அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, பிப்ரவரி 22, 2013

தொடர் குண்டுவெடிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம்

ஹைதராபாத் நகரில் நேற்றைய தினம் (21.02.2013) நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 15 அப்பாவிகள் பலியாகினர். 83 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இக்குண்டுவெடிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது .

இறந்த பதினைந்து அப்பாவிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். இதைப் போன்ற தாக்குதல்கள் மக்களிடையே அமைதியின்மையையும், நல்லிணக்கத்தையும் குலைக்கின்றன. இத்தருணத்தில் எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு தீய சக்திகளின் சதிகளை முறியடிக்க வேண்டும்.

சனி, பிப்ரவரி 09, 2013

ஜனநாயக அமைப்பு முறையை கேலிக்கூத்தாக்கியுள்ளது காங். - SDPI

அஃப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்கு என்பது, முஸ்லிம்கள் இந்த நாட்டில் பாதுகாப்புடன் வாழ முடியுமா என்ற சந்தேகத்தையும், மத்திய காங்கிரஸ் அரசின் மீது அவ நம்பிக்கையயும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நாட்டின் அரசமைப்பு சட்டம்,ஜனநாயக அமைப்பு முறை ஆகியவற்றை கேலிக்கூத்தாக்கியுள்ளது இந்த தண்டனை.ஏனெனில் சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வில்லை.சமூகத்தின் கூட்டு மனச்சாட்சியை திருப்தி படுத்த வழங்கப்பட்ட தீர்ப்பு.

 
இந்த நாட்டின் ஜனநாயகம், நீதி அமைப்பு முறை, முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பதனை மீண்டும் ஒரு முறை இந்த தண்டனை நிரூபித்துள்ளது என்று  அப்துல் ஹமீது, எஸ்.டி.பி.ஐ கட்சி - தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் தனது அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

தேடுதல்