அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012

அசாமில் தொடரும் கலவரம்: ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு

அசாம் மாநிலத்தில் கலவரம் தொடர்வதால் 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அசாமில் கோக்ரஜார் மாவட்டத்தில் போடோ  தீவிரவாதிகளுக்கும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த மாதம் வெடித்த மோதல் கலவரமாக மாறி, இன்னும் தொடர்கிறது.

இந்த கலவரம் அசாமின் சிராங், பக்சா மற்றும் துப்ரி ஆகிய அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது.

இக்கலவரத்தில் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று கோக்ரஜார் மாவட்டத்தில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

பக்சா மற்றும் சிராங் மாவட்டத்தில் தலா ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஆங்காங்கே மோதல்கள் தொடர்வதையடுத்து நான்கு மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் முதல்வர் தருண் கோகாய் உத்தரவுபடி அசாம் கலவரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக சிபிஐ அதிகாரிகள் இன்று கோக்ரஜார் வந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்