அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், ஆகஸ்ட் 08, 2012

இந்திய தேசிய கொடியை வடிவமைத்த‌து யார்?

பதுருதின் தியாப்ஜி குடும்பம் தான் இந்திய தேசிய கொடியை வடிவமைத்த‌து என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? கண்டிப்பாக‌ இதை படித்து மறைக்கப்பட்டு இருக்கும் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள். தெரியாதவர்களுக்கு தெரியபடுத்துங்கள்!

லண்டனில் மெட்ரிக் படிப்பை முடித்து Middle Temple Barrister (வழக்கறிஞர்)April 1867-இல் தான் பணியை  தொடர்ந்தார். பாம்பேயின் முதல் வழக்கறிஞராக திகழ்ந்த இவர், பின்னர் மிகவும் புகழ் பெற்று விளங்கினர். 1895 பாம்பே உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். பின்பு 1902-ல் இவரே முதல் இந்திய தலைமை நீதிபதியாக இருந்தார் மற்றும் பாரபட்சம் பார்க்காமல் தீர்ப்பு வழங்குவதில் கண்ணிய மிக்கவராக இருந்தார். 

பல வருடகாலம் பொது வாழ்க்கையில் ஈடுபட்டார். இந்திய நேஷனல் காங்கிரஸின் முதல் முஸ்லிம் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். 1876 ajmuan i islam இயக்கம் மூலமாக அனைத்து முஸ்லிம் மக்களின் முனேற்றத்திற்காக பாடுப்பட்டார். இந்தியாவில் முஸ்லிம் மக்கள் அனைத்து மக்களுடனும் சகோதரத்துவ உணர்வுடன்  சரி சமமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 

அரசியல் வாழ்கையில் நல்ல பெயரும் பெற்றார். இவருடைய ஆளுமை திறனால் தான் முஸ்லிம்கள் அதிகமாக இந்திய நேஷனல் காங்கிரசில் சேர்ந்தனர் என்று புகழாரம் சூட்டினார் மகாத்மா காந்திஜி. அஹ்மத் கான் மற்றும் Badruddin Tyabji இந்திய நேஷனல் காங்கிரசுக்கு பெரும் பங்கு ஆற்றினர். முஸ்லிம் விரோத கொள்கைக்கு எதிராக இருந்தார். 

இந்தியாவில் மத சார்ப்பற்ற அரசியல் வர விரும்பினார். அவருடைய மனைவி தான் முதல் சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியை வடிவமைத்தார். அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் சமுதாயதிற்கும், கல்விக்கும், இந்திய விடுதலைக்கும் பெரும் பங்கு ஆற்றினார்கள். 

ஆனால் தேசிய கொடியை ஒரு முஸ்லிம் தான் வடிவமைத்தார் என்பதற்காக பல இந்துத்துவ அமைப்புகள் அவர்களுடைய அலுவலங்கள் மற்றும் பொது இடங்களில் இந்திய தேசிய கொடியை பயன் படுத்துவதே இல்லை, அவர்கள் அவர்களின் காவி கொடியை தான் ஏற்றுவார்கள். ஆனால் டெல்லி செங்கோட்டையில் தான் பிரதமர் கொடியை ஏற்றுகிறார். அப்போ அந்த கட்டிடம் யார் கட்டியது என்று அவர்கள் சிந்திக்கவில்லை. அதை ஷாஜகான் தான் கட்டினார் என்பதை மறந்து விட்டனர். அதனால் அவர்களுக்கு நாம் ஞாபகம் ஊட்டவேண்டும். அது நமது கடமை அல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்