அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வியாழன், மார்ச் 14, 2013

இனவாத இலங்கை அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய ஆர்ப்பாட்டம்

சென்னை: இனவாத இலங்கை அரசை கண்டித்தும், ஐநா சபையில் இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வர வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாபெரும் ஆர்பாட்டத்தை நடத்தியது. 13.03.2013 அன்று மாலை 4.30 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வியாழன், மார்ச் 07, 2013

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை இழந்துவிட்டோம் – இ.அபூபக்கர் இரங்கல்!

ஹுகோ சாவேஸ் 
புதுடெல்லி: பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து அமெரிக்காவின் திமிரை எதிர்த்த தீரமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை (தென் அமெரிக்க நாடான வெனிசூலா நாட்டின் அதிபர்) ஹுகோ சாவேஸின் மரணத்தின் மூலம் உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் இழந்துவிட்டார்கள் என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

வெள்ளி, மார்ச் 01, 2013

சென்னையில் மார்ச் 7-இல் தர்ணா போராட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் அறிவிப்பு

நேற்று திருச்சி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மாநில தலைவர் இஸ்மாயில் பத்திரிக்கை நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 22/01/2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் இரண்டு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஒரு தரப்பினரான முஸ்லிம்கள் நூற்றுக்கும்மேற்பட்டோர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டு மாணவர்கள் உட்பட 72 நபர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டார்கள். 

வெள்ளி, பிப்ரவரி 22, 2013

தொடர் குண்டுவெடிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம்

ஹைதராபாத் நகரில் நேற்றைய தினம் (21.02.2013) நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 15 அப்பாவிகள் பலியாகினர். 83 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இக்குண்டுவெடிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது .

இறந்த பதினைந்து அப்பாவிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். இதைப் போன்ற தாக்குதல்கள் மக்களிடையே அமைதியின்மையையும், நல்லிணக்கத்தையும் குலைக்கின்றன. இத்தருணத்தில் எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு தீய சக்திகளின் சதிகளை முறியடிக்க வேண்டும்.

சனி, பிப்ரவரி 09, 2013

ஜனநாயக அமைப்பு முறையை கேலிக்கூத்தாக்கியுள்ளது காங். - SDPI

அஃப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்கு என்பது, முஸ்லிம்கள் இந்த நாட்டில் பாதுகாப்புடன் வாழ முடியுமா என்ற சந்தேகத்தையும், மத்திய காங்கிரஸ் அரசின் மீது அவ நம்பிக்கையயும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நாட்டின் அரசமைப்பு சட்டம்,ஜனநாயக அமைப்பு முறை ஆகியவற்றை கேலிக்கூத்தாக்கியுள்ளது இந்த தண்டனை.ஏனெனில் சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வில்லை.சமூகத்தின் கூட்டு மனச்சாட்சியை திருப்தி படுத்த வழங்கப்பட்ட தீர்ப்பு.

 
இந்த நாட்டின் ஜனநாயகம், நீதி அமைப்பு முறை, முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பதனை மீண்டும் ஒரு முறை இந்த தண்டனை நிரூபித்துள்ளது என்று  அப்துல் ஹமீது, எஸ்.டி.பி.ஐ கட்சி - தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் தனது அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

தேடுதல்