அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

இந்திய மக்கள் அனைவருக்கும் பாப்புலர் பிரண்டின் ஈதுல் பித்ர் முபாரக்

ஈதுல் பித்ர் பெருநாள் உலகளாவிய சகோதரத்துவத்தையும், பிற மனிதர்களிடம் இரக்கம் காட்டுவதையுமே போதிக்கிறது.


ரமலான் மாதத்தில் நோன்பு, வணக்க வழிபாடுகள், ஜக்காத் மற்றும் பிற நல் அமல்களைச் செய்து ரமளானில் கிடைக்கும் மன நிறைவை முஸ்லிம்கள் உணர்கின்றனர். இந்த பயிற்சி ஆண்டு முழுவதற்கும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது.

ஒன்றிணைந்து அமைதியாக வாழ்தல், மத ஒற்றுமை, பிறரிடம் இரக்கம் காட்டுதல், உலகளாவிய சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வலிமையான சமூகத்தை கட்டியெழுப்பவே ரமலானும், ஈதுல் பித்ரும் மக்களை ஆர்வமூட்டுகிறது.

இந்த பெருநாளோடு பின்னிப் பிணைந்துள்ள செய்திகளையும், மதிப்பீடுகளையும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவும் வலியுறுத்தும் அதே வேளையில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
 
இல்யாஸ் முஹம்மது தும்பே 
மாநில தலைவர் 
பாப்புலர்  பிரண்ட்  ஆப்  இந்தியா
கர்நாடகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்