பயங்கரவாதத்தின் செயல்களை பல பத்திரிக்கைகளுக்கும் இவர் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

இதே போன்று இஸ்ரேலுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது தேசிய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே காரணத்திற்காக இதே குண்டு வெடிப்பு வழக்கில் பாப்புலர் ஃப்ரண்டை இணைக்க உளவுத்துறையினரும், ஊடகங்களும் முயற்ச்சி செய்து வருகின்றது. நமது உள்நாட்டு விவகாரங்களிலும், வெளியுறவுக்கொள்கைகளிலும் இஸ்ரேல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது நம் நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்ககூடியது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

காஜ்மியை கைது செய்தது ஒட்டுமொத்த பத்திரிக்கை சுதந்திரத்தை பறிப்பதாகும். காஜ்மியை கைதுசெய்த அதிகாரிகள் அதற்கான காரணத்தை முறையாக தெரிவிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது. மேலும் மத்திய அரசு எந்த வெளிநாட்டு உளவு நிறுவனங்களையும் இந்திய மண்ணில் விசாரணைக்கு அனுமதிக்ககூடாது என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது. காஜ்மி கைது செய்யப்பட்டதை கண்டித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாராட்டுகிறது.

இவ்வாறு தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

திங்கள், மார்ச் 12, 2012

கொலைவெறித் தாக்குதலை நிறுத்து ! துருக்கியில் மாபெரும் பேரணி !

அன்காரா: கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.03.2012) இஸ்ரேலின் காஸாமீதான படுகொலைத் தாக்குதல்களைக் கண்டித்து துருக்கியத் தலைநகர் அன்காராவில் மாபெரும் கண்டனப் பேரணி இடம்பெற்றது.
 
மனித உரிமைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான துருக்கிய அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்த எதிர்ப்புப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
 
அண்மைக் காலமாக காஸாமீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் போர்விமானத் தாக்குதல்களை எதிர்த்து, "காஸாவின் அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைத் தாக்குதல்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும்!" என்ற கோரிக்கையோடு, ஆயிரக்கணக்கான துருக்கிய மனிதாபிமான ஆர்வலர்களும் சமாதானச் செயற்பாட்டாளர்களும் இஸ்ரேலியத் தூதரகமாகத் தற்காலிகமாகச் செயற்பட்டுவரும் கட்டிடத்தின்முன் அணிதிரண்டனர்.
 
கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டுவரும் காஸாமீதான ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதல்களில் இதுவரை 12 வயதுக் குழந்தை உட்பட 18 பலஸ்தீன் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
 
இதற்கிடையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ, 'தம்முடைய நாடு காஸா மீதான தாக்குதலைத் தொடரும்' எனத் தெரிவித்துள்ளமை சமாதானத்தை விரும்பும் மனிதாபிமான ஆர்வலர்களைப் பெரிதும் கொதிப்படைய வைத்துள்ளது.
 
"காஸாமீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மேற்கொண்டுவரும் கொலைவெறித் தாக்குதல்கள் மனித விழுமியங்களுக்கு எதிரானது என்பதோடு, முழுக்க முழுக்க காட்டுமிராண்டித்தனமானதும்கூட" எனப் பேரணியில் கலந்துகொண்ட மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
"கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஆக்கிரமிப்பு இஸ்ரேல் காஸாமீது சட்டவிரோத முற்றுகையை அமுல்நடத்தி வருவதால், அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் சீர்குலைந்துள்ளது. இந்நிலையில், இரண்டாவது தடவையாகவும் காஸா மீதான காட்டுமிராண்டித் தாக்குதலைத் தொடங்கியுள்ள இஸ்ரேலிய எதேச்சதிகாரப் போக்கை உலக நாடுகள் கண்டித்து, அதனைத் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்" என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி: ASIANANBAN

2014ல் பி.ஜே.பி ஆட்சிக்கு வருவது கடினம் : ஆர்.எஸ்.எஸ் !

RSS பயங்கரவாதிகள்
புது டெல்லி : காங்கிரஸ் கட்சியை பீடித்துள்ள நோயை போன்று பி.ஜே.பியிலும் தொண்டர்களை விட பெரும் எண்ணிக்கையில் தலைவர்கள் இருப்பதால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி ஆட்சிக்கு வருவது கடினம் என்று ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.
தன்னுடைய கட்சி வெளியீடான ஆர்கனைஸர் மற்றும் பஞ்ஜன்யா இதழ்களின் தலையங்கத்தில் உத்தரபிரதேசத்தில் வலுவான கட்டமைப்பும் தொண்டர்களையும் கொண்டிருந்தும் ஏன் வாக்காளர்கள் பி.ஜே.பியை தேர்வு செய்யவில்லை என்பதை குறித்து பி.ஜே.பி சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் பி.ஜே.பிக்கு பணியாற்றும் தொண்டர்களை விட அதிகமாக தலைவர்களை வைத்திருப்பது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பி.ஜே.பி வெறும் 47 இடங்களை மட்டும் பெற்று பரிதாபகரமாக தோற்றது குறிப்பிடத்தக்கது.
நன்றி: ஆசியாநண்பன்

வெள்ளி, மார்ச் 09, 2012

சமாஜ்வாதி கட்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் வாழ்த்துக்கள்!

K.M.சரீப் அவர்கள் PFI பொதுச் செயலாளர் (கோப்புப் படம்)
புதுடெல்லி: நடந்து முடிந்த உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த சமாஜ்வாதி கட்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. கடந்த 2007 ஆம் பகுஜன் சமாஜ் கட்சியிடம் ஆட்சியை இழந்த சமாஜ்வாதி கட்சி தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டு மீண்டும் உத்திரபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஜாதியின் பெயரைக்கொண்டும், அவர்களது வாக்குகளைக்கொண்டும் ஜெயித்துவிடலாம் என்ற மாயாவதியின் கனவு தகர்க்கப்பட்டு ஜாதியையெல்லாம் புறம் தள்ளிவிட்டு மக்கள் நடுநிலையாக இருந்து வாக்களித்துள்ளார்கள்.

சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றதற்கான முக்கிய காரணம் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் அது திரட்டியதால் தான் என அரசியல் வல்லுனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். உத்திரபிரதேசத்தின் முஸ்லிம்களின் ஆதரவில்லாமல் ஒரு கட்சி ஆட்சியமைக்க முடியாது என்ற வலுவான நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆட்சியை இழந்த மாயாவதி கூறும்போது "முஸ்லிம்களின் வாக்குகளே சமாஜ்வாதி கட்ச்யினருக்கு வெற்றியை கொடுத்துள்ளது" எனக்கூறினார்.

உத்திரபிரதேச முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளின் சக்திகளை சரியாக புரிந்து கொண்டனர். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டினை வழங்குவோம் என்ற காங்கிரஸ் அரசின் தேர்தல் வாக்குறுதிகளை அவர்கள் புறக்கணித்துவிட்டனர். இதுநாள் வரை காங்கிரஸ் முஸ்லிம்களை ஏமாற்றிக்கொண்டே வருகிறது என்பதை தெளிவாக உணர்ந்து கொண்ட அவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுத்தீரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். இதனாலேயே காங்கிரஸை முஸ்லிம்கள் புறக்கணித்துவிட்டனர்.

முஸ்லிம்களின் ஆதரவை பெற்று தேர்தலில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி கட்சி இதனை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். சமாஜ்வாதிகட்சி எதிர்கொள்ளவிருக்கும் முதல் சோதனை தன்னுடைய அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடமளிப்பதில் இருக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக தங்களுடைய தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவதாக வாக்களித்திருக்கின்றனர். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்கும் அவர்களுடைய வறுமையை போக்கும்விதத்தில் இராஜேந்திர சச்சார் கமிஷன் பரிந்துரை செய்ததின் படி இடஒதுக்கீட்டினை அதிகப்படுத்தி தரவேண்டும். உத்திரபிரதேச முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் மற்றொரு முக்கிய கோரிக்கை என்னவெனில் பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதுதான்.

எனவே தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றி மாநிலத்தில் சட்ட ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என சமாஜ்வாதி கட்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்வதோடு தேர்தலின் வெற்றிக்காக பணியாற்றிய சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களுக்கும் அதன் தொண்டர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது என்று K.M.சரீப் அவர்கள் (பொதுச் செயலாளர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வியாழன், மார்ச் 08, 2012

அவதூறு பிரசாரத்தை கண்டிக்கும் ஆர்வலர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள்

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக மீடியாவின் ஒரு பகுதியினர் செய்து வரும் அவதூறுப் பிரச்சாரத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது வலதுசாரி மதவாத இயக்கங்கள் வேண்டுமென்றே திட்டமிட்ட சதிச் செயல்களின் மூலம் பரப்பி வரும் விஷக் கருத்துக்கள் என்று தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பயோனியர் என்கின்ற ஆங்கில தினசரிதான் இந்தப் போலிப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தது. டில்லி சாணக்கியபுரியில் நடந்த குண்டுவெடிப்பில் இஸ்ரேலிய தூதரக அதிகாரி காயமடைந்தார்.

இந்த குண்டுவெடிப்பில் பாப்புலர் ஃப்ரண்டின் பங்களிப்பு இருக்கின்றதா என விசாரணை அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும், சமீபத்தில் கேரளாவில் நடந்த பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுக்குழுவில்  இந்திய இஸ்ரேலிய உறவை கண்டித்து பாப்புலர் ஃபிரண்ட் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் இதன் பின்னனி எனவும் எழுதியது பயோனியர்.

பயோனியர் சங்கப்பரிவாரத்தின் அறிவிக்கப்படாத‌ பத்திரிக்கை என்பதை அனைவரும் அறிவர். பின்னர் அதே கதை சில சிறிய மாற்றங்களுடன் நியு சன்டே எக்ஸ்பிரஸ், டைனி ஜாக்ரன், நவ் பாரத் டைம்ஸ், இன்கிலாப், டெக்கான் கிரோனிக்கல் மற்றும் சி.என்.என், ஐபிஎன் ஆகிய மீடியாக்களில் வெளிவந்ததன் மூலம் யாரோ சிலர் டெல்லியில் இருந்து பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக வேலை செய்து கொண்டும் அப்பாவி வாசகர்கள் பாப்புலர் ஃப்ரண்டை சந்தேக கண் கொண்டு பார்க்கவும் சதி செய்து வருகின்றனர்.
பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் மேலும் தெரிவிக்கையில் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை சக்திப்படுத்தும் பாதையில் வேண்டுமென்றே திட்டமிட்டு தடைகற்களை ஏற்படுத்தி வருவதை இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது என்றார்.

உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி நாடகவும், பல நாடுகளுக்கு எதிராக சூழ்ச்சி மற்றும் குழப்பம் செய்து வரும் நாடான இஸ்ரேலுடன் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் உறவினை பல அமைப்புகள் கண்டித்துள்ளன. அதே போன்று இஸ்ரேலின் ஏஜெண்டுகள்  பல நாடுகளில் மதவாத பிரச்சனைகளை ஏற்படுத்தி வருவதும் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம்  மூன்று இஸ்ரேலிய பிரஜைகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இது போன்ற போலியான பிரச்சாரங்களில் பொதுமக்கள் அச்சமடையவும் , உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கவும் வாய்புள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இஸ்ரேலிய ஏஜென்டுகள் மீடியாவினரைக்கூட காசு கொடுத்து வாங்கும் திறன் படைத்தவர்கள். அதன் ஒரு பகுதியாகக்கூட இந்த பிரச்சாரங்கள் இருக்கலாம் என தெரிவித்தார் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான். அதே போன்று அவதூறுப் பிரச்சாரங்களைக் கண்டு மக்கள் ஏமாந்து விட வேண்டாம் எனவும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்த்யா இது விஷயத்தில் தலையிட்டு சட்டப்படி ஜனநாயக ரீதியில் போராடி வரும் இயக்கங்களுக்கு எதிராக இது போன்ற போலியான பிரச்சாரங்களை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இந்த அவதூறுப் பிரச்சாரம் தொடர்பாக தேசிய அளவில் புகழ்பெற்ற தலைவர்களான செய்யது சஹாபுதீன் (முன்னால் எம்.பி), தொல் திருமாவளவன் எம்.பி, தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, டாக்டர். ஜஃபருல் இஸ்லாம் கான், பிரசிடென்ட், ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸ்-யே-முஷாவரத், டாக்டர் ஜான் த்யாள், உறுப்பினர் நேஷன் இன்டெக்ரேஷன் கவுன்சில், அப்துல் காலிக், பொதுச்செயலாளர் (லோக் ஜன சக்தி), பேராசிரியர் மார்க்ஸ், தலைவர் (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், தமிழ் நாடு), வழக்கறிஞர் பவானி ப. மோகன் மற்றும் பல சமூக, மனித உரிமை ஆர்வலர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பாடுபட்டு வரும் சமூக இயக்கங்களுக்கு எதிராக மீடியாக்கள் பரப்பி வரும் இது போன்ற போலி பிரச்சாரத்திற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

புதன், மார்ச் 07, 2012

UP தேர்தலில் வென்ற முஸ்லிம் MLA-க்களின் பட்டியல்

உ.பி.யின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது. பல்வேறு கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஓரளவு வாய்ப்புகளை வழங்கியிருந்தன.அதில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உ.பி.யின் 2012 தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், சமாஜ்வாடி கட்சி 225 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது எதிர்பாராத வெற்றியாகும்.

முலாயமின் கட்சி வெற்றிக்கு முஸ்லிம்கள் பெரும் உழைப்பை செலுத்தியுள்ளனர். முலாயம் இவ்வெற்றிக்கு முஸ்லிம்கள் - யாதவர்கள் என்ற இரு சமூகத்தையும் பயன்படுத்தினார். ஆனால் அது மட்டுமே முழு வெற்றிக்கும் காரணமல்ல. மாயாவதியின் ஆட்சியில் உயர் சாதி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் தங்களிடம் வேலை செய்யும் தலித்துகளுக்கு பெரும் தொகையை ஊதியமாக வழங்க வேண்டியிருந்தது. மேலும் வருமான வரியும், மின் கட்டணமும் பெருமளவில் செலுத்த வேண்டியிருந்தது. அது அவர்களைப் பொறுத்தவரை மிகுந்த சிரமத்தை தந்தது.

இதன் மூலம் மாயாவதியின் சமூக தொழில்நுட்ப சூத்திரம் தோல்வியை சந்தித்தது. முலாயமின் முஸ்லிம்-யாதவர் துருப்பு சீட்டு வெற்றிபெற்றது.

புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் Dr. அயூப் அவர்களால் துவங்கப்பட்ட சமாதான கட்சி (PEACE PARTY) யின் வெற்றியும் ஒரு நல்ல செய்தியாகும். கலீதாபாத் தொகுதியில் மிக எளிதாக வென்ற அவரின் வெற்றியையும் சேர்த்து அக்கட்சி 6 இடங்களில் வென்றுள்ளது. 80 களில் Dr. பரீதி அவர்களின் முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி சில இடங்களில் வென்றது. அதன் பிறகு தற்பொழுது தான் சமாதானக் கட்சி உருவெடுத்துள்ளது.

பல்வேறு கட்சிகள் வழங்கிய சீட்டுகளில் வென்ற முஸ்லிம்களின் பட்டியல் இதோ: 
1-பாடோஹி, ஜகித் பெக் SP
2-முஹம்மடபாத்,  சிப்கத்துல்லாஹ் அன்சாரி, சுயேச்சை
3-சஹூரபாத், செய்யிதா ஷதாப் பாதிமா, SP
4-ஜான்பூர்,  நதீம் ஜாவேத், காங்கிரஸ்
5-சிகண்டர்பூர்,  ஜியாவுதீன் ரிஜ்வி   SP
6-மாஉ,  முக்தார் அன்சாரி, சுயேச்சை
7-டிடர்கஞ்,  அதில் ஷேக், SP
8-நிசாமாபாத், அலம்படி,  SP
9-முபாரக்பூர்,  ஷாஹ் ஆலம்,  BSP
10-கோபல்பூர்,  வசீம் அஹ்மத்,  SP
11-ராம்பூர் கர்க்கன, Choudhari Fasiha Bashir, SP
12-பதர்தேவா, சாகிர் அலி, SP
13-கலீதாபாத், Dr. முஹம்மது அயுப், Peace party
14-டுமரியகஞ், கமல் யூசுப் மாலிக், Peace party
15-உற்றால,  ஆரிப் அன்வர் ஹஷ்மி,  SP
16-டுல்சிபூர், அப்துல் மஷ்ஹூத் கான், SP
17-ஷ்ராவாஸ்தி, முஹம்மது ரம்ஜான், SP
18-பஹ்ரைச், Dr. வாகர் அஹ்மத் ஷாஹ், SP
19-தண்ட, அஜிமுல் ஹக் பஹ்ல்வான், SP
20-குர்சி, பரீத் மக்பூஜ் கித்வாய், SP
21-தென் அலகாபாத், ஹாஜி பர்வேஸ் அகமது, SP
22-ஹுல்புர், சயீத்  அஹமத், SP
23-பபாமு. அன்சார் அகமது, SP
24-செயில், ஆஷிப் முகமது ஜாப்ரி, பகுஜன் சமாஜ் கட்சி
25-ஹுசைன்கஞ், முகமது ஆசிப், பகுஜன் சமாஜ் கட்சி
26-பதேபூர், சையத் காசிம் ஹசன், SP
27-சிசமு, ஹாஜி இர்ஃபான் சொலான்கி, SP
28-போஜ்புரி, ஜமாலுதீன் சித்திக், எஸ்.பி.
29-Isauli, அப்ரார் அகமது, SP
30-திலோய், முகமது. முஸ்லீம் காங்கிரஸ்
31 லக்னோ மேற்கு, முகமது ரஹ்மான், SP
32-பங்கர்மு, பட்லு கான், SP
33-ஷஹபாத், பாபு கான், SP
34-லஹர்பூர், ஜாஸ்மிர் அன்சாரி, பகுஜன் சமாஜ் கட்சி
35-பிலிபிட், ரியாஜ் அகமது, SP
36-போஜிபுற, Shazil இஸ்லாமியம், indep
37-மீர்கஞ், சுல்தான் பேய், பகுஜன் சமாஜ் கட்சி
38-பஹேரி, அதாஉர்ரஹ்மான் , SP
39-படாவுன், அபிட் ரஸா கான், SP
40-பில்சி, முசர்ராத் அலி கலைஞர் ரோய் பிட்டன், பகுஜன் சமாஜ் கட்சி
41-படியலி, நஜீவா ஜீனத் கான், SP
42-அலிகார், ஜாபர் ஆலம், SP
43-கோயில், சமீர் உள்லாஹ் கான், SP
44-புலண்ட்ஷஹ்ர், முகமது அலீம் கான், பகுஜன் சமாஜ் கட்சி
45-முரட்நகர், வஹாப், பகுஜன் சமாஜ் கட்சி
46-லோனி, ஜாகீர் அலி, பி
47-சிவல்க்ஹஸ், குலாம் முகம்மது, SP
48-ஹசன்பூர், கமல் அக்தர், SP
49-அம்ரோஹா, மெஹபூப் அலி, SP
50-ணைகவான் சதாத், அஷ்பாக் அலி கான், SP
51-ராம்பூர், அசம் கான், SP
52-சம்ராஉஅ, அலி யூசுப் அலி, BSP
53-சம்பல், இக்பால் மெஹ்மூத், SP
54-பிளறி, முஹம்மத் இர்பான், SP
55-குண்டர்கி, முஹம்மத் ரிழ்வான், SP
56-மொரடபாத் நகர், முஹம்மத் யூசுப் அன்சாரி, SP
57-மொரடபாத் ரூரல், Shameemul Haq, SP
58-காந்த், அனீசுர் ரெஹ்மான், Peace party
59-சந்திபூர், இக்பால், BSP
60-பர்ஹபூர், முஹம்மத் காஜி, BSP
61-நஜிபபாத், தஸ்லீம், BSP
62-மீரபூர், ஜமில் அஹ்மத் கஸ்மி, BSP
63-சர்தவால், நூர் சலீம் ரண, BSP
64-புதான, நவஜிஷ் ஆலம் கான், SP

செவ்வாய், மார்ச் 06, 2012

பீமாபள்ளி துப்பாக்கிசூடு: புலனாய்வை திசை திருப்பும் முயற்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் எச்சரிக்கை

பீமாப்பள்ளி துப்பாக்கி சூடு நீதி கோரி பேரணி
திருவனந்தபுரம்: பீமாப்பள்ளி துப்பாக்கிசூடு விசாரணை அறிக்கையை மூடி மறைக்க முயற்சி செய்தால் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடுமையாக எச்சரித்துள்ளது. வழக்கின் விசாரணையை திசை திருப்பும் முயற்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஒருபோதும் அனுமதிக்காது என்று அதன் மாநில பொதுச் செயலாளர் P.அப்துல் ஹமீது அவர்கள் கூறியுள்ளார். 

பீமாபள்ளியில் நடந்த ஒரு சிறு பிரச்சினையை பயன்படுத்தி காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி 6 அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்தது. விசாரணை அறிக்கையை சட்ட சபையின் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி திருவனந்தபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்பாடு செய்திருந்த பேரணியை துவங்கி வைத்துப் பேசும்போது இவ்வாறு கூறினார். 

ஒன்றரை மாதத்திற்கு முன்பே நீதி விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட்ட பிறகும் அரசு எவ்விதமான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. தொடர் நடவடிக்கையை முடக்கும் முயற்சியாக அரசு நீதி விசாரணை அறிக்கையை சபையில் விவாதிக்க தயக்கம் காட்டி வருகிறது. பீமாப்பள்ளி துப்பாக்கி சூடு சம்பவம் காவல்துறையின் மிகப் பெரிய சதியின் ஒரு பகுதி தான் என்று அப்துல் ஹமீது அவர்கள் சுட்டிக்காட்டினார். அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் பின்பற்றவில்லை. அன்றைய மாவட்ட ஆட்சியரும், துணை ஆட்சியரும் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு அனுமதி எதையும் கொடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர் என்றும் கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் சலீம் கரமண, செயலாளர் சரபுதீன் மௌலவி, சமூக ஆர்வலர் விழிஞ்சம் இசாக், SDPI மாவட்ட துணை தலைவர் நிஜாம் மணக்காடு, NCHRO தலைவர் அப்துஸ்ஸலாம் மாஸ்டர், A இப்ராகிம் குட்டி, NWF மாவட்ட தலைவர் நசீமா ஷம்நாடு, கேம்பஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் சஜாத் ஆகியோரும் பேரணி துவங்கும் முன்பு பேசினர்.

திங்கள், மார்ச் 05, 2012

சமூக மேம்பாட்டுதுறை - பிப்ரவரி மாத ரிப்போர்ட்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூகத்தை மேம்படுத்தும் பணியில் தனது செயல்பாட்டை தொய்வின்றி தொடர்ந்து செய்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் அதற்கான அறிக்கையை சமுதாய மக்கள் மன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் சென்ற மாதம் முதல் ஒவ்வொரு மாதத்திற்கான ரிப்போர்டை நமது தளத்தில் பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற செயல்பாடுகள், பணிகள் மற்றும் உதவிகள் பற்றிய ஓர் பார்வை!

சென்னையில் சமூக மேம்பாட்டு துறை சார்பாக ஏழை பெண்ணிற்கு திருமண உதவி அளிக்கும் பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர் சுலைமான்

கன்னியாகுமரி:

குளச்சல் ஜமாத்திற்கு உட்பட்ட அப்துர் ரஹ்மானின் மகன்  அல்-அமீனுடைய படிப்பு செலவிற்காக கல்வி உதவித்தொகையாக ரூபாய் 5000/-  வழங்கப்பட்டது.

திங்கள் சந்தை:

ஜைனபா என்பவரின் மகன் அபூதாஹிருடைய மருத்துவ செலவிற்காக ரூபாய் 4500/- வழங்கப்பட்டது.

மாதவலாயம்:

டயாலிசிஸ் செய்வதற்காக ரூபாய் 3500/-ம் மாதவ்லாயத்தில் மருத்துவ முகாமிற்காக ரூபாய் 10662/- மற்றும் திட்டுவிலளையில் ரூபாய் 1000/-மும் வழங்கப்பட்டது. மேலும் நாகர்கோவில் சூரங்குடியில் ஒரு மாணவனின் படிப்பிற்கு கல்வி உதவித்தொகை ரூபாய் 5000/- மற்றும் மருத்துவ உதவியாக ரூபாய் 1500/-ம் வழங்கப்பட்டது. மேலும் 5 யூனிட் அளவிற்கு இரத்ததானம் செய்யப்பட்டது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு  ரூபாய் 3000/- மற்றும் ரூபாய் 1500/- மதிப்பில் சேலைகளும் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்:

கல்வி உதவியாக ரூபாய் 500/-ம் விபத்து மற்றும் மருத்துவ உதவியாக ரூபாய் 46,000/- வழங்கப்பட்டது.

திருப்பூர்:

கல்வி உதவித்தொகையாக ரூபாய் 2000/-மும் பொருள் உதவியாக ரூபாய் 350/-ற்கும் வழங்கப்பட்டது. மேலும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட முதியோர்கள் கலந்து பயன் பெற்றனர்.

கோவை வடக்கு:

மேட்டுப்பாளையம் குன்னூரிலும், ஊட்டியிலும் இரத்த வகை கண்டறியும் முகாம்கள் நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். சுமார் 17000/- அளவில் இதற்காக செலவு செய்யப்பட்டது. மேலும் இலவச தையல் பயிற்சி பள்ளியில் கடந்த மாதம் மட்டும் 23 பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

சென்னை:

கல்வி மற்றும் கம்ப்யூட்டர் படிப்பிற்காக ரூபாய் 10500/-ம் 6 முதியவர்களுக்கு ரூபாய் 650/- வீதமும், சிறு நீரகம் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களுக்கு ரூபாய் 8000/-மும், திருமண உதவித்தொகையாக 12500/-ம் வழங்கப்பட்டது. மேலும் 13 யூனிட் அளவிற்கு இரத்த தானம் செய்யப்பட்டது. விதவை பெண் ஒருவருக்கு மாதா மாதம் ரூபாய் 500/-வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தேனி:

கடையநல்லூரைச் சேர்ந்த ஒருவர் கம்பம் வந்த பிறகு இறந்துவிட்டார். அவரது ஜனாசாவை அவரின் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பதற்கு ஏற்பாடு செய்ததுடன் குடும்ப செலவிற்காக ரூபாய் 24,500 கொடுக்கப்பட்டது. அதே போன்று நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக கர்பப்பை நோய் ஆலோசனை வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் 77 பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மேலும் மருத்துவ உதவியாக ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

கொடுரமான முறையில் கொள்ளப்பட்ட முஹம்மது அல் துர்ராவின் மரணம் குறித்து 11 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை !

பதினொன்று ஆண்டுகளுக்கு முன்பு காஸ்ஸாவில் சியோனிச பயங்கரவாத இஸ்ரேல் ராணுவத்தின் துப்பாக்கி தோட்டாகள் தாக்கி இறுதி மூச்சை விட்ட பலஸ்தீன் பாலகன் முஹம்மது அல் துராவின் மரணத்தை குறித்து விசாரணை நடத்த பிரான்சு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி காஸ்ஸாவில் நெட்ஸாரிமிற்கு அருகே தனது தந்தையின் மடியில் கிடந்து சியோனிஸ்டுகளின் துப்பாக்கி தோட்டா தாக்கிய 12 வயதான துரா மரணமடைந்தார். இஸ்ரேலின் கொடூரத்தின் அடையாளமாக உலக அதிர்ச்சியுடன் கண்ட முஹம்மது அல் துராவின் மரணக்காட்சிகளை முதன் முதலாக ஃபிரான்சு நாட்டு தொலைக்காட்சி சேனலான பிரான்ஸ்-2 ஒளிபரப்பியது. சார்ல்ஸ் எண்டர்லி என்ற ரிப்போர்டர் இந்த காட்சிகளை வெளியிட்டார். கான்கீரீட் சுவற்றின் பின்னால் ஒளிந்துகொண்டு சொந்த மகனை துப்பாக்கி தோட்டாக்களிலிருந்து பாதுகாக்க 45 நிமிடங்களாக முயற்சித்த தந்தை ஜமால் அல்துரா ராணுவத்தினரிடம் சுடாதீர்கள் என கெஞ்சினார்.
ஆனால், மனித நேயம் சிறிதும் இல்லாத சியோனிஸ்டுகளுக்கு இந்த கோரிக்கை எல்லாம் காதில் கேட்கவா செய்யும். அவர்களது கொடூரத்தை அரங்கேற்றினார்கள். இறுதியில் முஹம்மது அல் துரா தோட்டா தாக்கி தனது தந்தையின் மடியில் கிடந்து மரணித்தார். தந்தையின் மடியில் துடிதுடித்து மரணிக்கும் காட்சியை பிரான்சு சேனல் ஒளிபரப்பியது. இக்காட்சிகள் போலியானது என கூறி ஊடக விமர்சகரான ஃபிலிப் கார்ல்ஸெண்ட்ரி என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அவர் மீது அவதூறு குற்றம் சாட்டப்பட்டது. 


இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 2008-ஆம் ஆண்டு ஃபிலிஃப் செண்ட்ரி மேல் முறையீடு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிப்போர்டர் எண்டரிலினும் மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பிரான்சு நீதிமன்றம் முஹம்மது அல் துராவின் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

ஃபலஸ்தீன் போராட்டத்தின் சின்னமாக கருதப்படும் முஹம்மது அல் துராவின் பெயரை ஃபலஸ்தீன் தெருக்களுக்கும், டீ ஷர்டுகளுக்கும் அளித்து அவரது உயிர் தியாகத்தை அணையாமல் ஃபலஸ்தீன் மக்கள் பாதுகாத்து வருகின்றனர். 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முஹம்மது அல் துரா செய்திகளில் இடம் பெற்றுள்ளார்.

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்