அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், நவம்பர் 20, 2012

பாலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத் தலைவர் இ. அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனின் விடுதலைக்கு போராடும் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தளபதி அகமது ஜாபரி உள்ளிட்ட 7 பாலஸ்தீனியர்களும் மற்றும் 2 கு
ழந்தைகளும் பலியாகியுள்ளனர். மேலும் பல பாலஸ்தீனியர்களும், சிறு குழந்தைகளும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் இந்த பயங்கரவாத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அடிப்படை மனிதாபிமானக் கொள்கைகளை மீறி இஸ்ரேல் இந்த பயங்கரவாத தாக்குதலை பாலஸ்தீன் மீது தொடுத்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து சர்வதேச நாடுகள் மௌனம் காப்பது மிகவும் வருந்தத்தக்கது.

அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முட்டுகட்டை: கர்நாடக ஆளும் பா.ஜ.க அரசு மீது பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு

கர்நாடக மாநிலத்தில் "பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா"வின் நிகழ்ச்சிக்கு இடையூறுகளை ஏற்படுத்திய போலீசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் ரூ 50,000அபராதம் விதித்ததாக கர்நாடக மாநில தலைவர் "இல்யாஸ் தும்பே" தெரிவித்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? என்ற தலைப்பில், நேற்றுமுன்தினம் மைசூரில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவ்வியக்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீப்,

ஞாயிறு, நவம்பர் 11, 2012

சுதந்திர போராட்ட வீரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் !!!!

அபுல் கலாம் ஆசாத் 1888-1958
மௌலான அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவம்பர் 11 ஆம் தேதி தேச கல்வி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றார். 

திங்கள், அக்டோபர் 22, 2012

"நீதிக்கான முழக்கம்" கோவை மண்டல மாநாடு

குறிவைக்கப்படும் முஸ்லிம்கள், நீதிக்கான முழக்கம் கோவை மண்டல மாநாடு நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 15 நாட்களில் அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் மாநாடு நேற்று கலை 10:30 மணியளவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் மாநிலத் தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் கோடியேற்றி வைக்க இனிதே துவங்கியது.

சனி, அக்டோபர் 20, 2012

பிடிக்காதவர்களை ஒடுக்கத்தான் ரெளடிகள் பட்டியலா? நீதிபதி ஆவேசம்

காவல் துறை நினைத்தால், ஒருவரை எப்படி வேண்டுமானாலும் பழிவாங் கலாம் என்பதற்கு ஒரு உதாரணம் வேடியப்பன் வழக்கு.  

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் வேடியப்பன். அரூர் அரசு மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் சேவைக்கு 2,000 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக அவரிடம் சிலர் புகார் சொன்னதை வைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை அரூர் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாகப் பேச அவரை வரச்சொல்ல... அந்த சந்திப்பில் மோதல் நடந்துள்ளது.

தேடுதல்