அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், அக்டோபர் 02, 2012

பாரதியார் பற்றியான ஆய்வு

 

bharathi4.jpg அப்படியென்ன பொல்லாத பாரதியின் காலம்..?
-வே. மதிமாறன்
 முன்னுரை

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த துணைக் கண்டத்தில் இருந்தபோது, நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன.
அதில் முக்கியமான இரண்டு,
1. இந்தியா என்ற ஒரு நாடு உருவானது.
2. இந்த இந்தியச் சமூகம், நிலப்பிரபுத்துத்திலிருந்து முதலாளித்துவ சமூகமாக மாறும் முயற்சியில் இறங்கியது. ஏறக்குறைய மாறியது.
இதில் மிகக் குறிப்பாக இந்தியாவின் நகரங்கள், செழிப்பான பகுதிகள் முதலாளித்துவ முகம் பெறலாயின. இந்த நகரங்களிலும், செழிப்பான பகுதிகளிலும் வாழ்ந்த - இந்திய மன்னர்கள், செல்வந்தர்கள், பார்ப்பனர்கள் இவர்களுக்கு நிலப்பிரபுத்துவ தோல் உறிந்து, முதலாளித்துவ தோல் வளர ஆரம்பித்தது.
மன்னர்களும், செல்வந்தர்களும் கள்ளுப் பானையிலிருந்து - விஸ்கி பாட்டிலுக்கு மாறினார்கள். முதலாளித்துவ `சொகுசு` தன் மீது படரும் வரை பொறுமையாக அமைதி காத்தார்கள்.
ஆனால், பார்ப்பனர்கள் முதலாளித்துவம் தம்மை வந்து அடையும்வரை காத்திருக்க அவர்களுக்குப் பொறுமை இல்லை அல்லது பொறுமையாக இருந்தால், ‘வேலைக்காகாது’ என்ற காரணத்தால், முதலாளித்துவத்தை தன் இரண்டு கைகளையும் நீட்டி அன்போடு, `வருக, வருக` என்று வரவேற்றபடி, அதிவேக வாகனத்தில் ஏறி, முதலாளித்துவத்திடம் முதலில் சென்றடைந்தார்கள்.
மன்னர்களிடம் இருந்த தனது மரியாதைக்குரிய புரோக்கர் பணியை அல்லது ஆலோசனை வழங்கும் பணியை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குத் தானாகவே `பணி மாற்றம்` செய்து கொண்டார்கள்.

ஆம்,
மன்னர்களிடம், மன்னர்களுக்குக் கீழ் ராஜ குருவாக, ஆலோசகராக இருந்த பார்ப்பனர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வருகைக்குப் பிறகு மன்னர்களைவிடவும் அதிக எல்லைகளைக் கொண்ட பகுதிகளை ஆண்டார்கள். மன்னர்கள் மண்ணைக் கவ்வினார்கள்.
ஏகாதிபத்தியம் கொண்டு வந்த முதலாளித்துவத்தை அடைய பார்ப்பனர்கள் ஏறிய அதி வேக வாகனம் எது தெரியுமா?
ஆங்கிலம்.
சமஸ்கிருதம் தெரியாத பார்ப்பனர்களைக் கூட நிறைய பார்க்கலாம். ஆனால், ஆங்கிலம் தெரியாத பார்ப்பனர்களைப் பார்ப்பது அரிது, அரிது பார்ப்பதரிது.
ஆங்கிலத்தின் மீதான இந்த அன்பு, அந்த மொழியின் மீது ஏற்பட்ட காதலா?
ஆம். அவர்கள் அப்படியும் சொல்லிக் கொள்கிறார்கள்.
  bharti-image1.jpg
பிரிடடிஷ்காரனின் தாய் மொழி, தந்தை மொழி இரண்டுமே ஆங்கிலம்தான். அதன் பொருட்டேதான் பார்ப்பனர்களுக்கு, `சில்வர் டங்க்`  முளைத்தது. இரண்டாம் உலகப் போரின் போது இட்லர் வெற்றி பெற்று விடுவான் என்று நம்பி பார்ப்பனர்கள் ஜெர்மன் படிக்க ஆரம்பித்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
தனது சனாதனதர்மங்களோடே முதலாளித்துவத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட பார்ப்பனர்கள், தனது ஜாதிக்குள் எந்த சீர்திருத்தக் கருத்துகளையும் அறிவிக்காமல், சுற்றிக்கை விடாமல் குடுமியில் இருந்து கிராப்புக்கு மாறினார்கள்; மீசை வளர்த்துக் கொண்டார்கள்; சிரைத்துக் கொண்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, தன் குலப் பெண்களுக்கு கல்வியை தீவிரமாகக் கற்பிக்க ஆரம்பித்தார்கள்.
இப்படியாக ஆண்களூம், பெண்களூம் அரசு உத்தியோகம் பார்க்கத் தயாரானார்கள். கணவனை இழந்த பெண்களை மொட்டை அடித்து, முக்காடு போட்டு மூலையில் உக்காத்தி வைச்சபார்ப்பனியம், உடல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் மாத சுழற்சியை தீட்டுஎன்று சொல்லி அவளை அந்த மூன்று நாளும் வீட்டுக்கு வெளியே ஒதுக்கி வைத்து, அவள் மீது தீண்டாமையை அனுஷ்டித்து பெண்ணைக் கேவலப்படுத்திய பார்ப்பனியம், எந்த அறிவிப்பும் இன்றி, அந்தக் கொடுமைகளைத் தன் ஜாதிக்குள் முற்றிலுமாக ஒழித்துக் கொண்டது.
இது, முதலாளித்துவ தாக்கத்தால் அன்றி வேறு எதனால்?
இப்படி பார்ப்பன ஜாதிக்குள் கல்வி கட்டாயமக்கப்பட்ட சூழ்நிலையிலேயே பாரதி - சமூக சீர்திருத்தம், பெண்கல்வி குறித்துப் பாடுகிறார்.
இது பாரதியிடம் மட்டும் நிகழ்ந்த மாற்றமல்ல, ஒட்டுமொத்தப் பார்ப்பன சமூகத்திலேயே நிகழ்ந்த மாற்றம்.
தன் நலனில் அக்கறை கொண்டு ஆங்கிலக் கல்வி கற்ற பார்ப்பனியம், வழக்கம்போல் அந்தக் கல்வியையும் அடுத்தவற் கற்காமல் இருப்பதற்கு, அனைத்துத் தடைகளையும் விதித்தது.
(மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வில் சமஸ்கிருதம் ஒரு பாடமாக இருந்தது. பின்னர் வந்த நீதிக்கட்சி அரசு (பனகல் அரசர்) அதை நீக்கியது.)
அதையும் மீறி படித்தவர்களின் புகழை மறைத்தது.
ஆம், இதை முதலாளித்துவ வடிவம் பெற்ற சனாதன தர்மம் எனலாம்.
முதலாளித்துவ வடிவம் பெற்ற இந்த சனாதன பாணி முற்போக்கு, பாரதியிடமும் இருந்தது. பெண் கல்வி குறித்து, வீரவேஷம் கடடிப் பாட்டுப் பாடிய பாரதி, மிகவும் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து  பல சிரமங்களுக்கிடையே படித்து 1912 ல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரைப்பற்றி, ஒரு வார்த்தைக்கூட குறிப்பிடவில்லை. அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் சுயநினைவோடுதான் வாழ்ந்தார் பாரதி.
dr-muthulakshmi_reddi1.jpg
வேத, புராணக் காலத்துப் பெண்களின் புகழ், வெளிநாட்டு பெண்களின் புகழ் குறித்தெல்லாம் விரல் நுனியில் தகவல் வைத்திருந்த பாரதிக்கு, தான் வாழ்ந்த ஊரிலேயே வாழ்ந்த, ஒரு தமிழச்சியின் சாதனை தெரியாமல் போனது ஏன்? இதுதான் செலக்டிவ் அம்னீஷியாவோ?’
ஆம், முத்துலட்சுமி அம்மையார், பாரதி பரம்பரையினரால் கல்வி மறுக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்.
நிற்க.
தொடர் கட்டுரையாக எழுதும்போது, ‘இந்துத்துவாஎன்று குறிப்பிட்டிருந்தேன்.
இந்த இந்துத்துவாஎன்கிற வார்த்தை இந்த மதத்தைப் பாதுகாப்பது போலவும், ‘இந்துத்துவாதான் மோசமானது இந்து மதம் மிகவும் நல்லதுஎன்பது போன்ற அர்த்தத்தைத் தருவதாகவும் எனக்குப்பட்டதால், ‘இந்துத்துவாஎன்கிற வார்த்தையை இந்து மதம் என்று மாற்றிக் குறிப்பிட்டிருக்கேறன்.
                                                                                                                                                                                                              
தோழமையுடன்
 வே. மதிமாறன்
டிசம்பர் 2002
`பாரதி` ய ஜனதா பார்ட்டி நூலின் முதல் பதிப்புக்கான முன்னுரையில்

முதல் அத்தியாயம்
மார்க்சியம் பெண்களுக்காகப் பேசவில்லை’
‘அம்பேத்கர் வெறும் ஜாதித் தலைவர்’
‘பெரியார் பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதி’
‘இட்லர் வரிசையில் ஸ்டாலின்’
என்று அறிவுக் கொழுப்பெடுத்து அவதூறு அள்ளி வீசும் அறிஞர்கள்,
முரண்பாடுகளின் தொகுப்பான (’இந்து மத’ கருத்துகளில் மட்டும் முரண்பாடில்லாத) ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியைப் பற்றி சொல்லும்போது மட்டும் - தன் கருத்துகளை எல்லாம் பாரதி தலையில் சுமத்தி -
‘அவரை இப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்’, ‘அப்படிப் பார்ப்பது பாரதியை புரிந்து கொள்ளாத வறட்டுத் தன்மை’ என்று சுப்பிரமணிய பாரதிக்கு கிரீடம் சூட்ட முயற்சித்து, நம்மைத் தெளிவாக குழப்புவார்கள் - குழப்புவதில் தெளிந்தவர்கள்.

தொடர்ச்சியான முரண்பாடு, அதுவே பாரதியின் தனித்துவம்.
முரண்பாடுக்கான காரணம், தான் சொல்லுகிற செய்தியில் அர்ப்பணிப்பின்மை; நம்பிக்கையின்மை (சமூக சீர்த்திருத்தக் கருத்துகளில் மட்டும்)
பெண்விடுதலை குறித்த தனிப்பாடல்களில், தனிக் கட்டுரைகளில் ஓ…. வென்று சப்தமிடும் சுப்பிரமணிய பாரதி-அதை தொடச்சியாக மற்ற பாடல்களில் கடைப்பிடிப்பதில்லை.

தீவிரவாத(?) இயக்கத்தில் பங்கு கொண்டு மிதவாதிகளின் உப்பு சத்தியாக்கிரகத்தை, அவர்களின் இயக்கத்தை கடுமையாகச் சாட வந்த பாரதி,
‘கண்கள் இரண்டிருந்தும காணுந்திறமையற்ற
பெண்களின் கூட்டமடி! கிளியே!
பேசிப் பயனென்னடி|? -
என்கிறார்,
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தியவர்.

சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்கு வீர உரை ஆற்றுவது போல் பாடல் அதில்,
‘வீரரைப் பெறாத மேன்மை தீர் மங்கையை
ஊரவர் மலடியென்றுரைத்திடு நாடு’
……………………………………………………………………………..
……………………………………………………………………………..

‘ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும்
விணில் இங்கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்’
……………………………………………………………………………..
……………………………………………………………………………..

‘பெண்மை கொண்டேதோ பிதற்றி நிற்கின்றாய்’……………………………………………………………………………..
……………………………………………………………………………..

பெரும்படையுமாம் பெண்மையெங் கெய்தினை?’
-என்று பாரதியின் வாயால் சத்ரபதி சிவாஜி ‘ஆண்மையுரை‘ ஆற்றுகிறார்.
பாஞ்சாலி சபதத்தில், பெண்மைக்கு இழைக்கப்படும் தீங்கைக் கண்டு ‘கோ…’ வென்று கதறிக் கொண்டே வந்து, ‘பொம்பளைங்கள கேவலப்படுத்தறானுங்க பொட்டப்ப பசங்க’ என்கிற ரீதியில் -
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்கு துணையாகுமோ?’
-என்று
‘சேம்சைடு கோல்’ போடுகிறார் சுப்பிரமணிய பாரதி.

‘2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பெண்களுக்கு எதிராக சிந்தித்து இருக்கிறார்’ என்று கோபப்படுகிற ‘ஞாநி’ கள், 80 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் இப்படி முன்னுக்குப் பின் முரணாக இருந்திருக்றாரே என்று சந்தேகிப்பதுகூட இல்லை.
சுப்பிரமணி பாரதிக்கு மட்டும் இலக்கியத்தில் ‘இடஒதுக்கீடு’ போலும்.


 முரண்பாடுகளின் தொடரச்சியில், காந்தியை - காந்தியத்தை கேலி செய்து,
‘உப்பென்றும் சீனி என்றும் உள்நாடடுச் சேலை என்றும்
செப்பித் திரிவாரடி! கிளியே; செய்வதறியாரடீ!’

என்று கை கொட்டி சிரித்து கேலி செய்யும் பாரதி - மற்றொரு பாடலில்,
‘வாழ்க நீ; எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க; வாழ்க!’
- என்று வானுயர ‘கட்அவுட்’ வைத்து கைதட்டுகிறார்.

காரணம் - நல்லது கெட்டது என்று நாட்டில் பேசப்படுகிற அனைத்துச் செய்திகளையும் கவிதையாக்கி ரசிப்பது. அதன் பொருட்டே - அல்லாவைப் பற்றி பாடல், ஏசுவைப் பற்றிய பாடல், ரஷ்ய புரட்சி பற்றிய கவிதை, பெண் விடுதலை குறித்த பாடல்கள் இன்னும் குள்ளசாமி, கோவிந்தசாமி, யாழ்ப்பாணசாமி மீது பாடல்கள்.
தன் தேவைகளுக்காக எட்டயபுரம் ராஜா, மகாராஜாக்கள் மீதான சீட்டுக் கவிகள்.


முரண்பாடுகள் என்பது, ‘கவிதா மனோபாவம்’ போலும்.
‘உலகில் இந்து மத்திற்கு இணையாக ஒரு மதமும் கிடையாது. அதில் எல்லாம் இருக்கிறது.’ - என்று தோள்தட்டி, தொடை தட்டி - பாகம், பாகமாக அர்த்தமுள்ள இந்து மதம், யோக மாலிகா, ராக மாலிக என்று பேப்பர்களை வீணடித்த கண்ணதாசன், சாகும்போது மரண வாக்குமூலம் போல, ‘ஏசு காவியம்’ பாடிவிட்டு செத்துப் போனார்.

கண்ணதாசன் மாதிரி தனக்கென்று தத்துவம், இலக்கு எதுவும் இல்லாத பித்துக்குளி, புகழ் விரும்பி, தேவைகளுக்கு அடிமையானவர் என்று சுப்பிரமணிய பாரதியை நாம் சுருக்கிவிட முடியாது.
பெண் விடுதலை, சுதந்திரம், ரஷ்ய புரட்சி, உலகச் செய்திகள் என்று ‘எனக்கு இதெல்லாம் தெரியும் பார்’ என்ற பந்தா இருந்தாலும், பார்ப்பனியம், ‘இந்து மத’ சிந்தனையில் முரண்பாடுகள் இல்லாத முழு சுப்பிரமணய பாரதியை நாம் ‘தரிசிக்க’ முடிகிறது.
இந்தியாவை ‘பாரதம்’ என்று சொல்வதிலேயே கவனமாக இருந்திருக்கிறார்.
‘இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தியாவில் இல்லையே’

-என்ற ஒரு இடத்தைத் தவிர - தன் கவிதைகள் எல்லாவற்றிலும் ‘பாரத தேசம் என்று தோள் கொட்டுவதி’லேயே குறியாக இருந்திருக்கிறார், ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியர். அதுவும் பாரதத்தில்  வாழ்கிற அனைவரும் ‘ஹிந்துக்கள்’ என்று அடையாள அட்டை வேறு வழங்குகிறார்.
‘பாரதம், பரதன் நிலை நாட்டியது, இந்த பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இந்நாட்டை இவன் ஒன்று சேர்ந்து, அதன் மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்தியபடியால், இந்த நாட்டிற்கு பாரத தேசம் என்று உருவாயிற்று’ என்று புளுகுகிறார் என்றால், அது மகாகவியை கேவலப்படுதியதாகும். அதனால் ‘வரலாற்று ஆதாரங்களை அள்ளித்தருகிறார்’ என்று நாம் புளுகி வைப்போம்.

பாரத தேசம் என்று சொல்லாத நேரங்களில் - ‘இது ஆரிய நாடு’ எனறு அழுத்தமாகச் சொல்கிறார்.
‘ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொலும் வீரிய வாசகம்’
   (வந்தே மாதரம்)
என சுதந்திர தீ மூட்டி,

‘உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவும் இஃதை எமக்கில்லை ஈடே’
-என்று யாகம் வளர்க்கிறார்.

‘பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்’ என்ற குதூகலிக்கிற பாடலில்,
‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்றார்.

பார்ப்பனர்கள் மூன்றுசதவிதமே உள்ள இந்த இந்திய துணைக் கண்டத்தை ‘ஆரிய பூமி’ என்று துணிச்சலோடு சொல்லும் பாரதி, தமிழர்கள் பெருவாரியாய வாழும் நாட்டை - ‘சிங்களத் தீவு’ என்று சொன்னாலும் அதை மறந்து, ‘அன்றே சொன்னான் பாரதி.
அவன் சொன்னது போல் பாலம் கட்டியிருந்தால், திபு, திபுவென்று பாலத்தின மீதே ஓடி என்னுயிர்த் தமிழர்களின் துயர்துடைக்க உதவி இருக்குமே’ என்று வீரம் பேசவாவது உதவுகிறது. நல்லது!
‘வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்’

ஆஹா! அற்புதமான நதிநீர் பங்கீடு.
‘கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
   காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்’

‘கங்கை-காவிரி’ன்னு இதுவும்  பொருத்தமாதான் இருக்கு.
‘சிங்க மாராட்டியர் தம் கவிதை கொண்டு
    சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்’

-’இந்து மத திலகர் பிறந்த பூமி என்பதால் அது சிங்க மராட்டியம் போலும். பரவாயில்லை. யானைகள் அதிகம் நிரம்பிய கேரளாவில் இருந்து தந்தங்களைக் கொடுத்துவிடடு, இளிச்சவாய்த் தனமாக கவிதைகளை வாங்கி வைத்துக் கொள்ளட்டும்.
இப்படி எதைக் கொடுத்து, எதை வாங்குவது என்கிற பொருளாதார கவிதை எல்லாம் சரிதான். ஆனால், இதற்கெல்லாம் சேர்த்து வேட்டு வைப்பது மாதிரி,
‘காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’
என்கிறார்.

இதை ‘காவுக்கு கா’ போடுகிற, வெறும் கவிஞனின் மனோபாவம் என்று சுருக்கிவிட முடியாது. இந்திய நகரங்களை இணைத்துப் பாரக்கிற ஒரு தேசியக் கவியின் சிந்தனை என்று நீட்டி முழுங்கவும் முடியாது.
தேசிய கவிஞனாக இருந்தால்,
‘காஷ்மீர், நகர்ப் புலவர் பேசும் உரைதான்
கன்னியாகுமரியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’

என்று பாடியிருக்க வேண்டும். ஆனால், பாரதியின் அந்த வரி, அப்பட்டமாக பல் இளிக்கும் பார்ப்பனியம்தானே.
சரி, மற்ற ஊர் புலவர்கள் பேசாத அளவுக்கு அப்படி என்ன உலக மகா தத்துவத்தை காசியில் இருக்கிற புலவன் பேசிவிடப் போகிறான்? அப்படியே பேசினாலும் அதை உடனே காஞ்சிபுரததுக்காரன் மட்டும் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன?
‘வேற ஒண்ணுமல்லீங்க தோழர், காசியில் இருக்கிற வேதம் படிச்ச ‘பெரியவாளெல்’ லாம், மார்க்கிய அடிப்படையில் புரட்சிகரத் திட்டங்களை வகுத்து, உடனடியாக காஞ்சிபுரத்து ஜகத்குருக்களிடம் தெரிவித்தால் - ‘ஜகத் குரு’- லோகத்துக்கு அதைச் சொல்லி மக்களைப் புரட்சிக்கு உசுப்பி விடுவார்னு சொன்னாலும் சொல்வார்கள்- மார்க்சிய பாரதியவாதிகள்!
தோழமையுடன்
வே. மதிமாறன்
டிசம்பர் 2002
இரண்டாவது அத்தியாயம்
fuga.jpg
‘பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரிய துரை என்னிலுடல் வேர்ப்பான்,
-என்று பார்ப்பனர்களையே சாட்டை எடுத்து விளாசி இருக்கிறான் முண்டாசுக் கவி.
அது மட்டுமா-
‘ஒரு கிழச் சாம்பான் என்னிடம் வந்து “முப்போதும் நீரில் முழுகிக் குளித்தால் முனிவர்களாவாரோ? எப்போதும் இன்பத்திலிருப்பவரன்றோ இருபிறப்பாளாவார்? என்ற தத்துவராயர் வாக்கைச் சொல்லிப் பறையென்பது ஹிந்து தர்மத்தில் கோயிற் பேரிகை யென்றும், அதைக் கொட்டுவோன் பறையன் என்றும், பறையென்பது சக்தியின் பெயரென்றும், அவளே ஆதி என்றும், சிவனே பகவன் என்று பிராமண ரூபங்ககொண்டு அவளுடன் வாழ்ந்தானென்றும், பறையர் மேன்மைப் பட்டால் பார்ப்பார், வேளாளர், முதலியார், செட்டியார் முதலிய இதர ஜாதியாரும் மேன்மையடைவார்கள் என்றும் பலவித நீதிகளைச் சொன்னான். அதே கருத்துடையவராய் ஹிந்துக்களுடைய விடுதலையிலும், மேம்பாட்டிலும் மிகுந்த நாட்டத்துடன் உழைத்துவரும் ஸ்ரீ நீதிபதி மணி அய்யரும், வைத்தியர் நஞ்சுண்டராயரும், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்காரும் பறையர் குலத்தைக் கைதூக்கி விடுவதில் தம்மால் இயன்ற வரை உதவி செய்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’
“தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அக்கறையுடன் அழுதிருக்கிறான் பாரதி” என்று புல்லரிக்கும்  அறிஞர்களின் கவனத்திற்கு,
‘ஈனப் பறையர்களேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திருப்பவர் அன்றோ?”
‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற இந்த விஷம் தோய்ந்த வார்த்தை அல்லது விஷமாகவே இருக்கிற வார்த்தை எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?
எம்முடன் என்பது யாருடன்?
ஆரியர்களா?
அவர்கள்தான் இந்த மண்ணின் மைந்தர்களோ?
அவர்கள்தான் மற்றவர்கள் இந்த மண்ணில் வாழ்வதற்கு ‘குடியுரிமைப் பட்டயம்’ அளிப்பவர்களோ?
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வருத்தப்பட்டு பாரம் சுமந்தாக சொல்லப்படும் இந்தக் கவி, தாழ்த்தப்பட்ட மக்களை ஈவு இரக்கமற்ற முறையில் நடத்தும் - இந்து மதத்தின் தலைமை கர்த்தாக்களான - பார்ப்பனர்களை அவர்களின் ‘மனுஸ்மிருதி‘ செய்கையைக் கண்டித்து,
‘ஈன்ப் பார்ப்பனர்களேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திருங்கிருப்பவர் அன்றோ’
-என்று எழுதியிருந்தால்,
“தன் சொந்த ஜாதியை சேர்ந்த பார்ப்பனர்களையே வெளுத்து வாங்கியிருக்கிறான் முண்டாசுக் கவி” என்று அறிஞர்கள் ‘முண்டா’ தட்டுவதில் அர்தமிருக்கும்.

dalit_women.jpg 

‘ஈனப் பறையர்’ என்கிற இந்த மோசமான விளித்தலை, தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிப்பிடுகிற இந்த ஜாதியக் குறியீட்டை, சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்கு வீர உணர்ச்சி ஊட்டுகிற பாடலிலும் பார்க்கலாம்.
‘வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பாளோ பாரத தேவி’
‘மிலேச்சர்’ என்பது இந்தப் பாடலில் நேரடியாக அவுரங்கசீப் தலைமையிலான முகலாயர்களைக் குறிப்பதாக இருக்கிறது. இன்னும் அதை பாரதியின் காலத்தில் பொருத்தி வெள்ளையர்களைக் குறிப்பதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த மிலேச்சர்க்ள் - வேதநூலைப் பழிப்பதால் வெகுண்டெழுகிறார் பாரதி. வேதநூலைப் பழித்தால் வெகுண்டெழுவது பாரதியின் பிறப்புரிமை! சரி.
‘ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்’
இப்படி குறிவைத்து ஆலயத்தையும்-பசுக்களையும் அழித்தால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதாவில் இருக்கும் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, அமெரிக்காவில் பலகோடி முதலீட்டில் தோல் பதனிடும் தொழிற்சாலை வைத்திருக்கும், அசைவ ‘ஹை-டெக்’ பார்ப்பானுக்குக் கூட கோபம் வரும். பாரதிக்கு வராதா பின்னே, வந்திருக்கிறது.
அடுத்து பாய்கிறார்,
‘வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்’
பசு மாமிசம் உண்ணும் பழக்கமுடைய முகலாயர்களை, வெள்ளையர்களை இழிந்துக் கூறவந்த பாரதி, அதே உணவு முறைப் பழக்கமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களை குறியீடாகப் பயன்படுத்தி ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்கிறார்.
தாழ்த்தப்பட்டவர்களாக அல்லாத - ஜாதி இந்துக்கள், ஜாதி கிருத்துவர்கள், முஸ்லிம்கள் இப்படி யாரயினும் தங்களுக்குள் ஒருவரை மட்டுப்படுத்தி பேசும்போது ‘பறைச்சி மாதிரி’ ‘பறையன் மாதிரி’ ‘போடா பறையா’ என்று திட்டிக் கொள்வது போல் - அதே பதத்தில், ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.
‘ஈனப் பறையர்களேனும் - அவர்
 எம்முடன் வாழ்ந்திருங் கிருப்பவர் அன்றோ?
என்ற வரியில் ‘எம்முடன்’ என்பது ஆரியர்கள்தான் என்று- ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்ற வரியில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே தெரிந்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
‘பேரசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்’
என்ற வரிகளுக்கு அறிஞர்கள் புல்லரித்தால், இந்த வரிகளுக்கெல்லாம் என்ன செய்யலாம்?
பின் குறிப்பு; ‘புலையன்’ தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கிற இன்னொரு சொல். பெரிய புராணத்தில் ‘நந்தனை’ அவருடைய ஆண்டையான பார்ப்பனர், ‘மாடும் தின்னும் புலையா’ என்று குறிப்பிட்டிருக்கிறார். கேரளாவில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள், இந்த சொல்லால்தான் அடையாளப் படுத்தப்படுகிறார்கள்.
'ஈனப் பறையர்களேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திருங் கிருப்பவர் அன்றோ
?
என்ற வரியில் 'எம்முடன்' என்பது ஆரியர்கள்தான் என்று- 'ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்' என்ற வரியில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
'ஈனப் பறையர்களேனும்' என்கிற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே தெரிந்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
'பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்'
என்ற வரிகளுக்கு அறிஞர்கள் புல்லரித்தால், இந்த வரிகளுக்கெல்லாம் என்ன செய்யலாம்?
sivaji.jpg
சிவாஜி-அவுரங்கசீப் சண்டையை உதாரணம் காட்டி முகலாயர்களுக்கு எதிராக, 'நம் கலாச்சாரத்தையும், நம் புனித மண்ணையும் பாதுகாக்க போர் புரிந்த மாபெரும் இந்து மன்னன் சிவாஜி, என்று நிறுவி, அதை கிறித்துவ வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நாம் புரிந்து கொள்ள வேண்டும்' என்று கடந்த காலவரலாற்றில் இருந்து மிகத் தந்திரமாக பாடம் கற்பிக்கும் பாரதி, அதே சிவாஜி மன்னாகும்போது,  'நீ சூத்திரன், மன்னனாகக் கூடாது' என்று ஆகமங்களை அள்ளிப்போட்டு குறுக்கே நின்ற பார்ப்பன பட்டர்களைப் பற்றி, ஆதரித்தோ, எதிர்த்தோ ஒரு வார்த்தைக் கூட பாடவில்லை, பாட்டுக்கார பாரதி.இஸ்லாமியர்களை விரோதிகளாகச் சித்தரித்து தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களை அடியாட்களாக மாறி, மாறி பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கே குழிபறிக்கும் பார்ப்பனீய இந்து மதச் சிந்தனை இதில் இருக்கிறதா இல்லையா?
barathi001.jpg
 வேதத்தில் ஜாதிய வேறுபாடு கிடையாது,
‘வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே’
என்றெல்லாம் ஜாதிய எதிர்ப்பாளர் மாதரி, கவிதையளக்கிற சுப்பிரமணிய பாரதி - மனுஸ்மிருதியையோ, நாலு வர்ணத்தையோ-தன் நெருப்புக் கவிதைகளால் ‘தீமூட்ட’ மறுக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் நாலு வர்ணத்துக்கு நல்வாழ்த்து ஒன்று பாடியிருக்கிறார்,
‘வேத மறிந்தவன் பார்ப்பான் - பல
  வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் - தண்ட
 நேமங்கள் செய்பவன் நாய்க்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
  பட்டினி தீர்ப்பவன் செட்டி.
…………………………………………………………………………
…………………………………………………………………………
நாலு வகுப்பும் இங் கொன்றே - இந்த
 நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
 வீழ்ந்திடும் மானிடச் சாதி’
-என்று ராஜகோபால ஆச்சாரியருக்கே குலக்கல்வி திட்டத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறார், இந்த ராஜகுரு.
“அந்தப் பாடலில், பாரதி தனக்கே உரிய முறையில் - ஜாதி ஒற்றுமையை வலியுறுத்துகிறார். ஜாதியக் கல்வியை ஆதரிக்கவில்லை”
-என்று அவரின் பாடலுக்கு ஒட்டுப் போட முயற்சிப்பவர்களை, உருட்டுக் கட்டை எடுத்துக் கொண்டு ஓட, ஒட விரட்டுகிறார்-தன் கட்டுரையில்.
‘அந்நிய-வஸ்து - வர்ஜனம், ஜாதீயக் கல்வி, பஞ்சாய்த்து, சரீரப் பயிற்சி - இந்த நான்குமே சுதேசியம் என்ற புண்ணிய பலத்தைத் தாங்குகின்ற நான்கு தூண்களாகும். இவற்றை ஆதரிப்பது நமது கடமை. இதில் சட்டத்திற்கு எவ்விதமான விரோதமும் கிடையாது. இவற்றை ஆதிக்காமலிருப்பவர்கள் தேசத் துரோகிகள் ஆவார்கள்.’
-என்று தன் நாலுவர்ண தேச பக்தியை வெளிப்படுத்துகிறார்.

திக்க வெறி கொண்ட முகலாயர்களும், ஏகாதிபத்திய வெறியர்களான வெள்ளையர்களும் - பல்லாயிரம் மைல் கடந்து வந்து இந்த மிதவாத, தீவிரவாத சுதந்திரப் போராட்ட கோஷ்டிகளைவிடவும் அதிகமாக ரத்தம் சிந்தி - இந்த ‘போங்கு’ மன்னர்களிடம் சண்டையிட்டுத் தியாகம் செய்து - பாடுபட்டு உருவாக்கிய இந்த நாட்டை, கவிராஜன் பாரதி கொஞ்சமும் கூசாமல்,
பாரதம் என்கிறார்
ஆரிய பூமி என்கிறார்
ஆரியர் என்கிறார்
‘இந்தியா’ என்பது கூட ‘இந்து’ என்பதின் திரிபு என்பதில் பெருமை கொள்கிறார்.
சற்றே கீழ் இறங்கி வந்து,
தமிழ் நாடு என்கிறார்,
தமிழர் என்கிறார்.
ஆனால் நிரம்ப ஞாபகத்தோடு திராவிடம் என்பதையே மறந்து போகிறார்.
ஏன்?
ஆரியம்-ஆரியர்-தமிழ் நாடு-தமிழர்-இந்தியா-இந்தியர் இப்படி- எப்படி மாற்றிச் சொன்னாலும் அதனுள் பார்ப்பனரும் அடங்குவர்.
திராவிடம் - திராவிடர் என்று சொன்னால் - அதில் பார்ப்பனர்களை எப்படிச் சேர்ப்பது?
இந்தக் கேள்வி சுப்பிரமணிய பாரதியை புரட்டி எடுத்திருக்கிறது.
அதன் பொருட்டே ‘ஆரிய நாடு - ஆரிய பூமி’ என்று அழுத்தந்திருத்தமாக சாட்சிகளோடு பொய் சொல்கிறார்.
         
***
‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்’
-என்று சூதில் மன்னனான கண்ணன், கீதையில் சொன்னதாக சொல்லப்பட்டதை, சூதாட்ட சகோதரரான அர்ஜுனன் மேற்கோளாகச் சொல்வது போல், ‘பாஞ்சாலி சபதத்தில்’ சொல்கிறார்.
அதையே நாம் பாரதியின் சிந்தனைகளுக்கும் சொல்லி வைப்போம்,
‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்’
தோழமையுடன்
வே. மதிமாறன்
டிசம்பர் 2002
மூன்றாவது அத்தியாயம்
“வேதியராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே”
-இது பார்ப்பனர், பார்ப்பனரல்லாதவர் பிரிவையே குறிக்கிறது.
“வேதம் நிறைந்த தமிழ் நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ் நாடு
வேதம் என்பது பார்ப்பனர்கள். வீரம் என்பது பார்ப்பனரல்லாதவர்கள் என்றே இது அர்த்தமாகிறது. இப்படி பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் பிரிவை சாதகமான நேரங்களில் பெருமையோடு நுட்பமாக உணர்த்துகிற பாரதி,நீதிக் கட்சித் தலைவர்கள் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து பார்ப்பனரல்லாதவரின் உரிமையைப் பேசியபோது - கோபமுற்று கமண்டலத்தில் இருந்து ‘மந்திர ஜலம்’ எடுத்துத் தெளித்து சாபிமிடுகிறார்:
“இந்த ‘பிராமணரல்லாதார் கிளர்ச்சி’ கால கதியில் தானே மங்கி அழிந்துவிடுமென்று நிச்சயிப்பதற்கும் போதிய காரணங்களிருக்கின்றன. முதலாவது, இதில் உண்மையில்லை, உண்மையாகவே இந்தியாவில் ஜாதி பேதங்கள் இல்லாமல் செய்துவிட வேண்டுமென்ற அய்க்கிய புத்தியுடையோரில் மிக மிகச் சிலரே இந்தக் கிளர்ச்சியில் சேர்ந்திருக்கிறார்கள்.
பெரும்பாலும் சர்க்கார் அதிகாரங்களையும் ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி, சட்டசபை முதலியவற்றில் கவுரவ ஸ்தானங்களையும் தாமே அடைய வேண்டுமென்றே ஆவலுடையவர்களே இக்கிளரச்சியின் தலைவராக வேலை செய்து வருகிறார்கள்.”
1906இல் முனிசிபல் சார்பாக சட்ட மன்றத்துக்குப் போட்டியிட்ட மாதவன் நாயரை ‘இந்தியா’ பத்திரிகை கட்டுரையில், தியாகி, அறிவாளி என்று போற்றிய பாரதி, 1916க்குப் பிறகு ‘பார்ப்பனரல்லாத கிளர்ச்சி’ யில் மாதவன் நாயர் பங்கெடுத்த பின் அவரையும் சேர்த்தே இங்கு திட்டுகிறார்:
“திருஷ்டாந்தமாக, பிராமணருக்கு அநேகமாக அடுத்தபடி தென் இந்தியாவில் பல இடங்களிலே சைவ வேளாளர் என்ற வகுப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த வகுப்புக்குக் கீழே பஞ்சமர் வரை சுமார் இரண்டாயிரம் சாதி வகுப்புக்களிருக்கின்றன. அவர்களுக்கு மேலே பிராமணராகிய ஒரு வகுப்பினரே இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நம்முடைய சைவ வேளாளருள்ளே ‘அல்லாதார்’ கிளர்ச்சியைச் சேர்நதிருப்பவருங் கூடத் தமக்கு மேற்படியிலுள்ள பிராமணர் பிரிவுக் குணமுடையோரென்றும், மற்ற வகுப்பினருடன் சேர்ந்துண்டு மணம் புரிந்து வாழ மறுக்கிறாரென்று நிந்திக்கிறார்களேயல்லாது, தமக்குக் கீழேயுள்ள இரண்டாயிரத்துச் சில்லரை ஜாதியர்களுடன் தாம் சேர்ந்துண்டு மணம் புரிந்து வாழுமாறு யாதொரு பிரயத்தனமும் செய்யாதிருக்கிறார்கள்.
‘பிராமணரல்லாதார்’ என்றொரு வகுப்பு இந்தியாவில் கிடையவே கிடையாது.
ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்துகொள்ள வழக்கப்படுத்தாத ஆயிரக்கணக்கான வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர்.
இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மாத்திரமே சார்ந்ததாகாது.
எல்லா வகுப்பினரையும் சாரும். பிராமணரும் மற்ற வகுப்பினரைப் போலவே இந்த முறைமையால் பந்தப்பட்டிருக்கிறார்கள்.
பிராமணருக்குள்ளேயே பரஸ்பரம், சம்பந்தம், சமபந்தி போஜனம் செய்து கொள்ளாத பல பிரிவுகள் இருக்கின்றன.
‘பிராமணரல்லாதார்’ என்ற வகுப்பே கிடையாது. அதுவே பொய். எனவே, இந்தக் கிளர்ச்சியின் மூலமே பொய்யாக இருப்பது கொண்டு இதனை உண்மையில்லாத கிளர்ச்சி என்கிறேன்.”
-என்று பஞ்சாயத்துப் பேசுகிற மகாகவி,
பார்ப்பனர்கள் தாக்கப்பட்டதாக கேள்விப்பட்டபோது - நானாடவில்லையம்மா…. சதையாடுது…’ என்று பஞ்சகச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு ‘டேய்… எவன்டா அவன் எங்க ஆளுங்கள அடிச்சது’ என்று எகிறிக் குதிக்கிறார்.
“என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து இந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே! பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பாகத்தான் நடத்துகிறார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா? பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா? எதற்கும் இந்து மதவிரோதிகள் பேச்சைக் கேட்கலாமா?
 நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற இந்துக்கள் கும்பிடவில்லையா?”
இந்த வரிகளைப் பின் தொடர்கிற வரிகள், ஆர்.எஸ்.எஸ். காரன் அம்பேத்கர் விழா கொண்டாடுவது போல, ‘தாழ்த்தப்பட்ட மக்களே உண்மையான இந்துக்கள்; அவர்களைக் கைதூக்கி விட வேண்டும்’ என்ற கதையெல்லாம் வருகிறது.
சுப்பிரமணிய பாரதியின் இந்த சிந்தனை, குமாரில பட்டரை ஞாபகப்படுத்துகிறதல்லவா?
‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ - 13
calvary.jpg
மூன்றாவது அத்தியாயம்
இந்தியாவை வெளியுலகத்தார் பாமர தேசம் என்று நினைக்கும்படி செய்த முதற் குற்றம் நம்முடையது. புறக் கருவிகள் பல. முதலாவது கிறிஸ்துவப் பாதிரி…..
அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் சில கிறிஸ்தவப் பாதிரிகள் தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்து பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்து போய் மஹத்தான் அநாகரீக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மத்ததிலே சேர்த்து மேன்மைபடுத்தும் புண்ணியத்தைச் செய்வதாகச் சொல்லுகிறார்கள்.
இந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும் ஸ்தீரீகளை (முக்கியமாக, அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல நடத்துகிறார்கள் என்றும் பலவிதமான அபவாதங்கள் சொல்லுகிறார்கள்.
நம்முடைய ஜாதிப்பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களையெல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.”
இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் தெரு வழியாக நாம் நடந்து வந்த காலத்தில் எதிரே 10 அல்லது 11 வயதுள்ள இரண்டு அழகிய பிராமண கன்னிகைகள் வந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் ஏதோ ஏசுநாதன்‘ ‘கடவுள்என்று பேசிக்கொண்டு வந்தார்கள். இந்தச் சிறிய குழந்தைகள் கடவுளைப் பற்றியென்ன பேசுகின்றன என்பதையறிய ஆவலுற்று அதைச் சிறிது நின்று கவனித்தோம். சில சில வார்த்தைகள் காதில் விழந்தற்கப்பால் அக்கன்னிகைகள் துரிதமாக நடந்து அப்பால் போயிவிட்டார்கள்.
ஐயோ! எத்தனையோ வருஷ்ங்களாக பெண் கல்வி வேண்டும்‘ ‘பெண் கல்வி வேண்டும்என்று கூச்சலிட்டதெல்லாம் நமது பெண்கள் பாதிரிப் பள்ளிக்கூடத்திற்குப் போய் பைபிள்வாசித்துக் கொண்டு வரும்பொருட்டாகத்தானா? வருங்காலத்தில் இந்தப் பெண்கள் தாய்மாராகி நமது ஜாதி (Nation) க்கு காப்புத் தெய்வங்களாக இருக்கப் போகிறார்கள்?
நமது கிருஸ்துவ நண்பர்கள் நாம் சொல்வதிலிருந்து மனஸ்தாபமடைய வேண்டியதில்லை. அவர்களுடைய தெருவுக்கு நடுவிலே நாம் போய் ஒரு பள்ளிக்கூடம் வைத்து சில இந்து சாஸ்திரங்களைப் படித்துக் கொண்டிருந்தால், அந்தப் பள்ளிக் கூடத்துக்கு தமது குமாரத்திகளை அனுப்புவார்களா? அதுபோலவே இந்துக்களும் தமது சகோதரிகளைக் காப்பாற்றிக் கெள்வது இவர்களுடைய கடமையல்லவா
-இராம. கோபாலன், தலைவர், ‘இந்து முன்னணி
இதைச் சொன்னது இராம. கோபாலன்தான் என்று நம்பி விட்டீர்கள் அல்லவா? நீங்கள் உண்மையென்று நம்பியது பொய். சொன்னது அவரல்ல,
உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவங்கொண்டடித்தால்
வன்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து
வானமேனியில் அங்கும் விளங்கும்`
-என்று உண்மையான கிறித்துவர் போல் வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் சுப்பிரமணிய பாரதியே அந்த ஆர்.எஸ்.எஸ். வரிகளுக்குச் சொந்தக்காரர்.
பாரதியின் இந்த சிந்தனையும் குமாரில பட்டரை ஞாபகப்படுத்துகிறதல்லவா?
பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ - 14
மூன்றாவது அத்தியாயம்
“மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாளங்கே
ஆகா வென்றெழுந்தது பார் யுகப் புரட்சி;
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்”
என்று பாட்டெழுதி ‘கம்யூனிஸ்ட் கட்சிகளின்’ ஆஸ்தான கவிஞரான பாரதி (போட்டியின்றி இன்று வரை பதவியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்)
பேய், பிசாசு, மாகாளி, பராசக்தி, மாரியம்மா இப்படி எல்லா சக்திகளும் ஒன்றாய் கலந்த கொடுங்கோலன் ஜார் மன்னனின் அரசையும், இன்னும் சரஸ்வதி, லட்சுமி, மேரியம்மா, ஏசு போன்ற மென்மையான ‘மென்ஷிவிக்கு’ களையும் - மக்கள் சக்தியென்ற மாபெரும் சக்தியின் துணையோடு தூக்கியெறிந்த - புரட்சித்தலைவன் லெனினை சாட்டையாலடித்துப் பாடம் கற்பிக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கவிஞர் சுப்பிரமணிய பாரதி:

“கொலையாலும் கொள்ளையாலும், அன்பையும், ஸமத்வத்தையும் ஸ்தாபிக்கப்போகிறோம் என்று சொல்வோர்தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன். ‘இதற்கு நாம் என்ன சொய்வோம்! கொலையாளிகளை அழிக்கக் கொலையைத் தானே கைக் கொள்ளும்படி நேருகிறது; அநியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடிக்கும்படி நேரிடுகிறது’ என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை, கொலையை வளர்க்குமே ஒழிய, அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்திப் பண்ணுமேயழிய குறைக்காது. பாவத்தை புண்ணியத்தாலேதான் வெல்ல வேண்டும். பாவத்தை பாவத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை.”
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்த்து, இவ்வளவு வன்முறை கூடாது, ரத்தம் வேண்டாம் என்று அன்போடு ‘பட்டாளி வர்க்க சரணாகதி தத்துவம்’ பேசுகிற இந்த கம்யூனிஸ்ட் கவிஞர்,
பங்காளி தகராறு, சூதாட்டம், பஞ்ச பாண்டவர் - கவுரவர் பொறுக்கித் தனங்களுக்காக நடந்த பாரத சண்டைக்கு பாண்டவர்களின் சார்பாக சங்கெடுத்து ஊதுகிறார் பாஞ்சாலி சபதத்தில்,
வீமன் செய்த சபதம்
நாய்மக னாந்துரி யோதனன் றன்னை
மாணற்ற மன்னர்கண் முன்னே - என்றன்
வண்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே,
தொடையைப் பிளந் துயிர் மாய்ப்பேன் - தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன் - அங்கு
கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்
நடைபெறுங் காண்பி ருலகீர்! - இது
நான் சொல்லும் வார்த்தைகள்என் றெண்ணிடல் வேண்டா
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை - இது
சாதனை செய்க பராசக்தி’ என்றான்
அர்ஜுன் சபதம்
பார்த்த னெழுதந்துரை செய்வான்: - ‘இந்தப்
பாதகன் கர்ணனைப் போரில் மடிப்பேன்
தீர்த்தப் பெரும் புகழ் விஷ்ணு - எங்கள்
சீரிய நண்பன் கண்ணன் கழலாணை:
கார்த்தடங் கண்ணி எந்தேவி - அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை;
போர்தொழில் விந்தைகள் காண்பாய் - ஹே!
பூதலமே! அந்தப் போதினில்! என்றான்
பாஞ்சாலி சபதம்
தேவி திரௌபதி சொல்வாள்; - ஓம்
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவி துச்சாதனன் செந்நீர் - அந்தப்
பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம் ,
மேவி இரண்டுங் கலந்து - குழல்
மீதினற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் - இது
செய்யுமுன்னே முடியே’ என்றுரைத்தாள்.
எப்படி இருக்கிறது பார்த்தீர்களா நியாயம்? இதுதான் பாரதியின் பஞ்சாயத்து.
சுப்பிரமணிய பாரதியின் இந்தச் செயல், குமாரில பட்டரை ஞாபகப் படுத்துகிறது அல்லவா?
சீச்சீ…. சீச்சி… குமாரில பட்டர் எவ்வளவோ பரவாயில்லை.

நான்காவது அத்தியாயம்
மது முன்னோர்களும் அவர்களைப் பின்பற்றி நாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன்பொருட்டே அதைத் தெய்வபாஷை யென்கிறோம்.அந்தப் பாஷையில் தைரியம் என்பதோர் சொல்லுண்டு.
தீரனுடைய இயற்கை, தைரியம், தீரன் என்ற வார்த்தையின் தாதுப் பொருளைக்கவனிப்போமானால் அறிவுடையவன் என்ற அர்த்தமாகும். துணிவுடையவனுக்கும் அந்தப் பாஷையிலே அதுவே பெயராக வழங்கப்படுகிறது.எனவே, ‘தைரியம்என்ற சொல் அறிவுடமையென்றும், துணிவுடைமையென்றும் இருவித அர்த்தங்கள் உடையது. இங்ஙனம் இவ்விரண்டு கருத்துக்களும் ஒரே சொல்லை வழங்குவது, அந்த பாஷையின் பெருமைக்குள்ள சின்னங்களிலே ஒன்றாகும்.
உலகத்தில் வேறு எந்தப் பாஷையிலும் மேற்கூறிய இரண்டு கருத்துக்களையும் சேர்த்துக் குறிப்பிடக்கூடிய ஒரே பதம் கிடையாது. எந்த நாட்டினரைக் காட்டிலும் அதிகமாக யதார்த்தங்களைப் பரிசோதனை செய்து பார்த்த மஹான்கள் வழங்கிய பாஷையாதலால், அந்தப் பாஷையிலே இவ்விரண்டு பொருள்களுக்கும் ஒரே பதம் அமைக்கப்பட்டிருக்கிறது
...............................................................................................................…………….…………………………………………………………………………………
…………………………………………………………………….....................
…….............................................................................................................................
இந்தியாவில் பெரும்பான்மையான பாஷைகள் ஸமஸ்க்ருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல. அங்ஙகனம் திரிபுகளல்லாததுவும் ஸம்ஸ்கிருதக் கலப்புக்குப் பிந்தியே மேன்மை பெற்றனவாம்.”
நடுவுல இருக்கிறவன் மாதிரியில்ல; பெரியவர் கொஞ்சம் நல்லவர்என்று நமதுஅசடுகளில் பலர் விமர்சனங்களோடு ஆதரிக்கிற செத்துப்போன காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரன், சமஸ்கிருதம் பற்றி மேலே சொன்னது போல் சொல்லியிருக்கிறார்.
ஆனால், இதைச் சொன்னது,
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்
என்று பாட்டெழுதிய பாரதி.

தமிழ் ப்ரதானம் ஆனால்… பாரதியின் மாறுவேடம்




‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ - 16
நான்காவது அத்தியாயம்
“அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முற்றே உலகு”
என்று தொடங்கிய திருவள்ளுவர், தன்னுடைய 1330 குறள்களிலும் கடைசிவரை ஆதிபகவான் யார் என்று சொல்லாமலேயே விட்டுவிட்டார். இது, சுப்பிரமணிய பாரதிக்கு பெரிய தொந்தரவாகவே இருந்திருக்கிறது.
அந்தக் கடுப்பு தாங்காமல், எடுத்திருக்கிறார் எழுதுகேலை-வடித்திருக்கிறார் பாடலை.
ஆதிபகவன் யாரென்றும், தன்னுடைய சிறப்புகள் எதனால் என்றும் தமிழ்த்தாயே ஒப்புதல் வாக்குமூலம் தருவதுபோல் எழுதி அடைத்தார் தமிழர்களின் வாயை.
“ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக் கணஞ் செய்து கொடுத்தான்.
மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்ட நல் லன்பொடு நித்தம் வளர்த்தார்.
ஆன்ற மொழிகளினுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்”
இதில் மொத்தம் மூன்று ஆப்புகளை தமிழர்களுக்கு அடித்திருக்கிறார் சுப்பிரமணியார்.
1. வள்ளுவர் சொன்ன ஆதிபகவன் சிவன் என்று அறிவிக்கிறார்.
(பார்ப்பனரில் பாரதி அய்யர் பிரிவைச் சேர்ந்தவர். அய்யருக்கு சிவனே எல்லாம்.)
2. தமிழக்கு இலக்கணம் செய்தவர் அகத்தியர் என்று சொல்லப்படுவதைப் பயன்படுத்தி, அகத்தியர் ஒரு பார்ப்பனர் என்று அவருக்குப் பூணூல் அணிவிக்கிறார்.
3. நன்றாக செய்யப்பட்டதாக தன் பெயரிலேயே சொல்லிக் கொள்கிற (`ஸம்` என்றால் நன்றாக, ‘கிருதம்’ என்றால் செய்யப்பட்டது) ஸ்ம்ஸ்கிருதத்திலிருந்தே, தமிழ் தயாரிக்கப்பட்டதாக, ஒட்டு மொத்தமாக சேர்த்து வைத்து ஆணியடிக்கிறார்.
‘கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய
மூத்தமொழி தமிழ் மொழி’
என்று மாறுவேடப் போட்டியில் அரிதாரம் பூசி வசனம் பேசியவர்கள் முகத்தில் கரியைக் குழைத்துப் பூசி விட்டாலும், அவரும் ஒரு மாறு வேடம் போடுகிறார்:
“தமிழ் நாட்டில் தேசீயக் கல்வியெனப்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாஷையை ப்ரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால், அது ‘தேசியம்’ என்ற பதத்தின் பொருளுக்கு முழுவதும் விரோதமாக முடியுமென்பதில் அய்யமில்லை. தேசபாஷை ப்ரதானம என்பது தேசீயக் கல்வயின் ஆதாரக் கொள்கை; இதை மறந்துவிடக்கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானல், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற் கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும்”
டாக்டர் நாயரின் ஞாபகம் வந்தவுடன் தான் போட்டிருப்பது மாறுவேடம் என்பதையும் மறந்து கோபத்தில் மேக்கப்பை கலைத்து விட்டு,
“இங்ஙனம் தமிழ் ப்ரதானம் என்று நான் சொல்லுவதால், டாக்டர். நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடம் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு நான் சார்பாகி ஆரியபாஷை விரோதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்து விடலாகாது. தமிழ் நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேச முழுவதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் அய்க்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயறிசி மேன்மேலும் ஒங்குக. எனினும், தமிழ் நாட்டில் தமிழ் மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக”
பாரதியின் இந்த வார்த்தைகள் மொழி குறித்து தமிழக பாரதீய ஜனதா தலைவர்களின் இப்போதைய கருத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது அல்லவா?
ஆம், தமிழ் மொழி குறித்த இந்த திரைக்கதை, வசனம் ‘பார்ப்பனிய ஜனதாவின்’ பரம்பரையின் தொடர்ச்சி.

‘மூடப் பாதிரிகள்’ பாரதியின் கோபம்

19 03 2008
buthaa-b00k.jpg
ஏராளமான புத்த நூல்கள் கொளுத்தப்பட்டன. அதற்கு பெயர்தான் ரிக் வேதப்படி நடத்தப்பட்ட யாகமோ?
‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ - 17
நான்காவது அத்தியாயம்
ன்று (2000 ஏப்ரல்) பாரதிய ஜனதா கட்சியின் எதிர்க் கட்சியாக இருக்கிற அதனாலேயே மதப் பேரினவாத சக்தியின் எதிரியாகக் காட்சி தருகிற, ஜெயலலிதாவின் தயவில் பாரதீய ஜனதாகட்சி ஆட்சி நடத்த முயற்சித்த போது - புதுமையான கல்வித் திட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியில் அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டியது.
அந்தக் கூட்டம் ‘சரஸ்வதி வந்தன’ த்துடன் தொடங்கியபோது, அன்றைய பாரதீய ஜனதாவின் எதிர்கட்சிகளின் வரிசையில் இருந்ததால், மதப்பேரினவாதத்தின் எதிரியாகக் காட்சி தந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அப்போதைய கல்வி அமைச்சர் அன்பழகன், சரஸ்வதி வந்தனத்தைக் கண்டித்து அந்தக் கூட்டத்தில் அலறியதாக சொல்லப்பட்டது அறிந்ததே.
சரி, அந்த தேசியக் கல்வித் திட்டத்தில் எல்லா மதத்தினரையும் அரவணைத்துக்கொண்டு வாழைப்பழத்தில் விஷ ஊசியை சொருவதுபோல் பல திட்டங்கள் சொல்லப்பட்டனவாம். என்ன திட்டங்கள் முன்வைக்கப்பட்டன?
இதோ பாரதி சொல்கிறார் அதைப் பற்றி:
“நான்கு வேதங்கள், ஆறு தர்சனங்கள், உப நிஷத்துக்கள், புராணங்கள், இதிகாசங்கள், பகவத்கீதை, பக்தர் பாடல்கள், சித்தர் நூல்கள் - இவற்றை ஆதராமாகக் கொண்டது ஹிந்து மதம்.
ஹிந்து மதத்தில் கிளைகள் இருந்த போதிலும், அக்கிளைகள் சில சயமங்களில் அறியாமையால் ஒன்றையன்று தூஷணை செய்து கொண்ட போதிலும், இந்து மதம் ஒன்றுதான் பிரிக்க முடியாதது.
வெவ்வேறு வ்யாக்யானங்கள் வெவ்வேறு அதிகாரிகளைக் கருதிச் செய்யப்பட்டன. தற்காலத்தில் சில குப்பைகள் நம்முடைய ஞான ஊற்றாகிய புராணங்கள் முதலியவற்றிலே கலந்துவிட்டன. மதத்துவேஷங்கள், அனாவசிய மூட பக்திகள் முதலியனவே அந்தக் குப்பைகளாம். ஆதலால் தேசீயப் பள்ளிக்கூடத்து மாணாக்கர்களுக்கு உபாத்தியார் தத்தம் இஷ்டதெய்வங்களிடம பரமபக்தி செலுத்தி வழிபாடு செய்துவர வேண்டும் என்று கற்பிப்பதுடன், இதர தெய்வங்களைப் பழித்தல், பகைத்தல் என்ற மூடச்செயல்களை கட்டோடு விட்டுவிடும்படி போதிக்க வேண்டும்.
‘ஏகம் ஸ்த்விப்ரா: பஹ§தா வதந்தி’ (கடவுள் ஒருவரே, அவரை ரிஷிகள் பல பெயர்களால் அழைக்கின்றனர்) என்ற ரிக் வேத உண்மையை மாணாக்கரின் உள்ளத்தில் ஆழப்பதியுமாறு செய்ய வேண்டும். மேலும், கண்ணபிரான் ‘எல்லா உடம்புகளிலும் நானே உயிராக நிற்கிறேன்’ என்று கீதையில் கூறியபடி, ஈ, எறும்பு, புழு, பூச்சி, யானை, புலி, கரடி, தேள், பாம்பு, மனிதர்- எல்லா உயிர்களும் பரமாத்மாவின் அம்சங்களே என்பதை நன்கறிந்து, அவற்றை மனமொழி மெய்களால் எவ்வகையிலும் துன்புறுத்தாமல், இயன்ற வழிகளிலெல்லாம் அவற்றிற்கு நன்மையே செய்து வரவேண்டும்’ என்பதே இந்துமத்தின் மூலதர்மம் என்பதை மாணாக்கர்கள் நன்றாக உணர்ந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.மாம்ஸ போஜனம் மனிதன் உடல் இறைச்சியைத் தின்பது போலாகும் என்றும், மற்றவர்களைப் பகைத்தலும் அவர்களைக் கொல்வது போலேயாகும் என்றும் இந்து மதம் கற்பிக்கிறது. ‘எல்லாம் பிரம்மமயம்’, ‘ஸ்ர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்ற வசனங்களால் உலக முழுவதும் கடவுளின் வடிவமே என்று இந்து மதம் போதிக்கிறது.
‘இங்ஙனம் எல்லாம் கடவள் மயம் என்றுணர்ந்தவன் உலகத்தில் எதற்கும் பயப்படமாட்டான். எங்கும் பயப்படமாட்டான்; எக்காலத்திலும் மாறாத ஆனந்தத்துடன் தேவர்களைப் போல் இவ்வுலகில் நீடுழி வாழ்வான்’ என்பது இந்து மதத்தின் கொள்கை. இந்த விஷயங்களில் எல்லாம் மாணக்காருக்குக் தெளிவாக விளங்கும்படி செய்வது உபாத்தியாயர்களின் கடமை. மத விஷயமான போராட்டங்கள் எல்லாம் சாஸ்தர விரோதம்; ஆதலால், பரம மூடத்தனத்துக்கு லக்ஷனம். ஆசாரங்களை எல்லாம் அறிவுடன் அனுஷ்டிக்க வேண்டும். ஆனால், ஸமயக் கொள்கைக்கும் ஆசார நடைக்கும் தீராத ஸம்பந்தம் கிடையாது. ஸமயக் கொள்கை எக்காலத்திலும் மாறாதது. ஆசாரங்கள் காலத்துக்கு காலம் மாறுபடும் இயல்புடையன.
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………….
தேசியக் கல்வியில் முஹம்மதியர் எத்தனைக் கெத்தனை சேர்ந்துழைக்கிறார்களோ, அத்தனைக் கத்தனை அம்முயற்சி அதிகப் பயன் அடையும். மத பேதங்களை வ்யாஜமாகக் காட்டி ஹிந்து முஹம்மதியர் ராஜரீக முதலிய பொது விஷயங்களிலும் கூடியுழைக்காமல் தடுக்கவேண்டும் என்று ஆங்கிலோ-இந்தியப் பத்திராதிபர் முதலிய பொதுச் சந்துருக்கள் செய்த தீய முயற்சிகளெல்லாம் விழலாய்விட்டன.
மேலும், இந்தியாவிலுள்ள முஸல்மான்களில் பலர் ஹிந்து ஸந்ததியார். அவர்களுடைய நெஞ்சில் இந்து ரத்தம் புடைக்கிறது. இங்ஙனமில்லாமல் வெறும் பட்டாணிய அராபிய பாரஸீக மொகலாய ஸந்தியாக இருப்போரும் இந்து தேசத்தில் ஆயிர வருஷங்களுக்கு மேலாக வாழ்வதால், இந்து ஜாதியராகவே கருதத்தக்கவர் ஆவர்.
எங்ஙனமெனில், ஜப்பானில் பிறந்தவன் ஜப்பானியன், சீனத்தில் பிறந்தவன் சீனன்; இந்து தேசத்தில் பிறந்தவன் இந்து;
1. இந்தியா, இந்து, ஹிந்து மூன்றும் ஒரே சொல்லின் திரிபுகள். இந்தியாவில் பிறந்தவன் இந்திய ஜாதி அல்லது ஹிந்து ஜாதி.
2. கிறிஸ்தவர்
தேசீயக் கல்வி முயற்சிகளில் சேரக்கூடாதென்று ஒரு சில மூடப் பாதிரிகள் சொல்லக்கூடும். அதை இந்துக் கிறிஸ்தவர் கவனிக்கக் கூடாது. தேசீயக் கல்வியில், ரிக்வேதமும், குரானும், பைபிளும் ஸமானம். கிறிஸ்து, கிருஷ்ணன் என்பன பர்யாய நாமங்கள். வங்காளத்தில் இந்துக்கள் கிருஷ்ண தாஸ பாலன் என்று சொல்வதற்குக் கிறிஸ்தோதாஸ் பால் என்று சொல்கிறார்கள்.
3. மனுஸ்த்தன்மை
ஆங்கிலேயர், பிராமணர், ஆஸ்திரேலியாவில் முந்தி வேட்டைகளில் அழிக்கப்பட்ட புதர்ச்சாதியார் எல்லாரும் பொதுவில் ‘மனிதர்’, ஆதாம் ஏவா வழியில் பிறந்தவர்கள்’ என்றுகூறி, முஹம்மதியக் கிறிஸ்தவ வேதங்கள் ‘மனிதர் எல்லோரும் ஒன்று’ என்பதை உணர்த்துகின்றன. மஹாபாரத்ததில் மனிதர், தேவர், புட்கள், பாம்புகள் எல்லோரும் காச்யப்ர ஜாபதியின் மக்களாதலால் ஒரே குலத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆதலால், தேசீயக்கல்வி முயற்சியில் ஜாதிமத வர்ண பேதங்களைக் கவனிக்கக் கூடாதென்று அரவிந்த கோஷ், திலக், அனிபெஸண்ட் முதலியவர்கள சொல்லுவதை இந்த நாட்டில் எந்த ஜாதியாரும், எந்த மதஸ்தரும், எந்த நிறத்தையுடையவரும் மறுக்க மாட்டார்களென்று நம்புகிறேன்”
மகாகவி பாரதியின் இந்த சிந்தனைகளையெல்லாம் நாம் புரிந்து கொள்ளுகிறபோது,
அது மூடநம்பிக்கை நிறைந்த வரிகளாக இருந்தாலும், அவரின் அந்தப் பாடல் வரிகளே நமக்கு ஞாபகம் வருகிறது,
‘படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான், போவான், ஐயோ எனறு போவான்.’

ஐந்தாவது அத்தியாயம்
என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பகிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்வும் வரை சென்னைப் பட்டணத்து இந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!”
“சென்னைப் பட்டணத்தில் நாயர்கக்ஷிக் கூட்டமொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகைகளில் வாசித்தோம். ராஜாங்க விஷயமான கொள்கைகளில் அபிப்பிராய பேதமிருந்தால், இதை ஜாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப்போட்டு அடிபிடிவரை கொண்டு வருவோர் இந்த தேசத்தில் ஹிந்து தர்மத்தின் சக்தியை அறியாதவர்கள்”
“இங்ஙனம் தமிழ்ப்ரதானம் என்று நான் சொல்லுவதால், டாக்டர்.நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிட கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு…..”
இப்படி நீதிக் கட்சித் தலைவர்களை தேசத் துரோகிகள் எனறு சகட்டுமேனிக்கு சபிக்கிறாரே சுப்பிமணிய பாரதி, அப்படியென்ன தேசவிரோத செய்கையில் ஈடுபட்டனர் நீதிக்கட்சித் தலைவர்கள்?
காங்கிரஸ்காரர்கள்துப்பாக்கி எடுத்து பிரிட்டிஷ்காரனை விரட்டி, விரட்டி சுட்டதுபோலவும், ‘அய்யோ ஆளைவிட்டாபோதும்’னு வெள்ளைக்காரன் அலறி ஓடியதுபோலவும்,
இந்த நீதிக்கட்சித் தலைவர்கள் மட்டும், பிரட்டிஷ்காரனுக்கு கால் அமுக்கி விட்டு சலுகைகள் பெற்றதுபோல் - பாரதியை பின் பற்றி கதையளக்கிறார்கள், இன்றைய சுப்பிரமணிய பாரதிகளான சோவும் அவாள்களின் ஆசிர்வாதத்தைப் பெற்ற ஜெயகாந்தனும் இன்னும் பெறத் துடிக்கிற பார்ப்பனரல்லாத புத்திஜீவிகளும்.
அனைத்து அதிகாரங்களையும் குவித்து வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சட்டத் திட்டத்திற்குக் கட்டுப்பட்டு, மாநில சட்டசபையில் குப்பை கொட்ட அலைந்தவர்கள்தானே இந்த காங்கிரஸ்காரர்கள்!
காங்கிரஸ்காரர்களும், இந்த படித்தப் பார்ப்பனர்களும் வெள்ளைக்காரனை எதிர்த்து எப்படி வீரம் செறிந்த போர் புரிந்திருக்கிறார்கள் பாருங்கள்,
“மக்கள் தொகையில் 2 சதவகிதம் மட்டுமே உள்ள பார்ப்பனர்களில் அச்சமூகத்து மாணவர்கள் 31 சதவிதம், பட்டதாரிகள் 68.8 சதவிகிதம், பொதுத் துறையில் 48 சதவிகிகதம் உள்ளனர். எஞ்சிய இடத்தில்தான் பெரும்பான்மை மக்களாகிய பார்ப்பனரல்லாதவர்கள், இஸ்லாமியகர்ள், போட்டி போட வேண்டியிருக்கிறது.”(முனைவர் பி.சரசு எழுதி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளிட்ட, ‘வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் வாழ்வும் பணியும்’ என்ற நூலிலிருந்து இப்புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது)
இந்தச் சூழலில், நீதிக்கட்சித் தலைவர்கள் பார்ப்பனரல்லாதார் உரிமையை எழுப்பியதில் என்ன தவறு?
நீதிக் கட்சியை ஆரம்பித்து அவர்கள் என்ன மாபெரும் அய்யோக்கியத் தனத்தை செய்துவிடடார்கள்?

1916 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் நாள் தியாகராயர், பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கையை வெளியிட்டார்:
“நீதிகட்சிக்கு டாக்டர் டி.எம். நாயர் குறிக்கோள்களை உருவாக்கினார். அவற்றில் முக்கியமான இரண்டு;
1. தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனரல்லா சமூதாயங்கள் ஒவ்வொன்றிலும் கல்வி, சமூகவியல், பொருளியல், அரசியல், அறவாழ்வு ஆகிய துறைகளில் முன்னேற்றமடையச் செய்தனர்.

2. தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனரல்லா சமுதாயங்கள் எல்லாவற்றின் விருப்பங்களையும் நிறைவேற்றவும், பாதுகாக்கவும் அவர்களின் கருத்துக்களையும் விருப்பங்கள¬யும் அறிந்து ஆராயந்து - அரசாங்கத்திற்கு உண்மையானவையாகவும் தக்க சமயத்திலும் கருத்துக்களை அளிப்பதற்காகப் பொதுச் சிக்கல்களை ஆய்தல்.
மாண்டேகு இந்தியா வந்து சென்றபின் 1919ஆம் ஆண்டில் லண்டனில் ஜாயின்ட் பார்லிமென்டரி குழுமுன் வகுப்புவாரி உரிமை தொடர்பாக சாட்சியம் அளிக்க நீதிக்கட்சியின் சார்பில் டாக்டர் டி.எம். நாயர் அங்கு சென்றார். சர்.கே.வி. ரெட்டி, சர்.ஏ.ராமசாமி முதலியார், கோகா, அப்பாராவ் நாயுடு ஆகியோரும் இக்குழுவில் இடம் பெற்றனர். புதிய சட்டத்தில் அரசுப் பணிகளிலும் பொது நிறுவனங்களிலும் வகுப்புவாரி உரிமை என்பது மக்கள் தொகைக் கேற்ப அமைந்த விகிதாசார முறையேயாகும் என இக்குழு சாட்சி அளித்தது.
தேர்தல் காலங்களில் பொதுத் தொகுதிகளில் பார்ப்பனரல்லாதார்க்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று குழு கோரியது. இக்கோரிக்கை பிரிட்டனிலுள்ள அரசியல்வாதிகட்கு வியப்பை அளித்தது. எனென்னறால், பெரும்பான்மை பார்ப்பனரல்லாத சமுதாயம் சிறுபான்மை பார்ப்பன சமுதாயத்திடமிருந்து பாதுகாப்புக் கேட்பது அவர்கள் கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. இதை டாக்டர் டி.எம். நாயரிடம் அவர்கள் அறிவித்தார்கள். அப்போது டாக்டர் நாயர் “ஓர் ஓநாயிடமிருந்து மிகப் பலவான ஆடுகளைப் பாதுகாப்பதில்லையா?” என்று விளக்கினார்.
பிறகு, ஜாயிண்ட் பார்லிமென்டரி குழவினரிடம் நீதிக் கட்சித் தலைவர்கள் சாட்சியம் அளித்தபோது ‘திராவிடச் சங்கம்’ சார்பில் சர்.ஏ. ராமசாமி முதலியார் குழு முன் சாட்சியம் அளித்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதிகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் அப்போதுதான் தக்க சார்பாளர்களை அவர்கள் சட்டமன்றத்திற்கு அனுப்ப முடியும் என்றும் அவர்வாதிட்டார். இந்தக் கோரிக்கை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும், நியமனம் மூலம் தாழ்த்தப்பட்டவர்கட்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் எனச் சட்டத்தில் வகை செய்யப்பட்டது.”
நீதிக் கட்சி பத்தரிகையான ‘திராவிடன்’ 3.10.1917இல்,
“லெஜிஸ்லேடிவ் கவுன்சிகளில் நிறவேற்றுமைகள் இடம் பெற்றால் உடனே பார்ப்பனரின் பெரிய ஓலம் கேட்கிறது. ஆனால், சாதி வேற்றுமைகள் பற்றி பேசப்பட்டால் அவர்கள் அதுபற்றி அறியாதவர்கள்போல் இருந்து விடுகிறார்கள். இந்தியர்களின் பிறப்புரிமை பற்றி இப்பொழுது நிறையப் பேசப்படுகிறது. ஆனால் பஞ்சமர்க்கு ஒரு நாயின் பிறப்புரிமை கூட மறுக்கப்படுகின்றது. ஒரு பஞ்சமர் மட்டும் லெஜிஸ்லேடிவ் கவன்சிலில் உறுப்பினராய் இருப்பாரேயானல் அவர் தம் சமுதாய மக்கள் அடைந்துவரும் இன்னல்களை அழுத்தமாக எடுத்துரைக்க மாட்டாரா? இதனாலேயே அரசாங்கதின் ஒவ்வொரு கவுன்சிலிலும் அரசாங்கத்தின் எல்லாப் பொது நிலையங்களிலும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று நாம் வறுப்புறத்துகிறோம்.”
என்று எழுதி பாரதி கும்பலின் சாபத்துக்கு ஆளானது.

 
பாரதி ஜனதா பார்ட்டி‘ - 19

ஐந்தாவது அத்தியாயம்


மிழகத்தில் சுதந்திரப் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்ததாகச் சொல்லப்பட்ட காலத்தில், புதுச்சேரியில் அரவிந்தருடன் மிகத் தீவிரமாக ஆன்மிகத் தேடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார், இந்திய விடுதலைப் போராட்ட நெருப்புக்கு தன் கவிதைகளால் நெய் ஊற்றிய சுப்பிரமணிய பாரதி.

1912 இல் பகவத்கீதையை தமிழுக்கு புதுச்சேரியில் இருந்துதான் மொழி பெயர்த்தார். பிறகு கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற மகாவீர காவியங்களையும் புதுச்சேரியில் இருந்தே எழுதினார். 1909 இல் ஞானரதம்ஏறி தேவலோகம் சென்றிருந்தார். அதுவும் புதுச்சசேரியில் இருந்துதான் (ஞானரதம் என்ற நூலில் 1910 வெளியிடப்பட்டது)

நீதிக்கட்சி துவங்கியபின் மீண்டும் சுதந்திரப் போராட்டத்தைத் தூசி தட்டியெடுத்து, அந்தக் கால கட்ட வருணாசிரமத்தின் தலைவனான திலகரின் கொள்கையை தீவிரமாக ஆதரித்துக் கட்டுரைகள் எழுதினார். தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் நீதிக்கட்சிக்கு தரும் ஆதரவை கண்டு அஞ்சி நடுங்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வருத்தப்பட்டு பாரம் சுமந்தார்; நீதிக்கட்சித் தலைவர்களை திட்டித் தீர்த்தார்.

மண்டல் குழு பரிந்துரைகளை வி.பி. சிங் நடைமுறைப்படுத்தியபோது, அதை எதிர்த்து அத்வானி - ரத யாத்திரை நடத்தியதுபோல், நீதிக்கட்சியின் வகுப்புவாரி உரிமை கோரிக்கையை எதிர்த்து, மிகத் தீவிரமாக இந்து மதத்தின் அருமை - பெருமைகளை எழுத ஆரம்பித்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களே உண்மையான இந்துக்கள்என்று பூக்களால் மூடப்பட்ட பாறங்கல்லைத் தூக்கி தாழ்த்தப்பட்ட மக்களின் தலையில் போட்டார் பாரதி.

இந்து மதத்திற்குள் இருக்கும் ஜாதிய வேறுபாடுகளைக் குறிப்பிட்டு அது இந்து மதத்தின் செயலல்ல, இந்துக்களின் செயல் என்று திரிபுவாதம் செய்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் மூன்று வேளை குளிக்க வேண்டும். மாமிசம் தின்பதை குறிப்பாக பசுமாமிசம் தின்பதை விட்டுவிட வேண்டும். விட்டு விட்டால் தீண்டாமை ஒழிந்து விடும் என்று அருளுரை வழங்கினார்.

(தாழ்த்தப்பட்ட மக்கள் பசுமாட்டு இறைச்சி உண்பதை கேள்விக்குட்படுத்தி டாக்டர் அம்பேத்கர் சொன்னதோடு இதை முடிச்சுப்போட்டு பார்க்கிறார்கள் சிலர். இப்படிச் செய்வது திரிபுவாதம், அயோக்கியத்தனம்.

பாரதி, பசுமாட்டை தாழ்த்தப்பட்ட மக்களை விடவும் உயர்ந்ததாக, புனிதமாகக் கருதுகினார். ஆம், அவர் பசுக்களின் சார்பாக கதறுகிறார். டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக, சொல்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். காரர்களின் சுதேசியஉணர்வுக்கும், முற்போக்களார்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?)

ஆனாலும், காங்கிரசின் மிதவாத, தீவரவாத தலைவர்கள் கடைப்பிடித்த தீண்டாமை, தாழ்த்தப்பட்டவர்களை அவமானப்படுத்தி அவர்கள் பேசிய பேச்சு எழுத்து இவைகளைக் கேட்டும் கண்டும் செவிடராய், ஊமையாய் நடித்தார். அப்படிப் பேசிய தலைவர்களையே தன் தலைவராகக் கொண்டார்; அவர்களையே உயர்த்திப் பிடித்தார்.

1918இல் நீதிக்கட்சி, தாழ்த்தப்பட்ட சமூகத்தின் குழந்தைகளை சென்னை மாநகராட்சி மாதிரிப் பள்ளிகளில் சேர்க்க முயற்சித்தபோது, பாரதி உச்சி மீது வைத்து மெச்சிக் கொள்கிற காங்கிரஸ் அவையின் உறுப்பினரான அன்னிய தேசத்துப் பெண் அன்னிபெசன்ட் அம்மையார் அவர்கள்,
” (தாழ்த்தப்பட்டவர்கள்) முற்பிறவியில் தாம் செய்த தீவினைகளை இப்பிறவியில்  அனுபவிக்கிறார்கள். அது மட்டுமின்றி, உயர்சாதிப் பிள்ளைகளுடன் பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகள் பொது கல்வி நிலையங்களில் கலந்து இருப்பதற்கு உரிய தகுதியை அவர்கள் பல தலைமுறைகளுக்குப் பின்னரே பெற முடியும்என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நீதிக்கட்சியும் பறையர் மகாஜன சபையும் அன்னி பெசன்டுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர்.

பாரதி மிகச் சிறந்த பெண்மணிஎன்று உதாரணப் பெண்ணாகக் குறிப்பிடுகிற அன்னிபெசன்டின் லட்சணம் இது.

மிகச் சிறந்தவரே இப்படி என்றால், மோசமானவர் எப்படியோ?

ஒரு ஆளுக்கு நாலு மகன்கள் இருந்தனராம், வீடடுக்கு வந்த விருந்தாளி, “உங்க நான்கு பையன்களில் நல்லவன் யாரு?’ன்னு கேட்டாராம்.
அதுக்கு அந்த ஆளு சொன்னாராம், “அதோ வீட்டு கூரைமேல நின்னுக்கிட்டு தீப்பந்தத்தைத் தூக்கிப் போட்டு விளையாடிக்கிட்டு இருக்கானே, அவன்தான் என் செல்லக்குட்டிஅப்படின்னாராம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்