அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

மியான்மர் நாட்டில் முஸ்லிம் பெண்களை கற்பழித்த ராணுவம்

மியான்மர் நாட்டில் உள்ள ரோகின்கயா பகுதியில் கடந்த மாதம் பயங்கர மத கலவரம் ஏற்பட்டது. மியான்மரில் புத்த மதத்தினர் அதிகமாக உள்ளனர். இதுபோல சிறுபான்மை மதங்களும் உள்ளன. இதில் புத்தமதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் நடந்தது.

இந்த கலவரத்தில் 80 பேர் கொல்லப்பட்டதாக அரசு தரப்பு தகவல்கள் தெரி விக்கின்றன. ஆனால் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றதால் சர்ச்சையில் சிக்கிய பிரதீபா பாட்டீல்

முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்,தமது பதவி காலத்தில் அளிக்கப்பட்ட  விலை உயர்ந்த பரிசு பொருட்களையெல்லாம் தன்னுடனேயே வீட்டுக்கு எடுத்துச்  சென்றுவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதிபா பாட்டீல் கட்ந்த ஐந்தாண்டு காலம் இந்திய குடியரசு தலைவராக பதவி  வகித்தபோது, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், உலக நாடுகள் பலவற்றிற்கும் அரசு  முறை பயணமாக சென்றார்.

அப்போது அவருக்கு பல நாட்டு அரசுகளும்,சந்திக்கும் முக்கிய  பிரமுகர்களும்,மாநிலங்களில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் விலை மதிப்புடைய  பரிசு பொருட்கள் அளிக்கப்பட்டன.

சாதியத்தையும் மதத்தையும் அரசியலுக்குள் கொண்டுவந்தவர் காந்தி: அருந்ததிராய்

ருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சியுடன் உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் திராணி வேண்டும். தன்னுடைய 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ தமிழ் மொழிபெயர்ப்பு நூலான - 'சின்ன விஷயங்களின் கடவுள்’ - வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த அருந்ததியைச் சந்தித்தேன்.  

 ''இன்றைய அருந்ததி ராய் உருவாக, சின்ன வயது வாழ்க்கை எந்த அளவுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொல்ல முடியுமா?''
''நான் ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோது என் பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. கலப்புத் திருமணம் செய்து அந்தக் கணவனையும் பிரிந்த ஒரு பெண், தன் கிராமத்துக்கு மீண்டும் திரும்பும்போது நம் சமூகம் எப்படி வரவேற்கும் என்று  சொல்ல வேண்டுமா என்ன? எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாங்கள் இருந்தோம். இப்படித்தான் உறவுகளும் சமூகமும் எனக்கு அறிமுகம் ஆனது.''

வியாழன், ஆகஸ்ட் 02, 2012

மகாத்மாவை அதிர வைத்த மாமனிதர் உமர் சுப்ஹானி !!!!


தேசவிடுதலைக்காக போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர்.

அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர்.

லட்சக்கணக்கில் நிதி திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி

சுதந்திர போராட்ட வீரர் தளபதி திருப்பூர் மொய்தீன்


பதவி பேறுகள் எதுவும் இல்லாமலே முப்பத்தைந்து ஆண்டுகள் தன்னலமற்ற அரசியற் பணி புரிவது என்பது அரசியல் உலகில் ஒரு அற்புத விந்தையாகும்.அந்த விந்தையை காரிய சாதனையாக இயற்றி நம் மத்தியில் வாழ்ந்து மறைந்தவர் திருப்பூர் மொய்தீன். அவர் தமிழ்நாடு முஸ்லீம் லீக் துணை தலைவராகவும், சிறந்த பேச்சாளராகவும், வீர வாள் பரிசு பெற்ற தளபதியாகவும் விளங்கினார்.

தளபதி மொய்தீன் அவர்களுடைய அரசியல் வாழ்வு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பரந்துபட்டதாகும். "கொடி காத்த குமரன்" என்று இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழரின் வீரத்திற்கு இலக்கணமாக விளைந்த திருப்பூர் குமரனும், திருப்பூர் மொய்தீன் அவர்களும்

தேடுதல்