அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், பிப்ரவரி 29, 2012

வேளச்சேரி எண்கவுண்டர் - உண்மை கண்டறியும் குழுவின் இடைக்கால அறிக்கை

சென்னை: கடந்த 22ஆம் தேதி அன்று சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையர்கள் என்று கூறப்பட்டு 5 வாலிபர்கள் காவல்துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்தியாவில் பல இடங்களிலும் வங்கிகளை உடைத்து லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்திருப்பதாகவும், அவர்களை மடக்கி பிடிக்க முயன்றபோது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர்கள் அனைவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் காவல்துறை சார்பில் கூறப்பட்டது.

இருப்பினும் இந்த எண்கவுண்டர் சம்பவம் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடுமட்டுமல்லாமல் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஒருவரின் குடும்பாத்தாரிடம் விசாரணை செய்த போது காவல்துறையினர் கூறியதற்கு முரணான பல செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. எனவே இது தொடர்பான் உண்மையை கண்டறியும் விதத்தில் என்.சி.ஹெச்.ஆர்.ஓ உட்பட இன்னும் சில அமைப்புகள் சார்பாக 9 நபர்கள் கொண்ட குழு பேராசிரியர் மார்க்ஸ் தலைமையில் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
உண்மை கண்டறியும் குழு தனது விசாரணையை தொடங்கிய போது காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் அவர்களை விசாரணை செய்வதை தடுத்து வந்தனர். இதனால் மாநகர காவல்துறை ஆய்வாளர் திரிபாதியை சந்தித்து அவர்களுக்கு எதிராக புகார் ஒன்றை அளித்தனர்.

உண்மை கண்டறியும் குழு தங்களுடைய இடைக்கால அறிக்கையை பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது வெளியிட்டது. எட்டு பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் வைத்து பேராசிரியர் மார்க்ஸ் வெளியிட்டார்.


1. பேராசிரியர் மார்க்ஸ் (பீப்புல்ஸ் யூனியன் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் (பி.யு.ஹெச்.ஆர்)

2. பேராசிரியர் பிரபா கல்விமணி - பீப்புல்ஸ் எடுகேஷன் மூவ்மென்ட், திண்டிவனம்

3. கோ. சுகுமாரன் - ஃபெடெரேஷன் ஆஃப் ரைட்ஸ் (எஃப்.பி.ஆர்), புதுச்சேரி

4. வழக்கறிஞர் ரஜினி - பி.யூ.ஹெச்.ஆர், மதுரை

5. மதுமிதா டத்தா - கேம்பைன் ஃபார் பீஸ் அன்டு ஜஸ்டீஸ் (சி.பி.ஜே), சென்னை

6. சங்கர ராமன் சுப்பிரமணியன் - பத்திரிக்கையாளர், சென்னை

7. வழக்கறிஞர் ஏ.ஸ். அப்துல் காதர் - மாநில மக்கள் தொடர்பாளர், என்.சி.ஹெச்.ஆர்.ஓ

8. நிர்மலா - மூவ்மெண்ட் அகைன்ஸ்ட் செக்ஸுவல் எக்ஸ்பிலாய்டேஷன், (எம்.ஏ.எஸ்.ஈ.எஸ்), சென்னை

9. சந்திரா - பத்திரிக்கையாளர், சென்னை

கோரிக்கைகள்:

1. கொள்ளைக்காரர்கள் என்று கூறப்படுபவர்களை கைது செய்வதற்கு வாய்புகள் இருந்தும் துப்பாக்கியால் சுட்டதில் காவல்துறையினர் மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவருமே சம்பவ இடத்திலேயே கொலை செய்யப்பட்டுள்ளதால் உண்மையிலேயே அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்ற சந்தேகத்திற்கு விடை கிடைக்காமல் போயுள்ளது. இப்பேற்பட்ட சட்டத்திற்கு புரம்பான எண்கவுண்டர்களால் வழக்கின் உண்மை நிலை அறியப்படாமல் காவல்துறையினரால் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. காவல்துறையினரின் இத்தகைய செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த எண்கவுண்டரில் ஈடுபட்ட அனைத்து காவல்துறையினர் மீது உரிய பிரிவில் கிரிமினல் வழக்கு தொடரப்படவேண்டும்.

2. பொதுமக்கள் மத்தியில் இது ஒரு போலி எண்கவுண்டராக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. சி.பி.சி.ஐ.டியினர் இது தொடர்பாக உண்மையை கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே இவ்வழக்கை சி.பி.ஐற்கு மாற்றப்பட வேண்டும். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 5 நபர்கள் எண்கவுண்டர் மூலம் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கொடூரமானது ஆகும். இச்சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து பரீசீலனை செய்து உயர் நீதி மன்ற நீதிபதியும் நேரடி நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

3. மனித உரிமை கமிஷனின் விதியின் படி மாநகர காவல்துறை ஆய்வாளர் திரிபாதி, துணை ஆய்வாளர் சண்முக ராஜேஸ்வரன், கூடுதல் ஆய்வாளர் தாமரைக்கண்ணன் மற்றும் சுதாகர் உட்பட‌ எண்கவுண்டரில் ஈடுபட்ட 14 காவல்துறை அதிகாரிகள் மீது 302வது பிரிவின் கீழ் வழக்கு தொடர்பபட வேண்டும்.

4. மேலும் தமிழ் நாடு அரசு விதிகளின் படி எண்கவுண்டர் கொலைகள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

5. மேற்குறிப்பிடப்பட்ட விதியின் படி எண்கவுண்டரில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படக்கூடாது.

6. சுட்டுக்கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் வங்கி கொள்ளையர்கள் எனவும், அவர்கள் அனைவரும் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. முறையான விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பாக இவ்வாறு கூறுவதால் விசாரணை மேற்கொள்பவர்களின் மனநிலையும் அவ்வாறே மாறிவிடுகிறது. இதுபோல எத்தனையோ வேலைக்காக தென் இந்தியா வந்த வட இந்தியர்கள் இவ்வாறு போலி வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக மாணவர்கள் தீவிரவாத குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றனர். எனவே இது போன்ற பிரச்சாரங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

7. வங்கி கொள்ளை தொடர்பாக நடைபெற்ற இந்த எண்கவுண்டர் சம்பவம் தொடர்பாக பீஹார் மாநில மக்களை குறித்து தவறாக மக்கள் விளங்கும் அளவிற்கு ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேலும் அரசியல் தலைவர்கள் இவ்வாறு பிரச்சாரம் செய்யும் ஊடகங்களை கண்டிக்க வேண்டும்.

8. இது தொடர்பான விசாரணையை துவங்கியபோது காவல்துறையினர் ஒத்துழைக்க மறுத்தனர். உரிய பாதுகாப்பினை உண்மை கண்டறியும் குழுவிற்கு அவர்கள் வழங்கவில்லை. சென்ற வருடம் பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காவல்துறையினர் தலித் சமூகத்தவர்களை சுட்டுக்கொன்றனர். அச்சமயம் உண்மை கண்டறியும் குழுவை விசாரிக்க அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் நீதிபதி மனித உரிமை அமைப்பாளர்களை விசாரணை செய்வதிலிருந்து தடுக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு இல்லை என்று தீர்ப்பளித்தார். எனவே மனித உரிமைகள் பேணப்படவேண்டும். எனவே காவல்துறை ஆய்வாளரிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுவின் படி செயல்பட வேண்டும்.

டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - ஆந்திர பாப்புலர் ஃப்ரண்ட் பொதுக்குழு வலியுறுத்தல்

குர்னூல்: ஆந்திர மாநிலம் குர்னூல் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுக்குழு கூட்டம் 26 மற்றும் 27 ஆகிய இருதினங்களுக்கு நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் தொகுதி தலைவர்கள் கலந்து கொண்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் சகோதரர் அனீஸ் அஹமது அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்ட்நிர்வாகிகள்

 இப்பொதுக்குழுவிற்கு தலமைவகித்து தலைமை உரையாற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார் ஆந்திர மாநிலத் தலைவர் சகோதரர் முஹம்மது ஆரிஃப் அஹமது. மாநில பொதுச்செயலாளர் டி.எஸ். ஹபீபுல்லாஹ் அவர்கள் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி மற்றும் பிரச்சாரத்திற்கான ஒரு வருடகால அறிக்கையை சமர்பித்தார். அதனை தொடர்ந்து ஆண்டறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இப்பொதுக்குழுவின் போது தேர்தல் நடைபெற்று அதன் மூலம் சகோதரர் அப்துல் வாஹித் புதிய செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூக வலையமைப்பு மற்றும் சமூக இயக்கம் ஆகிய இருதலைப்புகளிலும் வகுப்பு நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் அனீஸ் அஹ்மத்

 பொதுக்குழுவின் இரண்டாம் நாள் தற்போதைய காலச்சூழ்நிலைகளில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு உறுப்பினர்களுக்கு மத்தியில் விரிவான விவாதம் நடைபெற்றது. இதன் அடிப்படையில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்ட் பொதுக்குழு உறுப்பினர்கள் 
1. நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்: இதுநாள் வரை மாநில அளவில் முஸ்லிம்களுக்கென்று கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் சராசரி வெறும் 4% மட்டுமே. ஆந்திராவில் வாழக்கூடிய முஸ்லிம்களின் விகிதாச்சாரத்தை கணக்கிடும் போது 4% என்பது மிகக்குறைவு. எனவே இதனை 10% உயர்த்த வேண்டுமென மாநில அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

2. முஸ்லிம்களின் நலனுக்காக ஒதுக்கப்படும் பட்ஜட் நிதியை அதிகரிக்க வேண்டும்: காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆட்சி நடைபெற்று மாநிலமான ஆந்திராவில் முஸ்லிம்களின் நலனுக்காக குறைவான தொகையே ஒதுக்கப்பட்டு வருகிறது. இது மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சில நலதிட்ட உதவிகளை தவிற வேறு எந்த பெரும் உதவியும் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைப்பதில்லை. மாநில அரசாங்கம் இதில் பாரபட்சமான நிலையை கடைபிடித்து வருகிறது. ஒட்டு மொத்த  மாநிலத்திலும் ஒதுக்கப்படும் நிதியில் வெறும் 0.34% மட்டுமே முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்படுகிறது. எனவே மாநில இதனை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் உதவித்தொகை வழங்குவதில் கூடுதல் உதவிகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
3. மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அப்பாவி முஸ்லிம்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளும் உடனே வாபஸ் பெறப்பட வேண்டும். பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்ட சிறை தண்டனை பெற்ற அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் விஷயத்தில் பாரபட்சத்துடன் செயல்பட்ட மாநில அரசை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. பொய்வழக்கில் சிறைச்சாலைகளில் சித்திரவதைகளை அனுபவித்த அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் அனைவருக்கும் உரிய நஷ்டஈட்டை உடனே மாநில அரசு வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
 4. ஆந்திர மாநில காவல்துறையில் ஃபாசிஸ சிந்தனை கொண்ட சில கருப்பு ஆடுகள் நுழைந்து மாநில அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களில் முதலாவதாக டி.ஜி.பி தினேஷ் ரெட்டி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார். ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் சமீபகாலமாக முஸ்லிம் இளைஞர்களை தாக்கியும், வகுப்புவாத வன்முறைகளை தூண்டும்விதத்தில் செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனை கிழித்து ரோட்டில் வீசியுள்ளனர். டி.ஜி.பி தினேஷ் ரெட்டி இஸ்ரேலிய தூதரகத்தின் நிர்வாகி அலோன் உஸ்பிஜை சந்தித்து உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை செய்துள்ளார். இது தேசத்துரோக செயலாகும். மேலும் நில மோசடி குற்றச்சாட்டுகளும் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே மாநில அரசு இதனை கருத்தில் கொண்டு தினேஷ் ரெட்டியை உடனடியாக பதிவி நீக்கம் செய்யவேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

இறுதியாக மாநில துணைத்தலைவர் அப்துல் வாரித் அவர்கள் உரை நிகழ்த்த இப்பொதுக்குழு நிறைவுபெற்றது.

எஸ்.டி.பி.ஐ அனைத்து இந்தியர்களுக்கான கட்சி - இ. அபூபக்கர்

பெங்களூர்: கர்நாடக மாநில சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பாக பெங்களூரில் மாபெரும் மாநாடு நடைபெற்றது பீப்புல்ஸ் பொலிடிக்கல் கான்ஃப்ரென்ஸ் (மக்கள் அரசியல் மாநாடு) என்ற இந்த மாநாடு பெங்களூரில் சிவாஜி நகரிலுள்ள சோட்டா மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.


 இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் உரையாற்றும்போது தேசத்தில் பெரும்பாலானவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வருகிறது. தேசத்தின் கட்டமைப்பு சீர்குலைந்து வருவதை சுட்டிக்காட்டினார். பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்து பேசிய அபூபக்கர் அவர்கள் கூறும்போது "பாரதிய ஜனதாவிற்கென்று தார்மீக நிலை என்ற ஒன்றே கிடையாது. மற்றக் கட்சிகளை காட்டிலும் தாங்கள் மாறுபட்டவர்கள் என்று மக்களை ஏமாற்று ஓட்டுகளை பெற்றனர். ஆனால் தற்போது பா.ஜ.கவின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.


எந்த ஒரு முஸ்லிமாவது காங்கிரஸ் கட்சியில் இணைந்தாலோ அல்லது ஜனதா தளத்தில் இணைந்தாலோ அக்கட்சி முஸ்லிம்களுக்கான கட்சியா? என்று யாரும் கேள்வி எழுப்புவதில்லை. ஆனால் என்னிடம் வந்து பல பேர் கேட்கும் கேள்வி என்னவெனில் எஸ்.டி.பி.ஐ முஸ்லிம்களுக்கான கட்சியா? என்று, ஆனால் நான் அவர்களுக்கு கூறுவது என்னவென்றால், எஸ்.டி.பி.ஐ முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல, தலித்களுக்கும், கிறிஸ்த்தவர்களுக்கும், இந்துக்களுக்கும் உண்டான கட்சியாகும். ஆம்! இந்தியாவின் குடிமகன் ஒவ்வொருக்கும் உண்டான கட்சிதான் எஸ்.டி.பி.ஐ" இவ்வாறு அவர் உரையாற்றினார்.


எஸ்.டி.பி.ஐயின் கர்நாடக மாநிலத்தலைவர் அப்துல் மஜீத் பேசும் போது, இந்த தேசத்தில் ஒவ்வொரு தனி நபரும் சந்தித்து வரும் பிரச்சனைகளை விரிவாக எடுத்துக்கூறினார். அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்பாட்டினால் இன்று இந்தியா முழுவதும் மக்கள் சிரமப்பட்டு வாழ்வதாக கூறினார். இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின்பு ஆட்சி செய்த அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் ஊழலில் ஈடுபட்டிருக்கின்றனர். வெளிநாடுகளில் உள்ள வங்கிகளின் நமது அரசியல்வாதிகளின் கறுப்பு பணங்கள் கணக்கின்றி கிடப்பதாக அவர் கூறினார்.


மாநில அரசை விமர்சித்து பேசிய அவர் கூறும்போது கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க அரசு பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறது. அதன் அமைச்சர்கள் ஊழல், கற்பழிப்பு, போன்றவற்றின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் சமீபத்தில் பா.ஜ.க அமைச்சர்கள் இருவர் சட்டமன்றத்திலேயே வைத்து ஆபாச வீடியோவை பார்த்திருக்கின்றனர் என்று கூறினார்.


இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதாகவும், இந்தியாவின் கல்வி முறை நாளுக்கு நாள் மோசமாகி வருவதையும் சுட்டிக்காட்டினார். அடுத்ததாக உரை நிகழ்த்திய ராஜிய ரைத்தா சங்கின் தலைவர் கொடிஹல்லி சந்திரசேகர் உரையாற்றும்போது "இந்திய அரசியலமைப்பு சாசன சட்டத்தில் எந்த இடத்தில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது? நான் இதற்கு முன்னால் பிற்படுத்தப்பட்ட கமிஷனின் தலைவராக இருந்துள்ளேன். முஸ்லிம்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற முறையில் அவர்களுக்கென்று இடஒதுக்கிடு வழங்கப்படவெண்டும். என்று கூறினார். எஸ்.டி.பி.ஐ தற்போது வேகமாக வளர்ந்து வரக்கூடிய அரசியல் கட்சியாக விளங்குகிறது. இதன் செயல்பாடுகளை பட்டிதொட்டியங்கும் பரப்பவேண்டும் என கூடியிருந்த மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும் கூறும்போது இந்தியாவில் எஸ்.டி.பி.ஐ மட்டுமே இந்திய அரசியல் அமைப்பு சாசன சட்டத்தை பின்பற்றி வருகிறது எனவும், நீங்கள் அனைவரும் டாக்டர் அம்பேத்கர் மற்றும் திப்பு சுல்தான் போன்ற பெரும் பெரும் தலைவர்களின் வழியில் நடக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைவர் முஹம்மது இலியாஸ் தும்பே உரையாற்றும்போது "எல்லோரும் முஸ்லிம் சமூகத்தின் மேம்பாடு பற்றி பேசினார்கள் என்றால் எஸ்.டி.பி.ஐ முஸ்லிம்களின் கட்சி என்றல்ல மாறாக இன்று இந்தியாவில் கல்வியிலும், பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின் தங்கிய சமூகமாக முஸ்லிம் சமுதாயம் இருப்பதனால் தான் அனைவரும் முஸ்லிம் சமூகத்தின் வலிமைக்காக குரல் கொடுத்துள்ளனர். மேலும் அரசியல் என்று வந்ததும் எல்லா கட்சிகளும் முஸ்லிம்களை ஓட்டு வங்கியாகவே பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இலியாஸ் தும்பே உரையாற்றினார்.

எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயலாளர் ஆவாஷரீஃப் உரையாற்றும்போது "வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு முன்னால் நமது தேசம் வலிமைமிக்க தேசமாக இருந்து வந்தது. வெள்ளையர்களின் ஆதிக்கத்திற்கு பின்னால் 40 கோடி இந்தியமக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். மாதம் வெறும் 950/- மட்டுமே சம்பாதிக்கக்கூடிய எத்தனையோ குடும்பங்கள் இந்தியாவில் வாழ்கிறது. எஸ்.டி.பி.ஐ அப்பேற்பட்ட மக்களின் வலிமைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் என்றார். இந்தியாவில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அனைத்தும் லஞ்சத்திலும் குற்றச்செயலிலும் ஊறித்திழைத்திருக்கின்றனர். இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் அரசியல் நிலை மாற்றப்படவேண்டும். மக்களுக்காக, மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கக்கூடிய அரசியல் சக்தியாக எஸ்.டி.பி.ஐ உருவெடுத்துவருவதாக அவர் கூறினார். ஒவ்வொரு தேர்தலின் போது எதிர்மறை அரசியலை கையாண்டு வந்த ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்கள் இந்த முறை நேர்மறை அரசியலை கையில் எடுத்திருக்கின்றனர். இதன் மூலம் இந்தியாவின் நிலை மீட்டெடுக்கப்படும் என்று கூறினார்.

இம்மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் செய்யது இர்ஃபான் இபுராஹிம் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்ட கமிஷனின் முன்னால் தலைவர் துவரகனாத், எஸ்.டி.பி.ஐயின் தமிழக பொதுச்செயலாளர் முஹம்மது ரஃபீக், தேசிய துணைத்தலைவர் டாக்டர் நஜ்னி பேகம், கர்நாடக பொதுச்செயலாளர் அப்துல் ஹம்மான், மற்றும் பலர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

அமெரிக்க ராணுவத்தினர் குர்ஆன் எரிப்பு - பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் ஒன்றில் குர்ஆன் எரிக்கப்பட்ட சமப்வத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. இந்த கொடூர செயலின் பின்னனியில் உள்ளவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா மற்றும் கூட்டுப் படைகள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் கே.மெ. ஷரீஃப்  அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குர்ஆன் எரிப்பைக் கண்டித்து ஆப்கான் மக்களின் ஆர்பாட்டம்

 அமெரிக்க இராணுவத்தினர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது முதல் தடவை அல்ல. 2008ஆம் ஆண்டில் அமெரிக்கா கைது செய்து வைத்துள்ள போர் குற்றவாளிகள் இதைப்போன்ற ஏராளமான சம்பவங்களை கண்டதாக தங்கள் விசாரணையின் போது தெரிவித்திருக்கின்றனர். ஒரு சம்பவத்தில் குர்ஆனை அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர். உலக முஸ்லிம் மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதால், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்குமாறு அமெரிக்க அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றும் கே.எம். ஷரீஃப் கேட்டுக்கொண்டார்.

சனி, பிப்ரவரி 18, 2012

மேற்கத்திய நாடுகளின் ஈரானுக்கெதிரான தடைகள் துருக்கியை கட்டுப்படுத்தாது

துருக்கியின் எரிசக்தித்துறை அமைச்சர் டநேர் இல்டிஸ்
மேற்கத்திய நாடுகளால் தெஹ்ரானின் ஆக்கப்பூர்வ அணுசக்தி உலைகளுக்கு எதிராக விதிக்கப்படும் தடைகள் அன்காராவை கட்டுப்படுத்தாது என்று துருக்கியின் எரிசக்தித்துறை அமைச்சர் டநேர் இல்டிஸ் தெளிவுபடுத்தியுள்ளார். ஆற்றல் பங்கீட்டில் டெஹ்ரானோடு நாங்கள் கொண்டுள்ள வலுவான தொடர்பு தொடர்ந்து நீடிக்கும் என்றும் கூறினார்.         

"துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உறுப்பினர் அல்ல. ஆகவே, அதன் தீர்மானங்கள் எங்களை கட்டுப்படுத்தாது. அதுபோலவே, அமெரிக்காவால் எடுக்கப்படும் எந்த முடிவும் எங்களை கட்டுப்படுத்தாது," என்று தென்னாப்பிரிக்க தொழில் மற்றும் வர்த்தகத்  துறை அமைச்சர் ரோப் டேவிஸ் உடன் வியாழனன்று துருக்கி தலைநகர் அங்காராவில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.

டேவிஸ் தனது பேட்டியின் போது, பொருளாதாரத் தடையால் உலகளாவிய அளவில் ஏற்படும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வும், உலகளாவிய அளவில் பெட்ரோலியப் பொருட்களை விநியோகிப்பதில் ஏற்படும் சிரமங்களையும் வருத்தத்தோடு சுட்டிக் காட்டினார்.

புத்தாண்டிற்கு முந்தைய இரவில் அமெரிக்கா, ஈரானுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது. அது மற்ற நாடுகள் ஈரானிலிருந்து எண்ணை இறக்குமதி செய்வதையும், ஈரானின் மத்திய வங்கியோடு பரிவர்த்தனையில் ஈடுபடுவதையும் தடுக்கிறது.

ஜனவரி 23 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இந்த தடையை அங்கீகரித்தனர். அதில் ஈரானிலிருந்து எண்ணை இறக்குமதி செய்யாதிருப்பதும், ஈரான் மத்திய வங்கியின் நிதிகளை முடக்குவதும் அடங்கும். மேலும், தங்கம், வெள்ளி மற்றும் பிற விலையுயர்ந்த உலோகங்களை தெஹ்ரானுக்கு விற்பதையும் தடை செய்தது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி நாடுகள், ஈரான் அணு சக்தியை தன்னுடைய ராணுவப் பயன்பாட்டிற்கு  பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி வந்தது. இதனைச் சொல்லியே இந்த இஸ்லாமியக் குடியரசின் மீது முழு பொருளாதாரத் தடையை விதிக்க மற்ற நாடுகளையும் வற்புறுத்தி வருகிறது.

ஈரான் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தது. அது அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகவும், உலகளாவிய அணு சக்தி முகமையின் உறுப்பினர் என்றும் விளக்கமளித்து வந்தது. அணு தொழில் நுட்பத்தை அமைதி வழியில் பயன்படுத்த தனக்கு உரிமை உள்ளது என்றும் சுட்டிக்காட்டி வந்தது.  

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்