அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

கோவை மாவட்ட நேஷனல் விமன்ஸ் பிரண்ட் (NWF) நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி


ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கோவை மாவட்ட நேஷனல் விமன்ஸ் பிரண்ட் சார்பாக பெண்கள் மட்டுமே பங்கேற்கும் நோன்பு திறக்கும் (இஃப்தார்) நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல இவ்வருடம்  நோன்பு திறக்கும் நிகழ்ச்சி 6 /8 /2011 சனிக்கிழமையன்று மாலை 5 மணிக்கு கோவை போத்தனூர் சாலையிலுள்ள சங்கமம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை NWF-ன் கோவை மாவட்ட செயலாளர் S.அலீமா பேகம் அவர்கள் வரவேற்றுப் பேசினார். NWF-ன் கோவை மாவட்ட தலைவர் M.ஹபீபுன்னிஷா அவர்கள் தலைமையுரை ஆற்றினார். NWF-ன் மாநிலத் தலைவர் M.ஆயிஷா சித்தீக்கா அவர்களும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநிலப் பேச்சாளர் M.அக்பர் அலி அவர்களும் சிறப்புரையாற்றினர். NWF-ன் மாவட்டக் குழு உறுப்பினர் H.சமீனா அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார். 

அதன்பிறகு நடைபெற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் சுமார் 1500 தாய்மார்களும், சகோதரிகளும் கலந்து கொண்டனர். நிறைவாக "இந்திய வரலாற்றில் முஸ்லிம்கள்" காணொளி திரையிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்கள் பார்வைக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்