அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

முஸ்லிம்களின் சுதந்திர தின அணிவகுப்பிற்குத் தடை செய்த காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் சார்பாக முஸ்லிம் சமூகத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் வகையில் கடந்த 3 வருடங்களாக ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர அணிவகுப்பை தமிழகத்தில் நடத்தி வருகின்றோம்.

இந்த வருடம் சுதந்திர தின அணிவகுப்பை நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் நடத்த தீர்மானித்து, கடந்த 20-07-2011 அன்றே முறைப்படி நெல்லை மாநகர போலிஸ் கமிஷ்னரிடம் மனு அளித்தோம். 

இதற்கு அனுமதி வழங்காமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்து 13-08-2011   சனிக்கிழமையன்று இந்த சுதந்திர தின அணிவகுப்பை தடை செய்து அனுமதி மறுத்து விட்டது. காவல் துறை. 

நீதிமன்றத்தை அணுகக்கூட வாய்ப்பு வழங்காமல் முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுக்கு மாபெரும் துரோகமிளைத்துவிட்டது.

காவல் துறை மற்றும் தமிழக அரசின் இந்த உரிமை மீறலையும், சிறுபான்மை விரோதப் போக்கையும் கண்டிக்கும் வகையில் வருகின்ற 17-08-2011அன்று மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம். அதனடிப்படையில்  
கோவையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 17-08-2011 நேரம் :மாலை 4.45 மணிக்கு
இடம் : செஞ்சிலுவை சங்கம் முன்புறம்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்