அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், மார்ச் 05, 2012

கொடுரமான முறையில் கொள்ளப்பட்ட முஹம்மது அல் துர்ராவின் மரணம் குறித்து 11 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை !

பதினொன்று ஆண்டுகளுக்கு முன்பு காஸ்ஸாவில் சியோனிச பயங்கரவாத இஸ்ரேல் ராணுவத்தின் துப்பாக்கி தோட்டாகள் தாக்கி இறுதி மூச்சை விட்ட பலஸ்தீன் பாலகன் முஹம்மது அல் துராவின் மரணத்தை குறித்து விசாரணை நடத்த பிரான்சு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி காஸ்ஸாவில் நெட்ஸாரிமிற்கு அருகே தனது தந்தையின் மடியில் கிடந்து சியோனிஸ்டுகளின் துப்பாக்கி தோட்டா தாக்கிய 12 வயதான துரா மரணமடைந்தார். இஸ்ரேலின் கொடூரத்தின் அடையாளமாக உலக அதிர்ச்சியுடன் கண்ட முஹம்மது அல் துராவின் மரணக்காட்சிகளை முதன் முதலாக ஃபிரான்சு நாட்டு தொலைக்காட்சி சேனலான பிரான்ஸ்-2 ஒளிபரப்பியது. சார்ல்ஸ் எண்டர்லி என்ற ரிப்போர்டர் இந்த காட்சிகளை வெளியிட்டார். கான்கீரீட் சுவற்றின் பின்னால் ஒளிந்துகொண்டு சொந்த மகனை துப்பாக்கி தோட்டாக்களிலிருந்து பாதுகாக்க 45 நிமிடங்களாக முயற்சித்த தந்தை ஜமால் அல்துரா ராணுவத்தினரிடம் சுடாதீர்கள் என கெஞ்சினார்.
ஆனால், மனித நேயம் சிறிதும் இல்லாத சியோனிஸ்டுகளுக்கு இந்த கோரிக்கை எல்லாம் காதில் கேட்கவா செய்யும். அவர்களது கொடூரத்தை அரங்கேற்றினார்கள். இறுதியில் முஹம்மது அல் துரா தோட்டா தாக்கி தனது தந்தையின் மடியில் கிடந்து மரணித்தார். தந்தையின் மடியில் துடிதுடித்து மரணிக்கும் காட்சியை பிரான்சு சேனல் ஒளிபரப்பியது. இக்காட்சிகள் போலியானது என கூறி ஊடக விமர்சகரான ஃபிலிப் கார்ல்ஸெண்ட்ரி என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அவர் மீது அவதூறு குற்றம் சாட்டப்பட்டது. 


இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 2008-ஆம் ஆண்டு ஃபிலிஃப் செண்ட்ரி மேல் முறையீடு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிப்போர்டர் எண்டரிலினும் மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பிரான்சு நீதிமன்றம் முஹம்மது அல் துராவின் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

ஃபலஸ்தீன் போராட்டத்தின் சின்னமாக கருதப்படும் முஹம்மது அல் துராவின் பெயரை ஃபலஸ்தீன் தெருக்களுக்கும், டீ ஷர்டுகளுக்கும் அளித்து அவரது உயிர் தியாகத்தை அணையாமல் ஃபலஸ்தீன் மக்கள் பாதுகாத்து வருகின்றனர். 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முஹம்மது அல் துரா செய்திகளில் இடம் பெற்றுள்ளார்.

குஜராத் இனப்படுகொலை: பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் பரிதாப நிலை

சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் குஜராத் முஸ்லிம்கள்
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலைக்கு பிறகு நிவாரண நடவடிக்கைகளில் மோடி அரசு காட்டிய அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக நசிந்து போனதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத, நகரங்களில் இருந்து மிக தொலைவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில்தான் பெரும்பாலான மக்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் ஒதுங்கிவிட்டதாக குஜராத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜன்விகாஸின் சர்வே கூறுகிறது.
எட்டு மாவட்டங்களில் 83 மறுவாழ்வு காலனிகள் வசிக்கும் 16,087 இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய சர்வேயில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 2002- ஆம் ஆண்டு இனப் படுகொலைக்கு முன்பு அவர்கள் வசித்த பகுதிகளுக்கு திரும்பவில்லை. அண்டை வீடுகளில் வசிக்கும் மக்களின் மிரட்டல் உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இனப் படுகொலையின் போது வீடும், வியாபார நிறுவனங்களும் இழந்த முஸ்லிம்களுக்கு புதிய இடங்களில் வியாபாரம் துவங்க மூலதனம் இல்லை. எப்பாடு பட்டேனும் ஏதாவது வியாபாரத்தை துவக்கினாலும் வியாபாரம் குறைந்ததால் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
காலனிகள் நகரங்களில் இருந்து மிகவும் தொலைவில் உள்ளன. இதனால் வியாபாரம் குறைந்துள்ளது. இதனால் வருமானத்தில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசோ அல்லது அரசு சாரா நிறுவனங்களோ ஒரு வீடு கூட கட்டிக் கொடுக்கவில்லை. முஸ்லிம் அறக்கட்டளை நிறுவனங்கள்தாம் வீடுகளை கட்டியுள்ளன. ஆனால், காலனிகளில் முஸ்லிம்களுக்கு ஆவணங்கள் மூலம் உரிமையாளர்களுக்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை.
33 சதவீத காலனிகளில் போதுமான அளவு சுத்தமான குடிநீர் வசதி இல்லை. 81 சதவீதம் பேருக்கு சாக்கடை நீர் செல்வதற்கான வசதி இல்லை. 86 சதவீதம் காலனிகளிலும் சாலைகள் இல்லை. தொலைதூரத்தில் உள்ள கிராமங்களில் 34 காலனிகளில் வெறும் 5 இல் மட்டுமே தேசிய கிராமீய சுகாதார திட்டத்தின் மூலமாக இன்சூரன்ஸ் கார்டு கிடைத்துள்ளது. 55 சதவீத காலனிகளுக்கு அருகில் அங்கன்வாடிகள் கிடையாது.
வேகமான நடவடிக்கைகள் மூலம் குஜராத் இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் வசிக்க செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று மோடி அரசு அடிக்கடி அறிவித்தபோதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாநில அரசு தங்களது நிலைமையை மாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
நன்றி: ஆசியநண்பன் 

அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் !

நரமாமிச மோடிக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க மக்கள் 
நியூ யார்க் : கோத்ராவை தொடர்ந்து குஜராத்தில் சிறுபான்மையினர் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி அமெரிக்காவில் பல்வேறு சமுதாயங்களை சார்ந்த 40 குழுக்கள் ஒன்று திரண்டு நடந்த சம்பவங்களுக்கு நீதி வேண்டும் என்றும் மோடி உள்ளிட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரி மாபெரும் பேரணி நடத்தினர்.

பேரணியில் கலந்து கொண்ட 40 குழுக்களில் ஒன்றான மதங்களுக்கிடையான புரிந்துணர்வு குழுவின் தலைவர் மார்க் லூகென்ஸ் "எச்சமூகத்தை சார்ந்த எந்த ஒரு தனி நபரும் அவர் சார்ந்த மதத்தின் பெயரால் இனச்சுத்திகரிப்பு செய்யப்படும் போது அவர்களுக்கு ஆதரவாகவும் அநீதிக்கு எதிராகவும் போராடுவது எங்கள் மீது கடமையாக உள்ளது" என்று கூறினார்.

"மதத்தின் பெயரால் அநீதி இழைக்கப்படும் போது அம்மதத்தை சேர்ந்தவர்கள் முன்னின்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அதனால் தான் இப்பேரணியில் கலந்து கொள்ள முடிவு செய்தோம்" என்று ப்ரொகரஸிவ் இந்துக்களின் கூட்டமைப்பின் தலைவரான சுனிதா விசுவநாத் கூறினார்.

2005ம் ஆண்டு இதே குழுக்களின் முயற்சியினாலேயே நரேந்திர மோடிக்கு அமெரிக்காவுக்கு வருகை தர விசா மறுக்கப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2002 கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி விரைவாக கிடைக்க குஜராத் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
நன்றி: ஆசியநண்பன்

சனி, மார்ச் 03, 2012

நர மாமிச மோடியின் என்கவுண்டர் வெறிக்குப் பலியான முஸ்லிம்கள்

 குஜராத் மோடி அரசின் போலீஸ் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 20க்கும் மேற்பட்ட போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளது.

இதில் பெரும்பாலும் முதல்வர் மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர்-இ-தய்யிபா போராளிகள் மற்றும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றவர்கள் போன்ற பொய்க் கதைகளை கூறி இவ்வளவு படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர்.

... இந்த கொலைகள் எல்லாம் கடந்த 2002 மற்றும் 2006 ஆம் ஆண்டிற்கு இடையே நடந்தவைகளாகும்.

2002 அக்டோபர் 22-ஆம் தேதி சமீர்கான் பத்தான் என்பவரை கொலைச் செய்து குஜராத்தின் மோடி போலீஸ் போலி என்கவுண்டர் படுகொலைகளை துவக்கி வைத்தது. ஒரு போலீஸ்காரரை கத்தியால் குத்திய வழக்கில் சமீர் பத்தானை கத்தியால் குத்திய சம்பவத்தை நடித்துக் காட்டவேண்டும் என பொய் கூறி சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். அவ்விடத்தில் வைத்து போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்து தப்பி ஓட முயன்ற பத்தான் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற பொய்க் கதையை பரப்பினர். இதுத் தொடர்பான வழக்கு நடந்துவருகிறது.

அஹ்மதாபாத் கேலக்ஸி தியேட்டருக்கு அருகே 2003 ஜனவரி 13-ஆம் தேதி ஸாதிக் ஜமால் மெஹ்தர் என்பவரை மோடியின் போலீஸ் போலி என்கவுண்டரில் படுகொலை செய்தது. மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர் போராளி என பொய் கூறி இந்த படுகொலை நிகழ்ந்தது. ஆனால் பாவ் நகரில் ஸ்கூட்டர் வியாபாரியாக வாழ்க்கையை ஓட்டியவர்தாம் ஸாதிக் ஜமால் மெஹ்தர்.

2004-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக், ஸீஷான் ஜோஹர், அம்ஜத் அலி ராணா ஆகியோரை மோடியின் போலீஸ் அநியாயமாக சுட்டுக் கொலைச் செய்தது. இவர்களை அஹ்மதாபாத்திற்கு வெளியே உள்ள ஒரு விவசாய பண்ணையில் வைத்து கொலைச் செய்த பிறகு போலீஸ் அஹ்மதாபாத்திற்கு அருகே உள்ள நரோடா பகுதிக்கு இறந்த உடல்களை கொண்டுவந்து அதிகாலை நான்கு மணிக்கு போலி என்கவுண்டர் நாடகத்தை அரங்கேற்றினர். இவர்களும் மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர் போராளிகள் என மோடியின் போலீஸ் கூறியது.

அதனைத் தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்ந்தது. நவம்பர் 26-ஆம் தேதி அதிகாலை நரோல் க்ராஸிங்கில் இந்த போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்த்தப்பட்டது. சொஹ்ரபுத்தீன் ஷேக்கையும், அவரது மனைவி கெளஸர் பீயையும் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேரை படுகொலைச் செய்த அதே விவசாய பண்ணை வீட்டில் வைத்து கொலைச் செய்ததாகவும், சொஹ்ரபுத்தீன் மனைவி கெளஸர் பீயை கொலைச் செய்யும் முன்பு மோடியின் போலீஸ் மிருகங்கள் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்பதும் பின்னர் நிரூபணமானது.

கவுஸர் பீயை கொலைச் செய்து தீயிலிட்டு கொளுத்தியுள்ளனர். இந்த போலி என்கவுண்டர் படுகொலைக்கு சாட்சியான போலீஸ் இன்ஃபார்மர் துளசிராம் பிரஜாபதியை கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி படுகொலைச் செய்தனர்.

2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி காந்தி நகர் போலீஸ் சவுராஷ்ட்ராவை சார்ந்த ரஹீம் காஸிம் ஸம்ராவை போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்தனர். 2006 மார்ச் 17-ஆம் தேதி வாத்வாவில் வைத்து நான்கு முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகள் என குற்றம் சாட்டப்பட்டு மோடியின் போலீசாரால் போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்யப்பட்டனர். கொலைச் செய்யப்பட்டது யார் என அடையாளம் காணப்படவில்லை.

காவி தீவிரவாதத்தின் வேர்கள் புரையோடிய குஜராத் அரசு இயந்திரத்தையும் மீறி, வெளிவந்த சில சாம்பிள்கள். இன்னும் எத்தனையோ கொடூரங்கள் வெளியுலகிற்கு கசிய விடப்படவே இல்லை என்பதே நிஜம்.

அகில உலக அடாவடி தாதா என்று பெயரெடுத்த அமெரிக்காவே நரேந்திர மோதி விஷயத்தில் கவனமாக இருக்கிறது. மத துவேஷத்தை தன் ரத்த நாளங்களில் ஓடவிட்டு முஸ்லிம்களின் ரத்தத்தில் குளித்து வரும் ஒரு மனித குல விரோதிக்கு தனது நாட்டில் காலை கூட வைக்க அருகதையும், யோக்யதையும் இல்லை என்று விசாவை மறுக்கிறது அமெரிக்கா.

ஆனால், இரண்டாயிரம் இந்திய முஸ்லிம் சகோதரர்களை தன் கண் அசைவின் மூலம் தீர்த்துக்கட்டிய ஒரு மனித மிருகத்தை பிரதமராக்கிட துடிக்க்கிறார்கள் சிலர்.

குஜராத்தி முஸ்லிம்களின் ரத்த கவுச்சி இந்தியாவெங்கும் பரவ வேண்டுமா?

முஸ்லிம்களின் குரல்வளையில் ஏறி நின்று தான் இந்துக்களின் ஒற்றுமை பற்றி பேச வேண்டுமா?
 
நாலாந்தர குடிமக்களாக முஸ்லிம்களை நிர்கதியாக்கி விட்டு, எதை நோக்கி இந்தியா பயணிக்கப் போகிறது?
 
இந்திய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அத்துனை அநீதிகளும் "மதசார்பற்ற இந்தியா" என்ற போலி முகமூடியுடன் தானே நடந்தேறியது? போலியின் முகமே இவ்வளவு விகாரமாக இருந்தால், நிஜ முகம் எவ்வளவு கோரமாக இருக்கும்?
 
மோடி தண்டிக்கப்படாத வரை இந்தியாவில் நீதம் என்று ஒன்றுமில்லை.
நன்றி: CHK  

வெள்ளி, மார்ச் 02, 2012

நியு சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைப் பற்றி எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத பொய்யான செய்தியை வெளியிட்ட தி நியு சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையை வன்மையாக கண்டிப்பதோடு அவர்களுக்கு பதில் கடிதத்தையும் அனுப்பியுள்ளது பாப்புலர் ஃபரண்ட்.

 டெல்லியில் வெளிவரும் பத்திரிக்கையான தி நியு சண்டே எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 26 ஞாயிற்று கிழமை அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பாக தவறான செய்தியை வெளியிட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் அவர்கள் அப்பத்திரிக்கைக்கு பதில் கடிதத்தையும் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது இந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகள் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய அவதூறு பிரச்சாரத்தை பரப்பி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

தி நியு சண்டே எக்ஸ்பிரஸில் வெளியான செய்தி முழுக்க முழுக்க கற்பனை செய்யப்பட்டதும் ஜோடிக்கப்பட்டதுமேயாகும். இஸ்ரேலுடனான உறவை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், இதற்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானம் எடுத்துள்ளது எனவும் இதனால் காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகளை நோட்டமிட்டு வருவதாக கூறியுள்ளது அப்பத்திரிக்கை.

இஸ்ரேலுடனான உறவை கண்டித்து தீர்மானம் எடுக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. இன்னும் எத்தனையோ மதச்சார்பற்ற அமைப்புகளும், முஸ்லிம் அமைப்புகளும் இத்தகைய உறவை வன்மையாக கண்டித்திருக்கிறது. ஜியோனிச காரர்களின் ஊடுறுவதால்தான் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக மேலும் அவர் கூறினார்.

தேடுதல்