அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி


ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக  நோன்பு திறக்கும் (இஃப்தார்) நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல இவ்வருடம்  நோன்பு திறக்கும் நிகழ்ச்சி 7/8/2011 ஞாயிற்றுக் கிழமையன்று மாலை 5 மணிக்கு கோவை போத்தனூர் சாலையிலுள்ள பாரதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை பாப்புலர் ஃப்ரண்ட் -ன் கோவை மாவட்ட செயலாளர் M.முஸ்தபா அவர்கள் வரவேற்றுப் பேசினார். பாப்புலர் ஃப்ரண்ட் -ன் கோவை மாவட்ட தலைவர் K.ராஜா உசேன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலப் பேச்சாளர் மௌலவி M.மெஹபூப் அன்சாரி பைஜி அவர்கள் சிறப்புரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் -ன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.I.அப்துல் ஹக்கீம் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார். 

அதன்பிறகு நடைபெற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் சுமார் 1500 சகோதரர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக "பாப்புலர் ஃப்ரண்ட் -ன் சமூகப் பணிகள்" காணொளி திரையிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்கள் பார்வைக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்