அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், மே 28, 2012

SDPI-ன் தஞ்சை மாவட்ட புதிய நிர்வாகிகள்

SDPI-ன் தஞ்சை மாவட்ட பொதுக்குழு 27-05-12 அன்று கும்பகோணம் A.M.மஹாலில் மாலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலச்செயலாளர் K.S.இப்ராஹிம் அவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் தஞ்சை மாவட்ட தொகுதி, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதன்படி 


  • மாவட்டத்தலைவர் -இப்ராஹிம் (கும்பகோணம்)

சிரியாவில் இடம்பெறும் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளன - ஐ.நா.

சிரியாவில் இடம்பெறும் தாக்குதல் சம்பவங்கள் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 
ஹொம்ஸ் நகரில் இராணுவத்தினர் நடாத்திய தாக்குதல்களில் 32 சிறுவர்கள் உள்ளிட்ட 90 பேர் கொல்லப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்  பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.நாவின் பணியாளர்கள் இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்துவருகின்றனர்.

ஞாயிறு, மே 27, 2012

"சமூகம் ஒரு பார்வை" கருத்தரங்கம்


Live Video app for Facebook by Ustream

சிரியாவில் இராணுவத் தாக்குதல்: 90 பேர் பலி

சிரியாவில் இராணுவத் தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஒரே நாளில் மட்டும் 90 பேர் பலியாகி உள்ளனர், இதற்கிடையே ரஷ்யாவின் ஆயுத கப்பல் சிரியாவுக்கு விரைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிரியாவில் ஜனாதிபதி ஆசாத்துக்கு எதிராக கடந்த 11 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இராணுவத்தின் ஒடுக்குதல் நடவடிக்கை மற்றும் வன்முறை சம்பவங்களில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளன. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி விட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி உள்ளனர்.

சனி, மே 26, 2012

கூடங்குளம் வழக்குகளை திரும்பப் பெற மே 25ல் SDPI சென்னையில் ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த 6 மாத காலமாக தன்னெழுச்சியோடு போராடி வருகின்றனர்.


உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் அணு உலையை மூடிவரும் நிலையில், உலகம் அணு உலையின் ஆபத்துக்களை கண்டு வரும் இத்தருணத்தில் மக்களின் அச்சம் இயற்கையானதே!


பொதுமக்கள் மாத்திரமின்றி நாடு முழுவதும் முன்னாள் நீதிபதிகள், உயர் பதவி வகித்த அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தளபதிகள், விஞ்ஞானிகள், சமூக, அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என அணு உலைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் அணி திரண்டு வருவது போராட்டக்காரர்களின் கோரிக்கைகளின் நியாயத்தை உணர்த்துகிறது.

தேடுதல்