அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சனி, ஆகஸ்ட் 04, 2012

வள்ளல் பக்கிர் முஹம்மத்


வ.உ.சி 

சுதந்திர போராட்ட வீரர் வ உ சி க்கு கப்பல் வாங்கி கொடுத்த வள்ளல் பக்கிர் முஹம்மத் என்று நம்மில் நிறைய பேருக்கு தெரியாது ! வரலாறுகள் மறைக்க பட்டு இருக்கிறது 

கப்பலோட்டிய தமிழனை மக்களுக்கு தெர்யும் கப்பலோட்டிய தமிழன் உதவிய வள்ளல் பக்கிர் முஹம்மத்யை மக்கள் அறிவார்களா ?ஆம் மகாகவி பாரதியார் தனது பத்திரிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்ததில் கிடைத்த நன்கொடை சில நூறு ரூபாய்கள்தான்! ஆனால் வள்ளல் பக்கிர் முஹம்மத் அவர்கள் கப்பலோட்டியத் தமிழன் வ உ சி க்கு பத்து

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

புனே குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாதிகள்

புனே: புனேயில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் மகாராஷ்டிரா அரசு விசாரணை நடத்தும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.
 
புனேயில் அடுத்தடுத்து 4 இடங்களில் நேற்று இரவு குண்டு வெடித்தது. இவை சக்திவாய்ந்தவை இல்லை என்பதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்திருந்தனர். புனே குண்டுவெடிப்பு பற்றி கருத்து தெரிவித்த மத்திய அரசு, தீவிரவாத செயல் இல்லை என்று நேற்று கூறியிருந்தது.

சீனாவில் தனிநாடு கோரி போராட்டம் நடத்திய போராளிகள் 20 பேர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை

சீனாவில் ஸின்ஷியாங் மாகாணம் உள்ளது. இது பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. இங்கு உகியார் பகுதியில் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் தங்களுக்கு உகி யாரை தனி நாடாக பிரித்து சுதந்திரம் வழங்க வேண்டும் என கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதற்காக இன்டர்நெட் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் இங்கு நடந்த குண்டு வெடிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பங்களில் பலர் உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தான்
போராளிகள் உதவி புரிவதாக சீனா குற்றம் சாட்டி வருகிறது.

சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவிகள் செய்ய ஒபாமா ரகசிய ஒப்பந்தம்: அமெரிக்க அதிகாரிகள் ஒப்புதல்

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலக கோரி கிளர்ச்சியாளர்கள் ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு படைகள் நடத்திய தாக்குதலில் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியா மீது பொருளாதார தடை விதிக்கும் தீர்மானத்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்தன. ஐ.நா.,பாதுகாப்பு சபையில் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை சீனாவும், ரஷ்யாவும் ஆதரிக்கவில்லை.

முஸ்லிம்கள் நிறைந்து வாழும் சினேகல் நாட்டில் 10 லட்சம் குழந்தைகள் பட்டினி

ஆப்பிரிக்காவில் மேற்கு பகுதியில் சினேகல் என்ற நாடு உள்ளது. இங்கு வாழும்  மக்களில் 94% பேர் முஸ்லிம்கள் ஆவர். இங்கு சமீபகாலமாக விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் இங்குள்ள மக்களால் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. உணவு பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியாமல் பெரும்பாலும் பட்டினியாக கிடக்கிறார்கள். 

சுமார் 10 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உடல் மெலிந்து நோய்வாய்ப்பட்டு இருப்பதாக ஐ.நா.சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நாட்டில் மட்டும் அல்லாமல் அருகில் உள்ள மாலி, நைஜர், சாட், முரிட்டோனியா ஆகிய நாடுகளில் இதே போன்ற நிலைமை நிலவுகிறது.

தேடுதல்